மோக நதி ஞா. விஜயகுமாரி
நான் பேச ஆரம்பித்தக் காலம் இதுதான்
வாழ்வின் நினைவுகளைக் கலைத்துவிட்டு
என்னையே மறந்து இறங்கிய நதியில்
என்மேல் மோகம் கொள்ளும்
பருவமாகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
சந்திக்கும் வேலையில்
மரணம் சம்பவிக்கும் அவனது உறவினர்
அடிமனதில் மூச்சுத் திணறுகிறேன்
எல்லா காதலைப் போல் நம்காதலல்ல
எதுவும் தவறில்லை
இரவில் கனவிலிருந்து என்னை இழுத்து சொல்லியது
காலம் என்னை வாட்டுகிறது
இளமை பருவம் உடலை பசித்து பார்த்தது
அவன் பரிசளித்தது மயானம்
எங்கே ஒருவன் வந்து அமர எனது விழிகள்
கலங்கிய நிலை
நான் என்ன செய்துவிடமுடியும்
இது என்ன புத்தகமா
எடுத்து எடுத்து பார்ப்பதற்கு
அவன் எனக்கு கொடுத்த முத்தங்கள்
சுழன்று உதிர்ந்து உலாவருகின்றன நினைவில்
இனி பேச எதுவும் இல்லை
நான் அவனை விட்டு வெளியேறினேன்
பறக்க முயன்றேன்
என பருவம் தள்ளியது
வருடாத இதயம் ....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|