ஜீவமுடிச்சு அரங்கமல்லிகா
வட்டத்துக்குள் புள்ளியாய்
தவித்து நிற்கிறாய் ஆரம் சூழ
அச்சு நகர்கிறது
புள்ளியிலிருந்து விலகி
தனிமையின் கணங்களில்
காணாமல் போனது
மென் புன்னகை
வாழ யத்தனித்த பருவங்களில்
உடலோடு தூக்கி எறிதலும்
உதாசீனப் பார்வையும்
வெளித் தள்ளியது
குடலிலிருந்து வெளியேறும் மலமென
நோகாமல் விட்டெறியும் கல்லில்
கண்ணீராய் கசிந்தது துக்கம்
நீர்ப்பசையற்ற தொண்டைக் குழிக்குள்
முள்ளாய் குத்தும் பந்தம்
திணறிய குமட்டலில் வழிந்தது
ரத்தமும் உறவுச்சீழும்
புதுக்காற்றில் உயிர்த்தது
ஜீவ முடிச்சு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|