சின்னச் சின்னச் சுகங்கள்... - அ. சரவணராஜ்
வேறு வேறாய் இருந்த நம்மை
வேர்களாக்கிக் கொண்டது காதல் !
உன்னை அழகாய்க் காட்டுவது
அலங்காரமல்ல என் காதல் !
அண்மையில் புதிதாய் என்ன நூல் வாங்கினாய்?
என்கிறாய் சொல்லட்டுமா...?
நேற்றைய சந்திப்பில் என்
சட்டைப் பொத்தானில் சிக்கிக் கொண்ட
உன் புடவை நூல்தான் !
என் வீட்டு விசேசம் ஒன்றிற்கு
வந்து போனாய் நீ அதுமுதல்
நீ வந்து போனதே விசேசமாகிவிட்டது
என் வீட்டுக்கு !
கூறுகெட்ட காகம் குயில் முட்டையைத்
தன் முட்டையென்று அடைகாத்தது மாதிரி
நாமிருவரும் நட்பென்று
அடைகாத்திருக்கிறோம் காதலை !
சேர்ந்து நின்றவாறு புகைப்படம் எடுத்தால்
பிரிந்து விடுவோம் என்கிறாய்
அப்படியானால் வா சேர்ந்து நின்றவாறு
கண்ணாடியாவது பார்ப்போம் !
நான் வந்தால் நகர்ந்து விடுமுன்
தோழிதான்
உனக்கு நானெழுதிய
முதல் காதற்கடிதம் !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|