அடிதடி பட வாய்ப்புகளே வருகின்றன - பரத்
நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கத்தான் காத்திருக்கிறேன். ஆனால் அடிதடிப் படங்களில் நடிக்கத்தான் வாய்ப்பு வருகிறது என நடிகர் பரத் தெரிவித்தார்.
பாட்ஷா, பாபா படங்களை இயக்கியவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்தை வைத்து ஆறுமுகம் என்ற படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பழனி, நேபாளி போன்ற சமீபத்திய ஆக்ஷன் படங்கள் சரியாக ஓடாத நிலையில் மீண்டும் அதே வகை படங்களில் நடிப்பது ஏன்? பரத்திடம் கேட்டபோது,
நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கத்தான் நானும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தொடர்ச்சியாக அடிதடிப் படங்களில் நடிக்கத்தான் வாய்ப்பு வருகிறது. ஆறுமுகம் வெறும் அதிரடிப் படம் மட்டுமல்ல, நல்ல கதையம்சமுள்ள படமும் கூட, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பரத் தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|