Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruAnanguArticle
Anangu Logo
மார்ச் - ஆகஸ்டு 2007


பெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவார்

பிரெஞ்சிலிருந்து தமிழில் - நாகரத்தினம் கிருஷ்ணா


பெண்ணா? அவளைக் குறித்து உயர்வாகச் சொல்ல என்ன இருக்கிறது, என்று ஆரம்பித்து அவளொரு ‘சினைப்பை’, ‘சூலகம்’, பாலினங்களில் பெண்பால் அதாவது ‘பெட்டை’ என்று இரண்டொரு சொற்களில் (அவளைப்பற்றி விவக்க இச்சொற்கள் போதும் என்பதுபோல) முடித்துக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. ‘பெண்பிள்ளை’ அல்லது ‘பெட்டை’ என்ற அடைமொழி மூலம் பெண்ணை விலங்கினத்தில் ஒப்பிட்டு இழிவுபடுத்துகிற ஆண், தன்னை ‘ஆண்பிள்ளை’ அல்லது ஆண்சிங்கம் என்று அழைக்கப்பட பெருமிதம் கொள்கிறான். அப்போது தானுமொரு விலங்கினத்தில் சேர்த்தி என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவனுக்கு உண்டாவதில்லை. ‘பெண்பிள்ளை’ என்ற சொல்லை கீழ்மையானதென்று நாம் கருதுகிறோம்.

அதற்குக் காரணம் அச்சொல் விலங்கினத்தோடு அவளை அடையாளப்படுத்துகிறது என்பதற்காக அல்ல, மாறாக அவளது பெண்குறியோடு இணைந்து அச்சொல் கையாளப்படுகிறதே என்பதற்காக. பெண்ணினம் ஒருவித குரோத உணர்வுடன் எந்நேரமும் ஆணினத்தைச் சீண்டிக்கொண்டிருப்ப தாலோ என்னவோ, அவனுடைய ‘குறியிடம்’ மனிதன் ஆண்கள் மாத்திரமல்ல, சாதுவான ஆண்பால் விலங்கினங்களும் எச்சக்கையாக இருக்க வேண்டுமென்பதுபோல சித்தரிக்கப்படுகிறது.

எனவேதான் தனது செயல்பாடுகளுக்கு, உயிரியல் அடிப்படையில் ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமென்று ஆண் நினைக்கிறான். அசைந்தபடி நீந்திவரும் ஆணுக்குச் சொந்தமான விந்தணுவை ஆவலுடன் விழுங்கி கபளீகரம் செய்யும் ராட்சத கருமுட்டை; ஆண் கறையான்களை ஆட்டி படைக்கும் வயிறு பெருத்த கறையான்களின் ராணி; பெண் தொழுகைப் பூச்சி; அபதமான காதல் முடிவில் தனது இணையைத் தின்று பசியாறும் பெண் சிலந்தி; சேர்க்கைக்குத் துணை தேடி எச்சிலொழுக சந்துபொந்துகளில் அலையும் பெட்டை நாயும், அதுபோன பின்பும் வீசும் துர்நாற்றமும்; அசிங்கமான சேட்டைகள் செய்து ஆபாசமாய் ஆணினத்தை கவரும் மந்தி; தங்கள் ஆணினத்தின் இராசபோகத் தழுவலில் கட்டுண்டு கிடக்கிற கம்பீரமான காட்டுவிலங்குகளான பெண்புலி, பெண்சிங்கம், பெண்சிறுத்தை இப்படி... ‘பெண்பால்’ என்ற சொல்லை உச்சரித்த மாத்திரத் திலேயே ஆணின் சிந்தனையில் அடுக்கடுக்காய்ச் சித்திரங்கள்.

‘பெண்’ என்றதும் முகத்தை சுளித்தபடி சோம்பேறிகள், பேராசைகொண்டதுகள், அறி விலிகள், மரக்கட்டைகள், காம உணர்ச்சி மிகுந்ததுகள், வெறிபிடித்ததுகள், கீழ்த்தரமானவைகளென பெண்பாலுக்கெனவே தேடிப்பிடித்து வைத்திருக்கிற அத்தனை அடைமொழிகளையும் மொத்தமாக அவளுக்குச் சூட்டி, ஆணானவன் மகிழ்ச்சி கொள்கிறான். காரணம், அவள் தவிர்க்க வேண்டுமெனில் இரண்டு வினாக்களுக்கு, நமக்கு விடை தெரிந்தாக வேண்டும் முதலாவது, விலங்கினத்தில் ‘பெண்பால்’ விலங்குகளின் பங்கு என்ன? மற்றது, மனிதனத்தில், பெண்ணோடு ஒப்பிடக்கூடிய பெண்பால் விலங்கென்று எதைக்குறிப்பிடலாம்?.

