ஆறுதல் வடுவூர் சிவ.முரளி
அப்பாவின் சம்பளம்
அவர் குடிக்கே இரையாகும்
அம்மாவின் கூலிதான்
அரைவயிற்றுப் பசியாற்றும்
இதற்கு நடுவே
எனது படிப்புக்கு
யாரை எதிர் பார்ப்பேன்?
ஆறாம் வகுப்பில் சேர
அண்ணனுக்காக காத்திருக்கேன்.
வெளியூரிலிருந்து அவன்
விடுப்பெடுத்து வரும் போது
வீட்டில் அடுப்பெரியும்
கொஞ்சம் பணமும்
நிறைய அன்பும் கொண்டுவருவான்
எனக்குப் பாவாடை சட்டையும் தான்
கண்ணீரைத் துடைத்தெறிந்து
கன்னத்தில் முத்த மிட்டுக்
கஷ்டத்தை நினையாதே
என்றொரு ஆறுதலும் தருபவனாய்
எப்போதும்
அவனிருப்பான்
படிக்கிற வயசில்
பட்டணத்து ஒட்டலில்
பாத்திரங்கள் தேய்த்துத்
தானும் தேய்வானே
அவனை அணைத்துக்கொண்டு
ஆறுதல் தருவார் யார்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|