Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruBank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

சம்புகர்கள் நிலம்
ஆதி

அன்புள்ள இஸ்மாயிலுக்கு,

இந்தக் கடிதம் உன்னிடம் வந்து சேர்வதற்குள் இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ? இரண்டு பகுதிகளை இணைக்கின்ற ஒன்றினை பாலம் என்கிறோம். இராமர் பாலமோ மனிதர்களை இருவேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறது. ஆச்சரியம் இத்தோடு நின்றுவிடவில்லை. பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. பிணங்களின் கருகிய வாசம் ஒவ்வொருவரின் மனசாட்சிகளிலும் அலைபாய்கின்றன.

கொடுமைகள் இத்தோடு முடிந்துவிடுவதில்லை. வார்த்தைகள் ஆயுதங்களாக பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதங்களில் ஒட்டிக் கிடக்கும் மனிதர்களின் இரத்தப் பிசுபிசுப்பில் மரணங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் இன்னும் எத்தனை பிணங்களால் நிறையுமோ பலிபீடங்கள் யாருக்கும் தெரியும்?

பெங்களூருக்கருகில் எரிந்து கருகிய பேருந்து தெரிந்த தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகள் மாறிவிட்டன. யுவராஜ் சிங்கின் ‘சிக்சர்களும்' தோனியின் முடிக்கற்றைகளும் பழைய பிம்பங்களை மறக்கடித்து விடுகின்றன. கலவரங்களால் நிகழும் உயிர்ப்பலிகள் ஒருவரி அஞ்சலியாக சுருங்கிப் போய் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத செய்தி வாசிப்பாளர்களின் வார்த்தைகளில் சிக்கி விளம்பரங்களுக்கு நடுவில் ஆத்மா சாந்தியடையாமல் அலைபாய்கின்றன.

‘ராமர் என்ன என்ஜீனியரா? வால்மீகி சொன்னதுபோல் ராமர் சோமபானம் அருந்தினார் என்றா சொல்லிவிட்டேன்?'

‘அப்படியானால் கல்லணை கட்டிய கரிகால்வளவன் மட்டும் என்ன என்ஜீனியரா?'

‘ராமரைப் பற்றிச் சொன்னவரின் தலையையும் நாக்கையும் அறுத்துக் கொண்டுவருவருக்கு, எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும்.'

அன்பைப் பேசுவதான கடவுளின் பெயரால் ஆயுதங்களைப் போலவே நாக்குகள் வார்த்தைகளை வாளைப் போல் வெட்டி வீசுகின்றன. காதுகள் கூசுகின்றன. வேதம் படித்ததற்காகத் தலை துண்டிக்கப்பட்ட சம்புகர்கள் நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமான இராமர் பாலமோ சேதுக்கால்வாய்க்கு வழி விடாமல் எந்த சீதையின் வரவுக்காகக் காத்திருக்கிறதோ, தெரியவில்லை. நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்ட கடலுக்கடியில் தெரியும் நீண்ட மணல் திட்டு ஆதம் பாலமா? இராமர் பாலமா? காற்றோட்டத்திலும், நீர் - எதிர் நீர் திசைப்போக்கிலும் நிலத்தட்டுக்களின் அசைவுகளாலும் இயற்கையாகவே திரண்ட மணல் மேடா? இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டு வருவதற்காக இராமர் கட்டிய பாலமா? வானரங்கள், எடுத்துப்போட்ட கற்குவியல்கள் அங்கிருக்குமா? அணில் சுமந்த மணல் துகள்கள் அதிலிருக்குமா?

‘பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமாவதாரம் கட்டிய பாலம் என்று இதிகாசங்கள் சொல்கின்றன. இது இறை நம்பிக்கை சார்ந்தது. இதிலென்ன கேள்வி?' - இப்படி ஒரு சிலர்.

‘தற்போதுள்ள மனித இனச் சுவடுகளின் வழியே சென்று பார்த்தால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரினமே இல்லை. குரங்குகள் கூட தோன்றியிருக்காத ஒரு காலகட்டம். அப்படியென்றால் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பாலம் கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக நம்பமுடியாது' - இப்படி ஒரு சிலர்.

