லிமரைக்கூ பொன்.குமார்
குடும்பத் தலைவர் மரணம்
பிள்ளைகளுக்கு வந்து விட்டது
பொறுப்பேற்கும் தருணம்.
குழந்தைக்கு விடுமுறை
எப்போதும் உழைக்கும் அம்மாவிற்கு
எந்நாளுமில்லை ஒருமுறை
வியர்வைச் சிந்தி உழுதான்
விளைந்த பயிர் வாடியது கண்டு
கண்ணீர் விட்டு அழுதான்.
காட்டில் குயில் பாடியது
கேட்டு மயங்கி மயில்லொன்று
தன்னை மறந்து ஆடியது.
கூட்டை விட்டு வெளியே
பறந்து சென்றுத் இரையைத் தேடிடும்
இறகு முளைத்த கிளியே
துக்கம் விசாரிக்கப் போனான்
இழவு வீட்டை அடையு முன்னே
விபத்தில் பலி ஆனான்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|