இயற்கையைப் புரிந்துகொள்ளுதல் எளிதான தல்ல ‘இது ஆண், அது பெண்’, என்று எந்த ஒன்றையும் வெகு எளிதாக இனம் பிரித்துவிட பலநேரங்களில் இயல்வதில்லை. நிறம், புள்ளிகள், சிறகுகளின் வடிவம் ஆகியவற்றில், இருபாலினத்திற்கும் இடையில், நமக்கு நல்ல காலமென்றால் வேறுபாடுகள் இருக்கக் காண்கிறோம். சில நேரங்களில் ஆண்-பெண் இருவருக்குமான செயல்பாடுகளில் வேற்றுமைகளே இல்லை என்ற நிலையில் அவற்றை பிரித்து இனங்காண நம்மால் முடிவதில்லை. ஒரு நல்ல உதாரணம் அமீபாக்கள்.

எனினும் பொதுவாக, ஓர் உயிரின் உற்பத்தி வரலாற்றின் ஆரம்பக்கட்டத்தில், இருபால் வேற்றுமைகள் தெள்ளத் தெளிவாகவே வெளிப்படுகின்றன. ஆனால் பலரும் சொல்வதைப் போல இவ்விரு இனத்திற்குமான குணங்கள் எதிரெதிர் நிலையில் அதாவது ஒன்று செயற்பாடு (Activity) குணத்துடனும், மற்றது செயற்பாடு (Passivity) குணத்துடனுமில்லை என்பதை உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும் கருமுட்டையின் உட்கருவினாலும், கருவின் வளர்ச்சியென்பது இயந்திரத் தனமாக அல்லாமல் ஓர் உயியல் இயக்கமாகயிருப்பதாலும் அறியலாம்.

இக்காரணங்களாலேயே, கருவளர்ச்சியை ஒரு நிரந்தரமாற்றமென்கிறோம். விந்தணு உற்பத்தியாவதோடு சரி, பின்னர் அதன் சீவத்துவம் முட்டையால் பராமக்கப்படுகிறது. கருமுட்டை அப்படியல்ல, வாழ்வும் தாழ்வும் பராமப்பு சார்ந்ததென்கிற நிலையில் அதனால் அமைதியாக இருக்க முடிவதில்லை. எனினும், இன்னொரு உயிராக உருவெடுக்கிற இந்நிகழ்வுகளின் நடைமுறைகளை “உற்பத்தி-பராமப்பு” எனப் பித்து நாம் பார்க்க முடிகிற போதும், இரண்டுமே சுறுசுறுப்பாய் செயல்படுகின்றன, சோம்பியநிலையில் அவை இருப்பதில்லை.

உயிர்வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது உயிரணுவில் ஏற்படும் பிளவுகளின் உத்தரவாதத்தை பொருத்தது, ஓர் உயிரணு பலவாக பிளவுபடுவதற்கு முன்பு நிகழ்கிற கணநேரக் கட்டிக்காத்தல் பராமப்பு ஆகும். ஆனால் மாறாத தன்மைகொண்ட இருப்பொன்று அநித்யமான சேர்க்கைநிலையில் வெடித்துப் பலதுண்டுகளாக பிவது உற்பத்தி. “உயிரணுக்கள் ஒன்று பலவாக பிரிவுண்ட போதிலும், உயிர்வாழ்க்கை என்கிற சங்கிலித் தொடரைப் பராமக்கும் செயல்பாட்டிற்குப் “பெண்” காரணமாக இருக்கிறது. புதிய பிளவின்போது தேவைப்படும் திறனுக்கும், பிளவுண்ட உயிரணுக்களின் தனித்தன்மைக்கும், உற்பத்தி என்கிற “ஆண்” செயல்பாடு காரணமாகிறது. இப்பண்பு சுய பலசாலியாக நிலைநிறுத்தவும், தனக்குத் தேவையான உத்வேகத்தை சொந்த வாழ்க்கையிலும் பெறவும் “ஆணு”க்கு உதவக்கூடும்.

மாறாக இந்நிகழ்வில் ஒவ்வொருமுறையும் உயிரணுவின் எதிர்காலத்திற்காக “பெண்” தனது தனித்தன்மையை இழக்கிறது; விநோதமான சக்தியைப்போல “ஆண்”, “பெண்ணைத்” தகாததாகக் கருதி ஆட்டுவிக்கிறது. அதனாற்தானோ என்னவோ பால்பாகுபாட்டினை உயர்த்திப் பிடிக்கும் உயிரணுக்களின் தனித்தன்மை சோர்வுறாமற் தொடர்கிறது. தனது பலத்தினை பிரயோகிக்கவும், அதன்வழி தன்னைத் தொடர்ந்து எஜமானனாக வைத்திருக்கவும் என்னென்ன உபாயங்கள் உண்டோ அத்தனையும் ஆண் தேட, பெண்ணோ அடிமையாக தான் நடத்தப்படுகிறோமென்று நினைக்கிறது. ஒருபுறம் தனது சொந்த நலன்கள் காக்கபட வேண்டுமென்கிற கவலை, மற்றொருபக்கம் இவ்விரண்டையும் இயக்குகிற சக்திகள், விளைவு “பெண்”ணைக் சீரழிக்கிறது.

