தோட்டக்காரன் புதிய மாதவி
எப்போதாவது தோட்டக்காரன்
எப்போதும் எதிர்பார்க்கிறான்
பூத்துக்குலுங்கும் பூக்களை
காத்திருப்பில்
கருகிப்போனது இலைகள் மட்டுமல்ல
வேர்களும்தான்
ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது
எப்போதோ விழுந்த விதை
இப்போது பட்ட ஈரத்தில்
துளிர்க்கலாம்
************
எத்தனை யுகங்கள் காத்திருக்கிறது
உன் மடியில என் விதைகள்
பசிக்கும்போது அவித்து சாப்பிடுவாய்
என்ற நம்பிக்கையில் முளைவிட மறந்து
முடங்கிக் கிடக்கிறது
************
ஓரு புயல் வெள்ளத்தில் சரிந்து போன
தோட்டத்தை சரிசெய்யும் பணியில்
தோண்டத் தோண்ட
மனிதர்களின் அழுகிய பிணவாடை..
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|