தீர்த்தமான நேர்த்திகள் ச. அன்பு
எல்லாம் தெரிந்தும்
எதுவும் பேசாத இதயம்
பேச வாய் எடுத்தபோது
சளசளவென
கண்ணில் நீர்துளி !
பனித்துளியின்
சந்திப்புத் தான்
பேசப்பேச
பரஸ்பரம் இழந்து
ஆழ்மனதை
படிவப் பாறையாய்
வடிவமைத்து விட்டது...
தனத்தின் அழுகுரல்
கேட்ட நேரம்
ரகசியங்கள்
அனல் வெடிப்புகளாய்
சிதறியது
காணாத கனவொன்றில் !...
திசையெட்டும்
எதிரொலித்தது
புகாரற்றுக் கிடந்த
என் பெயரை ?
இருள் சூழ்ந்த கிணற்றில்
இரவின் அமைதி !
ஈசலின் இரவோடு
இணைந்து போனது
வாழ்வின் ஒரு துளி ...
துயரத்தின் துருவங்கள்
சொட்டுகளாய்
சொட்டி சொட்டி
தீர்த்தமான நேர்த்திகளை
திராவகமாய்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|