பெண் முயல், பெண் எலிகளைக் காட்டிலும் பசுவும், பெண் குதிரையும் பிரசவத்தின்போது படுகிற வேதனையும், உறும் ஆபத்தும் பன்மடங்கு அதிகம். அவ்வாறே பெண்பாலினத்தில் பிரத்தியேகத் தனித்தன்மையுடன் இருக்கிற, “பெண்” வெகு எளிதாகப் பாதிக்கப்படுகிறவள், விளைவு அவளுடைய வாழ்க்கையும் மிகவும் பரிதாபத்திற்குயதாக அமைந்து, தனது சக “ஆண்” வர்க்கத்திற்கும் அவளுக்குமான வேறுபாட்டை மிக ஆழமாகச் சித்தரிக்கிறது.

மனிதரினத்தைப் போலவே, அநேகமாக பிற இனங்களிலும், ஆண் - பெண் பிறப்பு விகிதாச்சாரம் சசமமாகவே இருக்கிறதெனச் சொல்லலாம் (நூறு பெண்களுக்கு - நூற்று நான்கு ஆண்கள்) கரு வளரும் விதத்திலும் பேதங்களில்லை. எனினும் கரு வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் அதன் பாதுகாப்புக்கென்று உருவாகும் “புறசீதப்படலம்” (epithelium) பெண்கருவில் மட்டும் பொதுத் தன்மையுடன் அதிக நாட்கள் நீடிக்கிறது. அவ்வாறு நீடிப்பதால் வளர்ச்சியாக்கிகளின் அல்லது இயக்குநீர் (harmones) தாக்கத்திற்கு அப்பெண்கரு உள்ளாவதோடு, அதன் வளர்ச்சி பல நேரங்களில் எதிர்மறையாய் அமைந்துவிடுகிறது.

பெரும்பாலான இருபால் உயிரிகள் (hermaphodites) மரபணுவின் வழியில் (genotype) பெண்பாற்தன்மை கொண்டதாகத் தொடக்கத்தில் இருந்தபோதிலும் பின்னர் அவை ஆணாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். பெண்கரு தனது பெண் தன்மையை ஏற்க தயங்குகிறபோது, அக்கருவிற்கான ஆண் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறதென்று சொல்லப் படுகிறது, ஆனாலும் கருவின் ஆரம்பகால குளறுபடி தவறுதலாக உணரப்படுவதால், வேறுபட்ட முடிவுகளுக்குக் காரணமாகின்றன.

உருவானவுடன், பிறப்புறுப்புகள் இருபாலரிடத்திலும் சமச்சீராகவே இருக்கின்றன. ஆண்பெண் இரண்டிற்குமான வளர்ச்சியாக்கிகள் (harmones), உடலின் இரண்டாம்நிலை வேறுபாடுகளை வழிநடத்தும் திண்மநீர்மம் (sterol) சார்ந்த பொதுவான வேதியியல் பண்புடன் இருப்பதை, இறுதிக்கட்ட கொலெஸ்ட்ரின் சோதனைகள் உறுதி செய்கின்றன. ஆக இது “பெண்” என்று சுட்டிக்காட்ட கருநிலையில் தெளிவான விதிகளோ, வரையறுக்கப்பட்ட உடற்கூறுகளோ இல்லாததால், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்படும் பரிணாமத்தினை வைத்து ஆணிடமிருந்து பிரித்து அவளை அடையாளப்படுத்த நமக்கு உதவுகிறது.

பெண்ணுடன் ஒப்பிடுகிற போது ஆண்கருவில் வளர்ச்சி சிக்கல்களில்லை. பிறப்பிலிருந்து, உய பருவம் அடையும்வரை, ஓர் ஆணின் வளர்ச்சியை ஏறக்குறைய சீரான வளர்ச்சியெனக் கருதலாம்; பதினைந்து அல்லது பதினாறு வயதில் தொடங்கும் விந்தாக்கம் (spermotogenesis), இடைவெளியின்றி அவனது முதுமைக்காலம்வரை தொடர, வீரியமுள்ள உடலுக்குச் சொந்தக்காரனைப்போல தோன்றுகிறான். ஆக அப்போதிலிருந்தே அவனது பாலியல் தொடர்புபடுத்தப்பட்டு, பிற உயிர்கள் மீதான அவனது எல்லை மீறல்கள்கூட ஓர் உன்னதத்தை எட்டுவதற்கான முதற்படியென ஏற்றுக்கொள்கிறோம். மாறாக பெண்கள் கதை மிகவும் சிக்கலுக்குறியதாக உள்ளது. அவளது முதிர்வுறாக்கரு பருவத்தின்போதே (the embryonic period) வேண்டிய தாய்முட்டைகள் (oocycles) கிடைத்துவிடுகின்றனஙீ ஒவ்வொரு சூலகத்திலும் (ovary) ஐம்பதாயிரத்திற்கு குறையாத முட்டைகள் (ovums), அவை ஒவ்வொன்றும் மிகச்சிறிய பைகளில் (follicles) பாதுகாக்கப்படினும், ஏறக்குறைய நானூறு முட்டைகளே உய முதிர்ச்சியை எட்டுகின்றன.

