புலரி
பாட்டாளி
என்றுமில்லாத
அதிசயமாய்
சூரியனும் சந்திரனும்
எதிர் எதிராய்
ஒரே நேரத்தில்.
வலிய
ஒளிக்கு முன்
குளிரிழந்து
வெளிறிப் போன நிலவு.
முள்
செடியிலிருந்து
தலை நீட்டும்
பச்சைப் பாம்பு.
வெள்ளையும்
சிவப்புமாய்
பசிய இலைகளினூடே
குப்பென மலர்ந்து கிடக்கும்
காகிதப் பூக்கள்
தூரத்துப்
பெருமாள் கோவிலிருந்து
கசிந்து
வழிகிறது சுப்ரபாதம்.
வியாதிக்கோ
உடல் பேணுதற்கோ
டி-சர்ட்டும்
மெலிதான ஷீவுமாய்
ஜாக்கிங் போகும்
ஐந்தாறு தொப்பைகள்.
எவன் வீட்டு
அடைப்பிற்கோ
சுத்தம் செய்ய
இரும்புக் கம்பியோடு நான்
புலர் காலையோ
பொன் மாலையோ
நாற்றத்தோடுதான்
நாற்றத்தோடுதான் வாழ்க்கை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|