மலக்கிடங்கில் மடியும் மழலைகள் செந்தில்பாலா
கனத்த நீர் சுமந்து
பெருங்குடமாய் உப்பி
நீண்டுக்கிடந்தன
முனை சிறுத்த பலூன்கள்,
அடைப்பெருத்த
மலம் விழுங்கும் குழாய்க்குள்
சேர்ந்தும் சேராமல்
குறியில் உறை.
கிரிவலம் வர யத்தினித்த
பொழுதொன்றில் பார்க்க நேர்ந்தது
நடப்போரற்ற வீதியொன்றின்
பழுத்த குழலொளியில்
பெருத்த பலவித பலூன் குவியலை.
தெரித்து உரசி
வழியவிட்டோடும்
அப்பன்கள் கொலையுண்டு
அனாதையாய் ஒழுகும்
உயிர்கள் சுவரில் பிணவறையாக
கட்டண கழிப்பறை மலங்கழிக்கையில்
ஏளனமாய் சிரிக்கின்றனர்
சுவரில் புணர்ந்தபடியே பலரும்
பளபளப்பு பலவித வாகனங்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தொழிற்சாலைகள்
நெரிசல் இரைச்சல் வண்ணப் பெண்கள்
காட்சி பொருட்கள் பணப்புழக்கம்
பலருக்கும் பிழைப்பு
கற்புக்காக்க பாதுகாப்பாக
மலக்கிடங்குகளில் மடியும் மழலைகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|