பிறந்த உடனேயே, உயிரணு அவளை தனதுடமையாக்கிக்கொண்டு, இறுதிவரை அவ்வுரிமையைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுகிறது, அதற்கேற்றாற் போல பெண்ணுடைய உலக வாழ்க்கையின் ஆரம்பமே ஒருவகையில் பூப்புப்பருவத்தினைக் (puberty) கடக்குங் காலமெனலாம். திடீரென்று தாய் முட்டைகள் பெரிதாகின்றன; சூலகம் அல்லது சினைப்பையானது தனது அளவில் மாற்றம் பெறுகிறது; இம்மாற்றம், உண்டாகும் கருவுக்கேற்ற அளவிலென்று சொல்லப்படுகிறது. பிற உறுப்புகளிலும் அபார வளர்ச்சி, பிறப்புறுப்பில் பெரிய மாற்றமென்று ஏதுமில்லை. முதிர்ச்சியுறாமல் சில பைகள் (follicles) மாத்திரம் உப்புகின்றன.

பெண்ணுக்கும் பையனுக்குமான வளர்ச்சியில் வேறுபாடுகளில்லை என்கிறபோதும், பெண்ணானவள் ஒத்த வயதுடைய ஆணைக்காட்டிலும், எடையிலும், உயரத்திலும் அடையாளத்தை வலியுறுத்த உதவுவதுபோன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன: பைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது; இரண்டாவதாக சூற்பைகள் அளவிற் பெருத்து இடநெருக்கடியில் தவிக்க, முட்டைகளிலொன்று முதிர்ச்சி அடைகிறது; மாதவிடாய்க் காலவட்டம் செயற்படத் தொடங்குகிறது; மூன்றாவதாக வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தினை அடையும் பிறப்புறுப்பு தனது முழு அளவை எட்டுகிறது. இறுதியாக உடல்வாகு பெண்தன்மையை அடைந்து, உட்சுரப்பிகளுக்கடையே (enodocrine) ஓர் இணக்கத்தினை ஏற்படுத்துகிறது.

பெண் பூப்படையும் காலம் மிகவும் இக்கட்டான காலமென்பதைக் குறிப்பிட வேண்டும். நடைபெறுகிற இந்த மாற்றத்தை, பெண்ணுடல் எதிர்ப்பின்றி அமைதியாக ஏற்றுக்கொள்வதில்லை. தனது முழுபலத்தையுங்கொண்டு முரண்பட்டு நிற்பதால், உடல் மெலிந்து, உயிர்வாழ்க்கைக்கே ஆபத்தென்கிற நிலை. ஆண்-பெண் இருபாலடத்திலும் பருவம் அடைவதற்கு முன்பு சமஅளவிலிருக்கும் இறப்பு விகிதம், பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்கிடையில் 100 பையன்களுக்கு 128 பெண்கள் என்றும், பதினெட்டிற்கும் இருபத்திரண்டு வயதிற்குமான இடைபட்ட காலத்தில் 100 பையன்களுக்கு 105 பெண்கள் என்றும் இருப்பதைப் பார்க்கிறோம். பூப்படையும் தருணத்திற்தான் பெண்கள் இரத்தச்சோகை, காசநோய், பக்கவாதம், எலும்பு அழற்சி முதலான நோய்களின் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஒருசில பெண்கள் மிக இளம்வயதில் அதாவது நான்கு அல்லது ஐந்து வயதில் பூப்படைவதும், வேறு சிலருக்குப் பல ஆண்டுகள் தள்ளிப்போக அவர்கள் குழந்தைத் தன்மையுடன் சூதகமின்மை (amenorrhoea), சூதகவலி (dysmenorrhoea) போன்றவற்றினால் துன்புறுகிறார்கள். சில பெண்களிடத்தில் அண்ணீரகச் சுரப்பிகள்(suprarenal glands) கூடுதலாக இயங்குவதன் காரணமாக, ஆண்மையியத்திற்கான (virilism) அறிகுறிகள்.

உண்மையில் உயரிினத்தின் செயல்பாடே எதேச்சதிகாரமாக இருக்கிறபொழுது, இப்படியான முரண்பாட்டையெல்லாம், ஏதோ பெண்ணுயிருக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாட முடியாது. சுதந்திரமாக செயல்பட்டு தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ளாத போதும், அதன் பராமரிப்புப் பணி தொடர்கிறது. நீயா நானா என்கிற பிரச்சினைக்கு ஒருவகையில் காரணமாகிறது. இத்தகைய இருமை இயல்புகள்(duality) சூலகத்தின் பணிகளிலும் குறுக்கிடுவதைப் பார்க்கிறோம். பெண்ணின் உயிர்சக்தியானது சூற்பையைச் சார்ந்திருக்க, ஆணின் உயிர்சக்தி விந்தகங்களை நம்பியிருக்கிறது. ஆணோ பெண்ணோ கருத்தடை செய்து கொள்கிறபோது மலட்டுத் தன்மையோடு, வளர்ச்சியில், ஒருவித தேக்கநிலையையும் சீர்கேட்டையும் சந்திக்கிறார்கள். அதாவது ஆண் அல்லது பெண்ணுக்குய தகுதியை எட்டாத எதிர்மாறான நிலை. சம்பந்தப்பட்ட உயிர் நொடித்துப்போகவும், சமச்சீரற்ற அசாதரண வாழ்க்கையை மேற்கொள்ளவும் காரணமாகிறது.

