கடைசி ஆசை மௌனம் இரமேசு
தொடரும் தோல்விகளால்
தொய்ந்து துவளாமல்
எனக்கான தாலாட்டை
இசைத்த வண்ணமேயிருக்கணும்
விஸ்கியின் ஒவ்வொரு சொட்டும்
மதுபான விடுதியின் தனித்த அறையில்
தாணிக்கோணி மெழுகுகள் கசியும்
மெல்லொளியில்
மேசையின் எதிர்புறத்திலிருந்து
சிநேகம் பூத்து பால்யங்கள் கிளறி
கைகுலுக்கி பிரிந்த பிறகும்
விரியும் ஞாபகங்களில்
அகப்படாமல் அலைக்கழிப்பது
உன் முகமா? என் முகமா?
சுவரில் பட்டுத் தெறித்து
திரும்பவும் இருந்த இடத்திலேயே இருந்து
குரூதம் பூக்கும் இம்மியும் உடைந்திராத
கண்ணாடிக் கோப்பைக்கு முன்
மண்டியிடுவதற்கு முன்பாக...
அந்தரத்தில் மிதந்து உயிரினிழை திரித்து
அதிகாலையில் பகல்களைப் பருகும்
அதே முகம் சிதைத்த பிம்பம்
இன்றின் கனவிலும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|