வன்கால்கள் தி. பரமேஸ்வரி
அடர்ந்த வனாந்தரத்தில்
சுற்றி அலைகிறேன்
வெளியேறும் வழிதேடித்தேடி
சிக்கித் தவிக்க நசுங்கி
விழும் உடல் யானைப் பள்ளத்துள்.
முட்டி மோதி எதிரொலிக்கின்றன
கூக்குரல்கள்.
சிதறும் மனத்துகள்கள்
நடுங்கும் கால்கள்
வருகை நோக்கும் விழிகள்
குழிக்குள் அலையும் உடலை
தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்
பசியாறும் உடல் தடவி
சற்றே தளர்ந்து
ஆசுவாசிக்கையில்
மீளாக் குழிக்குள் தள்ளிக் கையுதறி
நடக்கிறது வன்கால்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|