எதை நம்புவது? எதை நம்புகிறோமோ இல்லையோ எது சரியானது என்று காலம் காட்டிவிடும்.

சூரியன் பூமியைச் சுற்றிவருகிறது என்று தாலமியின் கண்டுபிடிப்பில் நம்பிக்கை வைத்திருந்த போது சூரியன்தான் மையம். பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று சொன்ன கோபர் நிகஸ்ஸின் வார்த்தைகளைச் சீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போனது உலகம். ஆனால் கடைசியில் கோபர் நிகஸை உலகம் சுற்றிவந்தது.

பூமி தட்டையானது என்று பைபிள் குறிப்பிட்டது. பூமி உருண்டையானது என்று டெலஸ்கோப்பை வைத்துக் காட்டிய கலிலியோவை பைத்தியக்காரன் என்று பழித்தது. சிறையிலடைத்தது. ஆனால் கலிலியோவை என்ன செய்தாலும் கடைசிவரை பூமி தட்டையாக மாறவேயில்லை. எந்தக் கட்சியால் முதலில் தொடங்கப்பட்டதோ அதே கட்சியால் எதிர்க்கப்படுகிறது ஒரு திட்டம். ஜனநாயகத்தின் சக்தியைப் பார்த்தாயா நண்பனே.

464 கடல் கிலோ மீட்டர்கள் வீண் பயணத்தைக் குறைக்கவும், 36 மணி நேர விரயத்தை மிச்சம் பண்ணவும் தீட்டப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமர் பாலம் வழி மறிக்கிறது. வேறு எந்தப் பாதையில் கால்வாய் வெட்டினாலும் சுற்றுச்சூழலுக்கு அதிகக் கேடுகள்தான் என்று சொல்கிற வல்லுனர்களின் ஆய்வுகள் கடலுக்கடியில் கொட்டப்படுகின்றன.

வெறும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருந்து தரவுகள் தயாரிக்க முடியாத தொல்லியல் துறை வரலாற்று பூர்வமான அடிப்படையில் இராமர் பாலம் என்பது இல்லை - ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடையாது என்று நீதிமன்றத்தில் அரசுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தயாரித்தது குற்றம் என்றால் கோபர் நிகஸ் சொன்னது குற்றம். கலிலியோவின் கண்டுபிடிப்பு குற்றம்.

இதயங்களில் பாலங்களை இடித்துத் தகர்த்துவிட்டு இந்திய சமுத்திரத்தில் எந்த பாலத்தை இவர்கள் காப்பாற்றப் போகிறார்கள்? மசூதி இருந்த இடத்தை இராம ஜென்மபூமி என்பதும், மணல் திட்டை இராமர் பாலம் என்பதும் அரசியலுக்கு எதிரான ஆன்மீக விளையாட்டு. எந்த நேரத்திலும் ‘ராம் ராம்' என்று சொல்லும் ராம பக்தர்கள்தான் இதற்கு பலியாகப் போகிறார்கள்.

இவர்களது நம்பிக்கைப்படியே, இராமர் அன்று கால்நடையாக வந்தார். கடக்கப் பாலம் தேவைப்பட்டது. இன்று வந்தால் கப்பலோடு தான் வருவார். கடக்க கால்வாய் தேவைப்படலாம். நீ என்ன நினைக்கிறாய் நண்பா?

இப்படிக்கு
விஜய்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
கேணையன்
2007-12-04 07:02:00
muzumuttaal@yahoo.co.in

