முரண் தடை விழி. பா. இதயவேந்தன்
சமாதானமாய்ப் போவோம்
என்கிறாய்
இப்போதைக்கு
நமக்குள் ஏது சமாதானம் ?
முரண்களின் மொத்தம்
வரலாற்றின் விலகல்
வாழ்வின் தொலைப்பு
சமூகம் என்னும் வட்டத்திற்குள்
எங்கேனும் ஒரு முள்
தொடர்ந்து குத்தக் குத்த
ஒவ்வொன்றாய்
எடுத்தே
கழிகிறது காலம்.
மனங்குமைந்து
கண்ணீர் விட்டகாலங்கள் போய்
வாழ்வின் நுணுக்கத்தில்
எதிரியின் சுவடுகள்
மனதில் விழ
ஓவெனும் இரைச்சலோடு
பீறிட்டெழும்
எனது பதிவுகள்
கரைக்குத் திரும்பிய கடலலையாய்
உன் சுவடுகள் அழித்து
திரும்பிய எனக்குள்
சுந்திரம் என்பது
இனி இருக்கும் எப்போதும்
எனக்கானதாய்
முரண் தடை
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சென்னை.
விலை ரூ. 50/
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|