பிறப்புறுப்பு சார்ந்தே வாழ்க்கை என்றறிகிறோம். பிறப்புறுப்பு பெரும்பாலும் அது சார்ந்த உயிருக்கு நெருக்கடியை உண்டாக்குவதில் காட்டும் அக்கறையை, நலன்களில் காட்டுவதில்லை. வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் கருத்தடை செய்து கொள்ளலாம் என்பதால், பூப்படையும்போது ஏற்படுகிற மார்பகங்களின் வளர்ச்சியும், பெண்ணின் நலனுக்கென்று பெரிதாக எதையும் சாதிப்பதில்லை. சூல்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதும், அதன் முதிர்ச்சிக்குக் காத்திருப்பதும், தனது தேவைகளுக்கேற்ப கருப்பையைத்(Womb) தகவமைத்துக் கொள்வதும் சூற்பையின்(overy) நோக்கமாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இப்பணிகளைப் பார்க்கிறபோது அவற்றில் சீரானத் தன்மை இல்லை என்பது வெளிப்படை. ஆகப் பெண்ணொருத்தியின் வாழ்க்கை என்பது சினைமுட்டைகளுக்கு ஏற்ப இருக்கிறதேயன்றி அவளை நம்பி அல்ல. பூப்படையும் பருவம் தொடங்கி மாதவிடாய் நிற்கும் காலம்வரை, அவளிடத்தில் அவளை மையமாக வைத்து நிகழ்த்தப்படும் சம்பவத்திற்கு அவள் முக்கியமல்ல என்றாகிறது
.
மாதவிடாயினால் சம்பந்தப்பட்ட உயிருக்கு எந்தப் பலனுமில்லை என்பதாலோ என்னவோ ஆங்கிலோ-சக்ஸோன் மக்கள் மாதவிடாயை “the curse”அதாவது பெண்களுக்கு விடப்பட்ட “சாபமாக”க் எடுத்துக்கொள்கிறார்கள். அரிஸ்டாட் காலத்தில் கருத்தரிக்கிற நேரத்தில் குழந்தை உருவாகத் தேவையான இரத்தமும் சதையுமே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கென்று கருதப்பட்டது. இப்பழமை யான கருதுகோளின்படி பெண்ணுடல் ஓய்வின்றி கருத்தப்பது தொடர்பான பணிகளில் ஈடுபடவே படைக்கப்பட்டதாகிறது.

இதர பாலூட்டி இனங்களுக்கு சினைப்படுங் காலங்கெளென்று தனியாக இருக்கின்றன. உயர்வகை குரங்குகளிடத்திலும், பெண்களிடத்திலும் மட்டுமே ரத்தப் போக்கினைப் பார்க்கிறோம். இதர இனங்களில் ரத்தப்போக்கென்று எதுவுமில்லை. சூல்களை(ovum) சுற்றியுள்ள கிராஃப் சிறுபைகளில்(Graff folllicles) ஒன்று அளவிற் பெரிதாகி, முதிர்ச்சியடைய பதினான்கு நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதே காலக்கட்டத்தில் சூல்பை(ovary) சிறுபைகளை(follicles) ஒட்டி “பெலிக்யுலின்” என்ற இயக்குநீரைச் சுரக்கிறது. சரியாக பதினான்காம் நாள் முதிர்ந்த சூல்கொண்ட கிராஃப் சிறுபையின் விதானம் வெடித்துக் கிழிய (சில நேரங்களில் குருதிக் கசிவிற்கும் வாய்ப்புண்டு) சூல் வெளிப்பட்டு, கருப்பையை இணைக்கும் குழாயில் விழுகிறது. கிழிந்த பை ஒருவித மஞ்சள் படலமாக மாறுகிறது. அடுத்துவருவது மஞ்சள் படலத்துடனான இரண்டாம் கட்டம்(la phase luthenique), இந்த நிலையில் புரோஜெஸ்டின் என்கிற இயக்கு நீர்(harmone) சுரந்து கருப்பையில் சில காயங்களை ஆற்றுகிறது. கருவிதானம் தந்துகிகளால் சிவக்கின்றன.

பின்னர் விந்து சுருங்கியும் ஒருவகை அடுக்கு மடிப்புகளை தொட்டில்போல் கருப்பையில் உருவாக்கிவிட்டு, கருவுற்ற முட்டையை எதிர்பார்த்து, மடல்களைப் பிக்காமல் காத்திருக்கிறது. பிற பாலூட்டிகளில் வீணான உயிரணுக்களை சுமந்துசெல்ல நிணநீர்க்கலங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களிடத்தில் மேலே குறிப்பிட்ட மடிப்புகள் சிதைவுறுகிறபொழுது, ஒருவித வழவழப்பான சவ்வொன்று உரிகிறது. அதனால் தந்தூகிகள் திறந்துகொள்ள, இரத்தம் வெளியே கசிகிறது.

