நூலகம்
விழுப்புரம் கா.தமிழ்வேங்கை
அமைதியைக் கிழிக்கும்
மெல்லிய கீறலாய்
உள்ளே நுழைவார்கள் அவசரமாய்
எடுத்துச் சென்றதைக் கொடுத்ததும்
தேடலின் திசையளக்கும் கால்கள்...
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
வரலாறும் அறிவியலும்
வர்க்கப் போராட்டமும் வாழ்க்கையும்
அலமாரிகளில் புத்தகங்களாய்
மணிக்கணக்காய்த் தேடித்தேடி
அலுத்துப் போவார்கள்
தேடலின் தோல்வியில்
சலித்துக் கொள்வார்கள்
விருப்பமில்லாமல் எடுத்துச் செல்வார்கள்
ஒன்றிரண்டை, சோர்வின் சுமையோடு!
அலமாரியின் கீழடுக்குகளில்
தூசுபடிந்து கிடக்கும்
புத்தகங்கள் சொன்னது
சிரித்துக் கொண்டே
‘குனிந்து நிமிராத சோம்பேறிகள்.’
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|