லிமரைக்கூ
விண்மீன்த் துளி பாரதி இளவேனில்
வெடியில் இழந்தது உறவை
வேட்டைக் காரனின் உயிர் வெறியைச்
சொல்லி அழுமொருப் பறவை
தடம் மாறும் அரசியல்
ஆள்பவர்க் கதிர்ச்சி தந்து நிறம்மாறும்
ரேஷன் கடை அரிசியல்
அள்ளிக் குடித்தோம் ஊற்றில்
உள்ளங்கைச் சில்லிட, நீர்நிலை வறள
சுமக்கிறோம் ‘வாட்டர் பாட்டில்'
தூரிகையெடு துளி மைத் தொடு
உயிரைத் தந்து உணர்வைக் கலந்து
ஓவிய மாக்கிக் கொடு
மலையிடை மறைந்தது கதிரொளி
இருள் வானம் தவித் தழுக
எழுந்தது விண்மீன் துளி.
பஸ்ல போற அய்யா
தின்னு பாரு தேனாயினிக்கும்
இது எங்க ஊரு கொய்யா
நீரின்றி காயும் ஆறு
நித்தம் மணலெடுத்து குழி பறிக்கும்
மணல் லாரி நூறு
நேற்று வரையிது செல்பேசி
நிலவே உன் குரல் வழிய
இன்றோ காதல் பேசி
துயிலாத குயிலின் கீதம்
வறண்டு காய்ந்தவன் கேட்ட போதில்
மனசெல்லாம் அன்பின் ஓதம்
எழுதினார் நிறைய லிமரைக்கூ
எதிர் வீட்டு விருந்துக்கு வந்த
இளம் வயது குமரிக்கு.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|