மஞ்சள் படலம் சிதைந்து, மீண்டும் சவ்வினை உருவாக்க மற்றொரு நிகழ்வுக்கு அனைத்தும் தயாராகின்றன. இந்நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் விநோதமாக இருப்பதோடு, மொத்த செயல்பாடும் மிக சிக்கலானதாக இருக்கிறது. இச்சமயத்தில் சுரக்கும் இயக்குநீரால் தைராய்டு மற்றும் பிட்யூட்டரிகளில் ஏற்படும் விளைவுகள், நரம்புமண்டலம், இரத்த ஓட்டம், சுவாசம் தொடர்பான மூளை, இதயம், நுரையீரல் கல்லீரல், குடலென சுருக்கமாகச் சொல்வதென்றால் உடல் முழுவதும் இச்சம்பவத்தில் பங்கேற்கிறது.

ஏறக்குறைய எண்பத்தைந்து விழுக்காடு பெண்கள், மாதவிடாய்காலத்தில் பாதிக்கப்படுகிறார்கள். இரத்தப்போக்கிற்கு முன்பு பெண்களின் மன அழுத்தம் கூடுதலாக இருப்பதும், பின்னர் குறைவதும் அதற்கு உதாரணம். நாடித்துடிப்்பும், உடல் வெப்பமும் சட்டென்று உயர்வதைப் பார்க்கிறோம். பெரும்பாலானப் பெண்கள் காய்ச்சல், வயிற்று வலியென்று அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் மலச்சிக்கலும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப் போக்கும் கல்லீரலின் பருமன் திடீர் அதிகப்பும், சிறுநீருப்பு(urea) வெண்புரதம்(albumin) முதலானவை உடலிற் தங்கவும் நேரிடுவதுண்டு. அதிக எண்ணிக்கையிலானப் பெண்கள் பிட்யூட்டரியில் சுரக்கும் சளியின் வரவினால், தொண்டைப் புண்ணால் அவதிப்படுகிறறன்றனர்.

செவி மற்றும் கண்கறஎளில் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களும் உண்டு. மாதவிடாயின் ஆரம்பத்தில் சாதாரண நாட்களைக்காட்டிலும் மிக அதிகமான வியர்வை வெளியேற ஆரம்பித்து, மாதவிடாய் நாட்களில் தொடர, அதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் அளவும் வேகமெடுக்கிறது. இரத்த அணுக்கள் எண்ணிக்கையில் குறைந்த போதிலும், திசுக்களில் பொதுவாக காப்பு வைப்பாக இருக்கவேண்டிய பொருட்களைக் குறிப்பாக கால்சியம் உப்புகள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் பணியிற் தொய்விருப்பதில்லை. இரத்த அணுக்களில் காணப்படும் இவ்வகை உப்புகளால் சூலகத்தில் சிலமாற்றங்கள் ஏற்படுகின்றன. தைராய்டு அசாதரண வளர்ச்சிக்கு(hypertrophy) உள்ளாகிறது.

கருதரிப்பதற்கு முன்பாக, கருப்பையில், பிட்யூரிட்ட சளி நீர்மம்(mucus) கூடுதலாகச் சுரப்பதால் உண்டாகும் தடுமாற்றம், ஒருவித நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மத்திய நரம்பு மண்டல்தைப் பாதிப்பதோடு பல பெண்கள் தலைவலியென்று அல்லற்படுகிறார்கள். சுவாசம், இதயத்துடிப்புப் போன்றவைகளுங் கூட முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகக்கிறது. மையக் கட்டுப்பாட்டினை இழந்து, அன்னிச்சையாக செயல்படவும், நெருக்கடி நிலையறிந்து காரியமாற்றவும் வகையற்றவளாகி, உணர்ச்சி வசப்படுவதும், அமைதி இழந்து தவிப்பதும், வழக்கத்திற்கு அதிகமாக எரிச்சல் படுவதுமென மொத்தத்தில் மனம்பிறந்தவள்போல அவள் நடந்துகொள்கிறாள். மாதவிடாய்க்காலத்தில்தான் மிக மோசமான அளவில் அவளது உடல்வதைப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் பிடிவாதங் கொண்டவளாகவும், முற்றிலும் புதிய குணத்துடனும் பிறருக்கு அவளை அறிமுகப்படுத்துவதும் அதுதான். ஒவ்வொரு மாதமும் கருதரிக்கவென்று கருப்பையைத் தயார் செய்வதும், பின்னர் அதனைக் கலைத்துக் கொள்ளவும் செய்கிறாள். ஆணைப் போலவே பெண்ணும் அவளுக்கென்று ஓர் உடலைப் பெற்றிருந்தபோதும் அவ்வுடல் அவளது உடலாக இல்லையென்பதும் உண்மை.

