லிமரைக்கூ சு. கணேஷ் குமார்
கவிஞனுக்கு கிடைக்கும் - தனிமை
அப்போது பிறந்திடும் நல் கவிதைகள்
சேர்க்கும் இலக்கியத்தில் - இனிமை !
பெண்கள் பிரசவிக்கும் - புன்னகை
வரதட்சனை கேட்டு மன்றாடும் இளைஞர்களே
அதற்கு ஈடாகுமா - பொன்னகை!
பூவில் தேனுறிஞ்சும் - வண்டு
கவலை கொண்ட மகை சாந்தமாகும்
அழகிய அக்காட்சி - கண்டு !
வழக்கறிஞர்ளின் வார்த்தை - வீச்சு
நீதிபதி முன்னே எடுபடாது போகிறது
நிரபராதியின் உண்மைபேச்சு !
மனைவியை இழந்தவனுக்கு - தருணம்
ஏற்கும் சமூகம் விடாப்படியாய் மறுப்பதேன்
விதவைக்கு நடத்த - மறுமணம் !
பாமரனையும் கவர்வதே - இலக்கியம்
யாருக்குமே புரியாமல் எழுதிடும் சிலர்
கெடுக்கின்றனர் அதன் - மகத்துவம் !
கலவரங்கள் அதிகரித்து – பூமி
எது நடந்தால் தமக்கென்ன மௌனமாய்
குறை தீர்க்கும் - சாமி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|