Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

ஊழலுக்கு இத்தனை அலங்காரமா?

ஆனாரூனா

கட்சிக்கு நன்கொடைகளைத் திரட்டுவதிலும் அதைச் செலவழிப்பதிலும் பா.ஜ.க.வுக்கு இருந்த மனப்போக்கையே மாற்றியவர் மகாஜன் என்றால் அது மிகையல்ல. “வியாபாரிகளின் கட்சி’’ என்று அழைக்கப்பட்ட பா.ஜ.க., சிறு வியாபாரிகளிடம் நன்கொடைகளைப் பெற்று கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியது, தேர்தலைச் சந்தித்தது.

Pramod Mahajan “லட்சங்களை’’த் திரட்டுவதே அதற்குப் பெரிய காரியமாக இருந்தது. இந்நிலையில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களை அணுகி ‘கோடிக்கணக்கில்’ பணத்தைத் திரட்டி கட்சியை “உயர்வேகப் பாதைக்கு’’த் திருப்பியவர் மகாஜன். சொல்லப்போனால் கட்சியில் “கோடி’’ என்ற வார்த்தை தாராளமாகப் புழங்கக் காரணமாக இருந்தவர் மகாஜன்தான். பா.ஜ.க.வுக்கு நிதி திரட்டுவதில் சக்தி வாய்ந்தவராக இருந்தார். அதன் நிதி நிர்வாகத்தையும் திறம்பட மேற்கொண்டார். இந்த விஷயத்தில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இட்டு நிரப்ப கட்சியில் இப்போதைக்கு வேறு யாரும் இல்லை.

வாங்கிய நிதி மட்டுமல்ல, “வாங்கக் கூடிய நிதி’’ எவ்வளவு என்பதும் யாருக்கும் தெரியாது. வெறும் நிதி கேட்பது, வாங்குவதோடு பணி முடிந்தது என்று அவர் இருந்ததில்லை. தொழில் அதிபர்களின் யோசனையில் ஏற்கக்கூடியவற்றை அரசிடம் எடுத்துச் சொல்வது, அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை, சலுகைகளை அளிப்பது என்று வலுவான உறவுப்பாலத்தையே அமைத்திருந்தார். அதில் தவறு இல்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார்.

- தினமணி நடுப்பக்கக் கட்டுரை



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.