உங்கள் கவனத்திற்கு ... சக்தி அருளானந்தம்
1 பொய்க்காத பருவ மழை
இடைவிடாத அடைமழையாய்
சாக்கடையாய் உருமாறிய ஆற்றில்
கரையடங்கா பெரு வெள்ளம்
கெக்கலித்து எக்காளமிட்டு கழிவுகளுடன்
ஓடுவதை
கால் நனைக்க முடியா துயருடன்
கண்டு நிற்கும் நம் குழந்தைகளை
கவனிக்காமல் கடக்கிறோம்.
நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு
நீயும் நானும்
தன்னுள் மூழ்கித் திளைத்து
முக்குளித்த நாட்களை கூறி அழுததை
கவனிக்காமல் கடந்ததைப் போலவே
2 பௌர்ணமி நாளொன்றில்
நான் நடக்க
உடன் வந்தன நிலவும் நிழலும்
வீட்டிற்குள் நுழைந்தேன்
நிழலுடன்
வெளியில் நிலா தேம்பியபடி
விடியற்காலை
வாசல் தெளித்தபடி வானம் பார்த்தேன்
வெடுக்கென முகம் மறைத்துக் கொண்டது
முகிலெடுத்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|