மாதங்கியின் மூன்று கவிதைகள்
தொடரும் புன்னகை
விருந்தினர்
தலை மறைந்த பின்பும்
வழியனுப்ப வந்த குழந்தை
வாயிலில் நின்று
புன்னகைத்துக் கொண்டிருந்தது
போதும் சிரித்தது
அவர்கள் போய்விட்டார்கள்
இவர்கள் எங்கே
என்று கேட்டது
அச்சடிக்கப்பட்ட சொற்கள்
மெல்ல ஆடத் துவங்கி
ஒவ்வொன்றாக
கீழே விழுந்தன
அவித்தவை
பொறித்தவை,
வதங்கியவை
வெதுப்பியவை
என குழுக்களாய்ப் பிரிந்து
பயணம் செய்தன.
பாதி வழியில்
தட்பவெப்பத்தால்
அழுகிப் போயின
சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல்
தீவு விரைவுச் சாலையில்
வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
செல்லும்
இந்த தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டும்
மாதங்கி
சிங்கப்பூர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|