கருவுற்ற முட்டை கருப்பையில் விழுந்து வளரும் நிலையில், பெண்ணாணவள், முற்றிலும் ஒரு புதிய அனுபவத்திற்கு உள்ளாகிறாள். பெண்ணின் உணவுமுறை ஒழுங்காகயிருந்து நல்ல ஆரோக்கியத்துடன் அவள் இருப்பாளென்றால் கரு சுமக்குங் காலத்தைச் சராசரி நிகழ்வென்றும், அதனாற் தாய்க்குப் பாதகமேதுமில்லையென்றும் சொல்லலாம். கருவுக்கும் தாய்க்குமிடையில் நிகழும் ஒருங்கிணைந்த செயல்கூட அவளுக்குச் சாதகமானதாகவே இருக்கிறது. சமூகப்பயன்பாட்டின் அடிப்படையில் பெண்ணின் கர்ப்ப காலம், மனதளவில் ஓரளவு நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருப்பினும், உடலளவில் அவளுக்கு ஏதேனும் நன்மை உண்டாக்குகிறதாவென்றால் இல்லை. தவிர பிள்ளைப் பேறுகாலமென்பது மிகவும் அயர்வினைத் தரக்கூடிய பணி, கடுமையானத் தியாகங்களை அதற்கென்று செய்ய வேண்டியிருக்கிறது.

புதிய உயின் வரவை எதிர்க்கின்ற வகையில் அவளது உடலுறுப்புகள் நடந்துகொள்ள, கர்ப்பமுற்ற முதல் மாதத்தில் பசியின்மையும், குமட்டலும் வாந்தியும் அவளுக்குத் தவறாமல் உண்டாகிறது. இதுபோன்ற அறிகுறிகளை வீடுகளில் வளர்க்கப்படுகிற பெண் விலங்குகளிடத்தில் நாம் காணமுடிவதில்லை. பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்தென அனைத்தும் அவளிடத்தில் பற்றாக்குறைநிலையில் இருக்கின்றன.

குறிப்பாக இரும்புச் சத்தின் இழப்பினை அத்தனைச் சுலபமாக சரிசெய்ய முடிவதில்லை. கூடுதல் வளர்சிதைமாற்றம் உட்சுரப்பிகளைத் தூண்டுகிறது. கருதப்பதற்கு முன்னிலும் கூடுதலாகச் செயல்பட தூண்டபடுகின்றன. உணவின்றி இருப்பவர்கள், பலவீனமாக இருப்பவர்கள், இரத்தக்கசிவு நோய்க்கு ஆளானவர்கள், வெகுநாட்கள் நோய்வாய்பட்ட நிலையில் குணமடைந்து வருபவர்கள் ஆகியோடம் காண்பதைப் போல இரத்தத்தின் அளவு குறைந்து இரத்தச்சோகை உண்டாகிறது. ஓரளவு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்ள வாய்ப்புள்ள பெண்ணானவள் தனது பேறுகாலத்தில் இழந்தவற்றை, அதிகச் சிரமமின்றி திரும்பப்பெற ஓரளவு வாய்ப்புண்டு. ஆனால் பெரும்பாலானப் பெண்கள் மகப்பேறுகாலத்தில் பதாபமான முடிவுகளையோ அல்லது குறைந்தபட்சம் ஆபத்தான விபத்துகளையோ சந்திக்கிறார்கள்.

உடல் பலவீனமும், சுகாதாரமின்மையுமுள்ள கிராமப்புற பெண்கள், தாய்மை அடைவதையும் பார்க்கிறோம். பிரசவம் என்பது அதிக உடல் வருத்தத்தைத் தருவது மட்டுமல்ல ஆபத்தானதுங்கூட. இம்மாதியான நெருக்கடிகளில் உடலானது உயிருக்கோ, தொடர்புடைய நபருக்கோ எந்த விதத்திலும் நம்பகத் தன்மைகொண்டதாக இருப்பதில்லையென்பதை மிகத் தெளிவாக அறிகிறோம். குழந்தை இறந்து பிறப்பதும் அல்லது குழந்தை உயிர்பிழைக்க தாய் இறப்பதும் அல்லது இருவருமே பிழைத்து வந்தாலும், இறக்கும்வரை பீடிக்கிற நோய்க்கு தாய் பலியாவதும் நடக்கிறது.

பாலூட்டவதும் மிகக் கொடூரமான பணி. இங்கேயும் புரோஜெஸ்டின்(progestine) என்கிற சுரப்பி முக்கியப்பங்கினை வகிக்கிறது. மார்பகங்களில்் பாலினைச் சுரக்கச் செய்வது இதுவே. கூடுதலாகச் சுரக்கிறபோது வலிக்கிறது. சில நேரங்களில் காய்ச்சலும் வருவதுண்டு. தமது ஆரோக்கியத்தை குலைத்துக்கொண்டே அவை பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுகின்றன. மகப்பேறு, சம்பந்தபட்ட உயிரினை பரிதாப நிலையில் வைப்பதோடு, அதனுடலுக்கும் ஏதேனும் நேர்ந்துவிடுமோவென்ற கவலையை அளிக்கிறது. “பெண்களுக்கான நோய்கள் வயிற்றில் இருக்கின்றன” எனச் சொல்ல கேட்டிருக்கிறோம்.

