கூட்டுக்கவிதை
ஒரு அறையை அப்பாஸ் * உமாபதி சண்முகம் * மகரந்தன் * விக்ரமாதித்யன் நம்பி
தட்டிக் கொண்டிருக்கிறேன்
எதிர்பாராத பொழுதொன்று
எப்பொழுதும் என் அருகில்
மெல்லத் தாடி நரைத்த
ஒரு கிழவன்
மூதாட்டியின் பாதத்தில்
பணிந்து விலகுகிறது
அந்திப் பொழுது
மாலை மயங்கிச் சரியும்
மலைகளுக்கு அடியில்
முணுமுணுத்துச் செல்கிறாள்
ஒரு நாடோடிப் பெண்
தன் முரட்டு வரிகளை
என் செடிகளுக்கு
உன் நிழலும்
என் கொடிகளுக்கு
உன் உயரமும் தாம் பச்சையம்
பச்சையமெனில்
பச்சையம்மன்
மீனாக்ஷி
கையில் கிளி
பச்சைக் கிளிகளுக்கு
வானமே சொந்தம்
கவிஞர்களும் ஒரு விதத்தில்
பச்சைக் கிளிகள்தாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|