தைப் பாதைப் பா
கவிஞர் தணிகைச் செவ்வன்
வருக, தை! வாழ்க, தை!
வளர்க, தை! வெல்க, தை!
வழங்க வா புதிய பாதை
வரலாற்று மூதாதைத்
தமிழினம் வாழ்ந்ததை
வாழ்வதைப் பார்த்திட்ட தை
உரியதை மீட்கவும்
உள்ளதைக் காக்கவும்
ஓங்கிடும் செம்பதாகை
உயர்வதைச் சாதிக்க
உயிர் வதை பட்டேனும்
ஊன்றுக நெருப்பின் விதை
வருவதை எதிர்நோக்கி
விடிவதை விரைவாக்கி
வரலாற்றைப் புதியதாக்கி
வருண ஆதிக்கத்தை
வர்க்க வழி யுத்தத்தை
வென்றிடத் தமிழினத்தை
உருவாக்கும் காலத்தை
உரித்தாக்கும் புதிய தை
உதித்திட இளைய தமிழா
உனக்கான வேளை இது
இனப்போரின் வாளையெடு
தமிழ்ச் சேனைத் தலையாய் எழு!
இருபதைத் தாண்டிய
இந்த நூற்றாண்டிலே
இதுவே தை தந்த பாதை
என்று தைச் சூளுரை
ஈழ தேசப் படை
வென்றிடும் தமிழீழத்தை அந்த
விருதை நீ வாங்கி வா தை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|