த.ராகவி கவிதை
எங்களைச்
செடியில் வைத்தாலென்ன?
குடுவையில் வைத்தாலென்ன?
நிச்சயிக்கப்பட்ட
நேரம் வரை
மலர்ச்சியாகவே தோற்றமளிக்க
வேண்டியவர்கள் நாங்கள்
பிரிவோம் என்று
தெரிந்த பின்னும்
பெற்றெடுக்கின்றன செடிகள்
பறிப்போம் என்றே
தினமும்
புதுமலரை நாடும்
கைகள் -
மறுக்க முடியாத நிலையில்
நாங்கள்...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|