ஈரோட்டு ஏவுகணை
பகுத்தறிவாளன்
பகுத்தறிவுச் சிந்தனையின் பட்டறை
தமிழினத்தின் அடையாள முத்திரை
பகுத்தறிவுக் கொள்கைகளில் பெட்டகம்
தமிழன் படிக்க வேண்டிய புத்தகம்.
உலகமெலாம் சிதறிய தமிழினப் பேரொளி
எங்கள் இனத்தைச் செதுக்கிய சிற்றுளி
தலைகுனிந்த தமிழினத்தை
தலைநிமிரச் செய்தவரே -
ஈரோட்டு ஏவுகணையே
பாராட்டுது! ஊர் உனையே
வேர் அருப்போம் மடமைதனையே.
புரட்சிச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தக் கிடங்கே
உங்களால் உடைக்கப்பட்டது எங்கள் அடிமை விலங்கே.
எண்ணுகையில் என் உள்ளம்
துடிதுடிக்குது.
நன் பகைவர் எண்ணம்
வெடிவெடிக்குது!
பகுத்தறிவு! நீ பேசியது
அறிவற்றது உன்னை ஏசியது.
உன் பேச்சைக் கேட்டுக் கேட்டு
தமிழனின் அறிவு வளர்ந்தது.
தமிழன் முகமூடி கிழிந்தது - உடன்
தாடிகூட வளர்ந்தது - அப்பேறும்
மூளை இல்லாதவனின்
அறிவு மட்டும் வளர மறுத்தது!
இவன் தொடர் ஏமாளி அல்ல
இவனும் போராளி என்று புரிந்தது.
பழுதான திராவிடத்தை - உன்
எழுத்தானது திருத்தியது - பல
பழக்கத்தை வீழ்த்தியது - பல
புதுமைகளைப் புகுத்தியது.
நம் பகைவரிடம் சிறிய
என்னுள் ஊறிய
பகுத்தறிவே....
உன் கொள்கை தமிழனுக்கு
உரம் ஆகட்டும்;
மதமும் சாதியும் மூடநம்பிக்கை
தூள் தூள் ஆகட்டும்.
நாத்திகமும் உங்களால்
சாத்தியம் ஆனது.
ஆத்திகம் மிகவும்
அதிர்ந்து போனது.
நீ தமிழனைத் தட்டி நிமிர்த்திய உலைகடம்
எனவே உனக்கு தமிழகத்தில் என்றும்
நிலையா இடம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|