கறைபடிந்த பார்வை க. அம்சப்ரியா
இரவில் தனியே
நீங்கள் எப்போதும் பார்க்கக்கூடும்
நள்ளிரவில் தனித்து ஒற்றையாய்
குழப்பம் பீறிட அல்லது
மௌன அமிழ்தலில் திளைத்த
இளம் பெண்ணொருத்தி
பேருந்தில் பயணித்தபடியிருப்பதை
உங்கள் பார்வை படிகிறது அவள்மீது
உங்கள் விரியும் கற்பனை
அவளைச் சட்டையுரிக்கிறது
ஆயிரம் சந்தேக விதைகளைச் சுமந்தபடி
இறுதியில் அவளுக்கான நிறுத்தம் ஒன்றில்
அகாலத்தில் இறங்கிப் போகிறாள்
நள்ளிரவில் பணிக்குச் செல்லும்
யாருடனோ கோபித்தபடி
கோபம் கரையும் பிறிதொரு
இடம் தேடுபவளாக
.............................................
.............................................
அந்த இருள் மெல்ல சூழ்கிறது
உங்களின் கறைபடிந்த பார்வையின் மீது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|