நான் பெண் திருமதி. மு. நளினி
ஒரு புவனமாய்
புகலிடமாய்
சிருஷ்யாய்
சிகரமாய்
விசாலப்பட முடியும் என்னால்....
ஒரு பிரளயமாய்
பெருங்காற்றாய்
ஆழிப் பேரலையாய்
பூகம்பமாய்
எதிர்த்து நிற்க முடியும் என்னால்...
நான் பெண்
நீ பூட்டிய பொன்விலங்கை
பூஜிக்கமுடியாது என்னால்
நீ ஆற்றிய புகழுரையை
ஆதரிக்க முடியாது
காலப் பெருவழியில்
உன் சக பயணி நான்
நீ வண்டாய் ரீங்கரிக்க
என்னைப் பூவாய்க்
கசக்கி எறிவதை
பொறுத்துக் கொள்வதற்கில்லை இனியும்
நான் பிறப்பின் மகத்துவம்
பிரம்மன் பிடிக்கும் சிக்காமல்
சிருஷ்டிக்கத் தெரிந்தவள்
என்னை நானே
என் பாதங்களுக்கு.... தெரியும்
பாதையைத் தேர்ந்துகொள்ள
ஒரு சகாவாய் உடன்வா
இன்றேல்... ஒதுங்கி நில்
ஆக்கிரமித்தால் அடங்கிப் போக
பூ இல்லை
மயில் இல்லை
மான் இல்லை
கொடி இல்லை
நான் பெண்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|