நகர விலங்கு தி. பரமேஸ்வரி
எப்போதும் பசியோடே
காத்திருக்கிறது நகரம்
இரையாவதற்கென்றே
வந்திறங்கிக் கொண்டிருக்கின்றனர்
சிலர் நகர விலங்குகளோடு
பரிச்சயப்பட்டும்
ஏமாற்றும் பாசாங்கோடும்
இயங்கிக் கொண்டிருக்க
வெகு சிலர் மட்டும்
கையில் வாளோடு எதிர்நிற்க
எதுபற்றியும் கவலையின்றி
தன் வசீகர வலையைப்
பின்னிக் கொண்டேயிருக்கிறது
நகர விலங்கு !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|