வலி சத்தாரா மாலதி
யோசனைகளே முடிந்துபோன
வேலையில்லா அவஸ்தையில்
கடமைகளின் சிடுக்குகளில்
சக்களத்தி அறையின்
கிளுகிளுப்புகளில்
தூரங்களில் விலகிப்போன
ஈரங்களில் சமூக சோகங்களில்
போலி வேஷங்களில்
உடல் நலிவு அதிர்வுகளில்
காற்றுக்காய் நீருக்காய்
தேட்டைகளில்
பணவேட்டைகளில்
நல்லவரும் மிதித்து விட்ட
விபத்துகளில்
சுகம் நீ
வலிக்கூற்றின் அணு அணுவே
சுகம் நீ
எலும்புக்குள் மஞ்ஞைக்குள்
சில்லிட்டு அறிவுத் திப்பிகளில்
புரையோடவிட்டு
வரும் வலியே நீ சுகம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|