அன்புள்ள விஜய்,

தமிழகம், மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு திட்டததையும், நல்ல மனம் படைத்த பண்பாளர்கள் வரவேற்கவே செய்வார்கள்! ஆனால் உண்மையிலேயே இந்த சேது கால்வாயினால் தமிழர்களுக்கோ, இந்தியருக்கோ,தூத்துக்குடிக்கோ ஏதாவது பலன் இருக்கிறதா? இரண்டு பெரிய கடல் பகுதிகள் ஒரு சிறிய நிலப்பரப்பினால் பிரிந்து இருந்தால், கால்வாயினை வெட்டி அவற்றை ஒன்று சேர்த்து, கப்பல் போக்கு வரதுக்கு வழி செய்வது மற்ற இடங்களிலும் நடை பெற்று உள்ளது! உதாரணமாக கி பி 1914 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடைய கப்பல்கள் முழு தென் அமெரிக்கா கண்டத்தையும் சுற்றி கேப் ஹோர்ன் முனை வழியாக 22,500 கி. மீ. வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது! வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு நடுவில் பநாமா கால்வாய் வெட்டப் பட்டதால், பயண தூரம் 13,000 கி.மீ. குறைந்தது! இப்போது கப்பல்கள் 9,500 கி.மீ. பயணம் செய்தால் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடையலாம்! அதைப் போல, மத்திய தரை கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஸூயெஸ் கால்வாய் கட்டப் பட்டதால் 20,000 கிலோ மீடர் கால் பயணம் மீட்ச்ம் ஆனது- இல்லையெனில் ஐரோப்பியாவிலிருந்து ஆசியா வர முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றி வர வேண்டும்- வாஸ்கொடகாமவைப் போல! இந்த பின்னணியில் நம்முடைய சேது கால்வாய் திட்டத்தின் சாதகங்களை ஆறாய்வோமா? மற்ற கால்வாய்கள் எல்லாம் 13,000 கி.மீ பயண மிச்சம் தரும் போது, சேது கால்வாய் வெறும் 650 கி.மீ. மட்டுமே பயண தூரத்தைக் குறைக்கிறது! மேலும் கால்வாய் வழியே பயணம் செய்வது , பெருங் கடலில் பயணம் செய்வதை விட அதிக ரிஸ்க் ஆனதும், கடினம் ஆனதும் ஆகும்! எனவே மாலுமிகள் வெறும் 650 கி. மீ. மிச்சம் செய்ய,ஆழ்கடலில் பயணம் செய்வதை விடுத்து, குறுகிய சந்து போன்ற கால்வாய் வழியாக செல்ல விரும்புவார்களா? இது சம்பந்தமாக சர்வதேச மாலுமிகளிடம் கருத்து கேட்டுப் பெறப்பட்டதா? வெறுமனே கால்வாயை வெட்டி விட்டு உட்கார்ந்தால் போதுமா? ஒரு நாளில் எத்தனை கப்பல் கள் இந்த கால்வாய் வழியே செல்லப் போகின்றன? 3000 கோடி செலவு என்றால், ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 360 கோடி வருமானம் ஆவது வர வேண்டாமா? அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வர வேண்டும்! அதற்க்கு ஒரு நாளைக்கு 10க்கும் மேர்ப்பட்ட கப்பல்கள் செல்ல வேண்டும்! ஒரு மாதத்திற்காவது, 10 கப்பல்கள் செல்லுமா? தேசிய சரக்குப் போக்குவரதது சாலைகள் மற்றும் இருப்பு பாதைகளை உபயோகப்படுத்துகிறதா?
அல்லது கடல் வழி போக்குவரத்தை நம்பி இருக்கிறதா? மும்பை நகரில் இருந்து, சென்னைக்கு சரக்கு அனுப்ப வியாபாரிகள் சாலைகளை உபயோகிப்பார்களா? கப்பலை உபயோகிப்பார்களா? சர்வதேச போக்குவரத்தை ஆராய்ந்தால், இன்றைய தினம் உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து எங்கே நடக்கிறது? உலகின் முன்னணி உற்ப்பத்தி கேந்திரங்கலான, ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா இந்த நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மேற்கு திசையில் உள்ள ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்ா, இவற்றுக்கு செல்ல வேண்டும்! இதற்கான கடல் வழி என்ன?
மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய
நாடுகளில் இருந்து வரும் கப்பல்களுக்கு, இந்த சந்து கால்வாய்க்குல், புகுந்துசெல்ல வேண்டிய அளவுக்கு பயண நேரமும், தூரமும் வித்தியாசம் இல்லை! ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா நாடுகளில் இருந்து புறப்படும் கப்பல்கள், நிகொபார்
தீவுகளுக்கும், இந்தோணேசியவிற்க்கும் இடையே உள்ள கடல் பகுதி வழியே இந்தியப் பெருங்கடல்
பகுதிக்கு வருகின்றன! அங்கிருந்து அரபி கடல் பகுதி செல்ல, ஸ்ரீலங்கா வின் தென் முனை வழி யாக செல்வது கிட்டத்தட்ட ஒரு கிடை மட்ட நேர்கோடு (Horizontal straight line)வழியாகும்! அதை விட்டு விட்டு, கப்பல் தலைவர்கள், மேல் நோக்கி வங்காள விரிகுடா வந்து, யாழ்ப்பாண தீபகற்பத்தை சுற்றிக் கொண்டு, சேது கால்வாயில் நுழைந்து, இந்திய தீபகற்பத்தின் தென் முனை ஐயும் சுற்றி கொண்டு அரபிக் கடலில் நுழையும் வழியில் (circutous and inconvenient route) வர வேண்டிய
அவசியம் என்ன? இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் கூட சேது கால்வாய் அவர்களுக்கு உபயோகப் படுமா? எனவே மிக முக்கியமாக மாலுமிகளிடம் கருத்து கேட்காமல், பூகோள காரணங்களை நோக்காமல், நமக்கு பெயர் வர வேண்டும் என செயலில் ஈடுபடலாமா? ஏற்கனேவே வாழப்பாடியார் சிரமப் பட்டு, சேலம் நகருக்கு விமான நிலயம் கொன்டு வந்தார்! விமானங்களும் இயக்கப் பட்டன! ஆனால் யாரும் விமானப் பயணம் மேற்கோள்ளவில்லை! ஒரு வருடம் பார்த்தது விட்டு மூடி விட்டனர்! விமான நிலயத்தில் மாடுகள் மேய்கின்றன! அதைப் போல 4000 கோடி கொட்டி வெட்டியாக கால்வாய் வெட்ட வேண்டுமா? எனவே தமிழர்களுக்கோ, இந்தியருக்கோ எந்த உபயோகமும் இல்லாத இந்த வெட்டி திட்டத் தில், 4000 கோடி ரூபாயை விரயம் செய்வதை விட, அதே 4000 கோடி ரூபாயை முதலீடு செய்து, சாத்தான் குளத்தில் அரசே டைட்டானியம் ஆலை தொடங்கினாள், எத்தனை தமிழர் வாழ்வு மலரும்? தென் தமிழகம் பெரிய வளர்ச்சி அடையுமே! ஏக்கருக்கு 50,000 ரூபாய் என்று அடி மாட்டு விலைக்கு தனியாருக்கு விற்க தரகு வேலை பார்ப்பதை தானே மக்கள் எதிர்த்தார்கள்! ஏக்கருக்கு 3 லட்சம் என்று மக்களிடம் நிலம் வாங்கி அரசே ஆலை ஆரம்பித்தால்
மக்கள் வரவேற்க மாட்டார்களா? விலக்கமாற்றுக்கு பட்டுக் குஞ்சலம் கட்டிய போல, தண்டக் காளவாய்க்கு சப்பைக் கட்டு கட்டுவது ஏதற்க்காக?

இப்படிக்கு

கேணையன்




Kannan
2007-12-05 12:08:00
thangakannan@hotmail.com

Mika Arumaiyana Katurai.

Rajamanikandan
2007-12-08 03:06:00
rajamanikandan.agri@gmail.com

I have read the article. And the comment from Mr.Kenayan. I agree with his comment. Such type of real analysis is the actual need of the hour. All social and economical national issues are treated here emotionally. This will not yield any positive results.
But we cannot expect such facts from our bloody politicians. I dont feel sorry to spell the word "bloody".
I convey my regards to Mr.Kenayan.

muniasamy.m
2007-12-13 01:02:00
muniasamy241983@yahoo.co.in

entha katturai mega nalla katturai ovvoruvarum patigavantia katturai



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP