Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

பாரதி பார்வையில் பார்ப்பனர்

பாரதிதாசன்

பார்ப்பனர்களின் குணச்சித்திரம் குறித்து நாம் எழுதுவதைவிட, பாரதியார் எழுதிய விமர்சனத்தையே தந்துவிடலாம் என்று கருதி பாரதியாரின் மறவன் பாட்டு எனும் கவிதையை விரித்தோம்.

என்ன ஆச்சரியம்! அந்தக் கவிதையில் பல வரிகள் நீக்கப்பட்டு வெற்றிடமாக விடப்பட்டிருந்தது. பார்ப்பனர்களைப் பாரதி எவ்வளவு உண்மையாகப் படம் பிடித்திருப்பான் என்பதை உணர முடிகிறது. பாரதியின் கவியில் பல வரிகளை அழித்த பிறகும் எஞ்சிய வரிகளில் பார்ப்பனரின் சுயரூபம் தெரியவே வருகிறது. இதோ அந்த வரிகள்:


பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
யாரானா லுங்கொடுமை .........................
...........................................................................
பிள்ளைக்குப் பூணூலா மென்பான் - நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
கொள்ளைக் கேசென்.........................
...........................................................................
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
...........................................................................
...........................................................................
நாயும் பிழைக்கு மிந்தப் - பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக் - காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு


பாரதியின் கவிதையை அழித்து மாசுபடுத்திய சதிகாரர்களை எச்சரித்து புரட்சிக்கவிஞர் காத்திருக்கிறது கைவிலங்கு என்று எழுதிய வரிகள் இவை:


பார்ப்பனர் உயர்வெனும்
உள்ளப் பான்மை
ஒழிய வேண்டும் என்றவர் உரைத்த
சொற்களை மறைப்பதும்
சுரண்டி மாற்றுவதும்
அவர்க்குச் செய்யும் தீமை யாகும்.
கவிஞர் விளைத்த கரும்பு களில்சில
தமக்குக் கசப்பைத் தருவதாய் எண்ணி
அவைகளை பாரதி அளித்தவை அல்ல
என்று சிற்சிலர் இயம்பு கின்றனர்
கயவர்க்குக் கைவிலங்கு காத்திருக் கின்றது!


- பாரதிதாசன் கோவை மடக்குளம் பாரதி விழாவில் 11-9-1962 இல் தலைமை ஏற்றுப் பாடிய
கவியரங்கக் கவிதையிலிருந்து...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.