மொழி ஆதிக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்
லெனின்
தேசிய இனங்களின்
மொழிகளின்,
சமத்துவத்தை அங்கிருந்து
அதற்காகப் போராடாத எவரும் -
தேசிய ஒடுக்குமுறைகளையும்,
சமத்துவமின்மையையும்,
எதிர்த்துப் போராடாத எவரும்
மார்க்சியவாதி ஆகமாட்டார்.
அப்படிப்பட்ட ஒருவர் ஜனநாயகவாதி கூட அல்ல!
சாட்டையடி கொடுத்து
மக்களைச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பதை
நாம் விரும்பவில்லை.
‘கலாச்சாரம் பற்றி எத்தனை அழகான சொற்றொடர்களை உரைத்தாலும்
கட்டாய ஆட்சி மொழி என்பதில்
வன்முறைச் சாட்டையினைப் பயன்படுத்துதல் அடங்கியிருக்கிறது.
(சேர்ந்து வாழ விரும்புகிற வரையில்)
ரஷ்ய மொழி அறிந்திருக்க வேண்டும் என்று கருதுகிற மக்கள்
நிர்ப்பந்தம் எதுவுமின்றி அதைக் கற்றுக் கொள்வார்கள்.
ஆனால் -
வன்முறைக்கு - சாட்டையடிக்கு - ஒரே ஒரு விளைவுதான் இருக்கும்.
இதர தேசிய இனப்பகுதி மக்களிடம் அந்த மொழி (கட்டாய ஆட்சி மொழி)
செல்வதற்கு அது (வன்முறை) தடையாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக
பகைமையை உக்கிரமாக்கும்.
லட்சக் கணக்கான வடிவங்களில் மோதலை உண்டாக்கும்.
வெறுப்பை அதிகரிக்கும்.
பரஸ்பரம் தப்பபிப்ராயங்களைப் பெருக்கும்.
அதனால்தான் -
மார்க்சியவாதிகள்
ஒரு கட்டாய ஆட்சி மொழி என்பது கூடாது என்கிறார்கள்.
மக்களுக்கு எல்லா மொழிகளிலும் போதனை நடத்தும் பள்ளிகள் வழங்கப்பட வேண்டும்.
எந்த ஒரு தேசிய இனத்திற்குமான தனி உரிமைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.
அதைப் பிரகடனம் செய்யும் விதத்தில் அடிப்படைச் சட்டம். அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|