மத்தளத்தின் மறுப்பக்கம் நா. சுப்புலட்சுமி
கள்ளிப்பால் கதை கேளா
ஐந்தாறு பெண்மலர்கள் ஆனாலும்
ஆளுக்காள் ஆதரவாய் அருமையாய்
கதம்பமென வளர்ந்ததொரு வசந்தம்
காடு மலை ரசித்துலாவி
காணாத தேசம் வந்து
பார்த்து பார்த்து கட்டி வச்ச
பளிங்கு மாளிகை ஒண்ணு
ஒத்த பிள்ளை பெற்றுவிட்டால்
ஓகோனு வாழ்ந்திடலாம். அதுவும்
பெற்றதுதான் பெற்றதிங்கே
பெண்ணாக இருந்திருந்தால்
அம்மானு அரவணைத்து, ஆறுதலாய்
அழாதேனு கூட அழும்.
புத்திரன் இல்லையென்றால்
மேலோக நரகமென்று
யாரோ சொன்தை நம்பி
பெற்றுவிட்ட புத்திரனோ...
நிலவைக் காட்டி காட்டி
சோறுட்டி வளர்த்ததினால்
நிலவையே கொண்டு வந்து
நடுவீட்டில் வைக்கச் சொல்லி
நித்தம் நித்தம் காட்டுறானே
பூலோக நரகத்தையே ....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|