தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக வெங்கட்பிரபு
இரண்டே படங்கள் இயக்கினாலும் தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக பெயர் எடுத்து விட்டார் இயக்குனர் வெங்கட்பிரபு.
சென்னை-28 என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் வெங்கட்பிரபு. அடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா என்ற படமும் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. வெளியான எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார் வெங்கட்பிரபு.
அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அடுத்த படத்திற்காக அணுகியுள்ளதாம். முதலில் வார்னர் பிரதர்ஸ் சவுந்தர்யாவின் ஆக்கர்ஸ் பிலிம்சுடன் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் வெங்கட்பிரபு. அதற்கடுத்த படங்களை தங்களுக்கு இயக்கித் தருமாறு தயாரிப்பாளர்கள் வெங்கட்பிரபுவை மொய்த்து வருகிறார்களாம்.
குறிப்பிட்ட பணத்திற்குள் படத்தை முடிப்பது, வீண் பில்டப்புகள் இல்லாதது போன்றவற்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்களின் சாய்ஸாகவும் மாறிவிட்டார் வெங்கட்பிரபு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|