தனிமையிலொரு எரிமலை அஞ்சுகம்மகள்
மரக்கிளையில் குயில்
கூவியது
பிணைதலுக்கான குரலில்
வாசலில் அமர்ந்து நெரிசலில்
முகமொன்று பார்த்து
அலை பாயும் கண்கள்
தூக்கத்தின் நேரம் கழிந்தும்
வெள்ளியோடு பேசிய வார்த்தைகளில்
கிழிந்து விடவில்லை இருள்
படிக்கட்டுகளில் ஏறும்போதெல்லாம்
பசையற்ற எலும்புகளின் உரசல்
மூட்டுகளுக்குள்ளே
நிலக்கடலை தோலுரிக்க
வெறிச்சிடும் மௌனம்
அலையென எழும்
உணர்வு கடலில்
எரிமலை குழம்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|