தலையங்கம்
ருசி பல வென்றுணர் - பாரதி
அணியின் முதலிதழ் குறித்து தடம் பதித்த மூத்தப் படைப்பாளிகள் தொடங்கி வளரும் கவிஞர்கள் வரையிலான, ஆதரவும், விமர்சனங்களும், ஆலோசனைகளும் மிக்க மகிழ்வைத் தருகின்றன. இந்த ஆதரவு, உற்சாகத்தோடு அணியைத் தொடர்ந்து இயங்க உத்வேகப் படுத்தும்.
‘அணி'யின் Logo எழுத்து குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டோம். ‘ஹிந்தி பேசும் பகுதியிலிருந்த வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ்' என்பதன் குறியீடு மற்றுமின்றி கொஞ்சம் வித்யாசம் இருக்கட்டுமே என்கிற Creative ஆவலும் காரணம். தமிழ் அழியாமல் காக்கப் பலரும் கடுமையான பக்தியுடன் இருப்பதைப் பார்க்கிறபோது ‘தேன் வந்து பாயுது காதினிலே!'.
கவிஞர் சிற்பி விருது பெரும் கவிஞர்கள் வ.ஐ.ச ஜெயபாலன், புதியமாதவி, கடற்கரய் மூவர்க்கும் ‘அணி' யின் வாழ்த்துக்கள்.
மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி', உவமைக் கவிஞர் ‘சுரதா' ஆகிய மூத்த படைப்பாளிகளுக்கு மறைவுக்கு அணியின் அஞ்சலி.
சில, பல நண்பர்கள் எங்களைப் புரிந்து இயன்ற நன்கொடை வழங்கியதில் மகிழ்ச்சி ஆனாலும் நெருடலாக இருப்பது ஒரு விஷயம். ஒருவர் 2 மாதங்களுக்கொரு முறை 50ரூபாய் நன்கொடை செலவு செய்து 57 பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு அளிக்கலாம் தானே! ஒரு தேநீர் 5 ரூபாய்... ஒரு சிகரெட். குறைந்தபட்சம் 2.75 ரூபாய். ஒரு ஸ்டிக்கர் பொட்டு அட்டை 3 ரூபாய் தமிழ்க் கூறும் நல்லுலகின் மீது நம்பிக்கை வைத்துதான் நன்கொடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தினோம். வேறு வழியின்றி ‘செக்கு மாட்டுத் தனமாக' ஆண்டுச் சந்தா நிர்ணயிக்கப்படுகிறது. நன்கொடை வழங்கியவர்களின் தொகை ஆண்டுச் சந்தா கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
பணவிடை (M.O) யில் பெயர் குறிப்பிடாத நண்பர் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு - முகவரி தந்து உதவ வேண்டுகிறோம். தொடர்ந்து கவிதைகளில் வித்யாசமான, புதுமையான, படைப்புகளுக்கு சோதனை முயற்சிகளுக்கும் ‘அணி' ஆதரவாய் இருக்கும்.
அன்புடன்,
அன்பாதவன் (09869481106)
மதியழகன் சுப்பையா.(09821847464)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|