பாரதி கிருஷ்ணன் கவிதைகள்
உயிர் வயலில்
களையெடுக்கப்
படையெடுக்கும்
உனது கண்களை
இமைப் பாசறையில்
இளைப்பாறச் செய்ய...
உள்ள மண்ணில்
விதையைத் தூவுகிற
உனது புன்கையை
விடுப்பெடுக்கச் செய்ய...
எண்ண அலைகளில்
எழுந்தடங்கி
தழுவும் நினைவுகளை
நிமிடத்திலேனும்
ஒத்தி வைக்க...
எதையும் சொல்லத்
துணிவில்லை
இவ்வுயிர்வலி உனக்கானதாயும்
உள்ள போதில்
என் வலி நீக்கயாய்
எழுத்தில் பதிவு செய்கிறேன் ...
நீயென்ன செய்வாய்
வலியினை நேசிப்பதை விடுத்து !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|