வதந்தியின் நிமித்தம் பூமா சரஸ்வதி
தூரல் ஓய்ந்தவுடன்
இலைகள் தாங்கியிருக்கும்
மழை மொட்டினை
உதிர்ப்பதற்காகத் திரண்டு வரும்
அஞ்சாமடை வாண்டுகள் சிலவும் ....
காளை மாடுகளின் களைப்பு நீக்க
இரண்டடி நீளக்கயிற்றில்
என்னில் பிணைத்துப்போக
பேரனோடு வரும் ஆணிமுத்துவும் ....
என்னிலிருந்து காயாய், பழமாய்
உதிரும் மாம்பிஞ்சுகளைப்
பொறுக்கிப் போகும் பாப்புச் சிறுக்கியும் ....
நாளைமுதல் வரப்போவதில்லை ...
தனியே வயலில்
உழுதபடியிருந்த
முனியசாமி
நெஞ்சைப் பிடித்து
என்னடியில் சாய்ந்தபடி
உயிர் விட
பேயடித்துக் கொன்றதாகப்
பரவிய வதந்தியின் நிமித்தம் !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|