உண்மைதான், அவளுக்கான பகையாளி தனிமத்தை, அரிக்கும் கறையானை பத்திரப்படுத்தி வைத்திருப்பவள் அவள்தான். சூற்பையில் ஏற்படும் அசாதரண நிகழ்வு, கருப்பை நீர்மத்தில் எதிர் விளைவினை ஏற்படுத்த குறை பிரசவத்திற்குக் காரணமாகிறது; மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மஞ்சள் படலம் கரைந்து போகாமல் தங்கிப் போவதால் கருப்பை பாதிப்புக்குள்ளாகிறது. ஆக ஒரு பெண்ணுக்கான எதிரிகள் அவளுடைய உடலுக்கு வெளியிலிருந்து வருவதில்லை. பெண்ணானவள் உயிரின் மிகக்கொடிய ஆதிக்கத்திலிருந்து மீண்டும் தப்பிக்க வேண்டி யிருப்பது அவளது மாதவிடாய் ஓய்வுக்காலமான நாற்பத்தைந்து வயதிற்கும் -ஐம்பத்தைந்து வயத்திற்குமான இடைப்பட்டக் காலத்திலாகும். இது ஒரு பெண் பருவமுறுகிறபோது உட்படுகிற மாற்றங்களுக்கு எதிரிடையானது. சூலகத்தின் செயல்பாடு குறைவதோடு மட்டுமல்ல ஒரு கட்டத்தில் இல்லையென்றாகிறது.

அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணின் திறல் நலிவுறுகிறது. சுரப்பிகள் சிதைமாற்றத்திற்கு உள்ளாகின்றன. சூலகம் ஓய்ந்துவிட்ட நிலையில் அதற்கும் சேர்த்து தைராய்டும், பிட்யூரிட்ட சுரப்பியும் உழைக்கின்றன. வயதுகாரணமாக உண்டாகும் உளச் சோர்வோடு, தகிக்கும் வெப்பம், இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, சிலநேரங்களில் பாலுறவில் நாட்டமென, பிரச்சினைகள் அதிகக்கின்றன. ஒரு சில பெண்களுக்கு திசுக்களில் கொழுப்பு சேர்ந்துபோக, வேறு சிலர் ஆண்தன்மை அடைகிறார்கள். பல பெண்களுக்கு உட்சுரப்பி(endocrine) சமநிலை ஏற்படுகிறது. பெண், பெண்பாலுக்குண்டான தளையிலிருந்து விடுபட்டவளாகிறாள்.

இந்த நிலையில் பெண்ணை ஓர் அரவானியுடன் ஒப்பிடலாமென்றால் இயலாது. ஏனெனில் அரவானியின் வீரியத்திற்கு இழப்புகளில்லை. ஆனால் இதுவரை அவள் சேவகம் செய்துவந்த அவளது சக்திக்கு அப்பாற்பட்ட ஏவலிடமிருந்து அவள் விடுதலை பெற்றிருக்கிறாள் என்று கருதலாம். முதன்முதலாக அவள் அவளாக இருக்கிறாள். ஒருசிலர் வயதான பெண்களை மூன்றாம் இனம் என்கிறார்கள். அவர்கள் ஆண்களல்ல அடுத்து அவர்களைப் பெண்ணின மென்று அடையாளப் படுத்திய சுரப்பிகளின் பணிகள் இல்லை என்றாகியதால், இனிப் பெண்களுமல்ல. உடலியலின் இப்புதிய குறியீடானது, சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரைப் கண்டிராத ஆரோக்கியம், சீரான உடல்நிலையென்ற அளவீடுகளைப் பொருத்தது.

பாலியல் அடிப்படையிலான இப்புதிய வேறுபாடு, பெண்ணிற்கென சில தனித்தன்மைகளை வழங்குகின்றன. அத்தகுதிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிலவிளைவுகளுக்குப் பொறுப்பேற்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சுரப்பிகளின் பணிகளே பெண்ணுடலைத் தீர்மானிக்கின்றன. ஓர் ஆணைக்காட்டிலும் பெண் என்பவள் பொதுவாகச் சிறியவள். எடையில் குறைந்தும், மெலிந்த எலும்புக்குச் சொந்தக் காரியாகவும் இருக்கிறாள்.

கருவுருதல் மற்றும் பிள்ளைப்பேறு இரண்டிற்கும் உதவுகிற வகையில் பெரிய இடுப்பும், ஆணைக்காட்டிலும் சீரான உடல் வடிவமும் கொண்டவள். உருவ இயல், சருமம், மயிர் எனப் பொதுத் தோற்றத்திற்கான காரணிகளுக்கிடையே ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வேற்றுமைகளிருக்கின்றன. தசைக்கான வலிமையில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் 3:2 என்ற அளிவலிருக்கிறது. நுரையீரல், மூச்சுக்குழல், சுவாச திறனும் பெண்ணுக்குக் குறைவு. குறிப்பாக குரல்வளையில் ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள பேதத்தினை, குரல்கள் மூலம் அறிகிறோம். அவ்வாறே பெண்ணொருத்தியின் இரத்த அளவு ஆணைக்காட்டிலும் குறைவு. குறைவான இரத்தப்புரதம் பெண்களை எளிதாக இரத்தசோகைக்குப் பலியாக்குகிறது.

அவர்கள் நாடி அதிகமாக துடிக்கின்றன. அவள் வெகு எளிதாக கன்னம் சிவப்பது உறுதி வாய்ந்த இரத்த நாளங்களின்மையால். பொதுவாக பெண்ணின் எல்லா உறுப்புகளிடத்திலும் இத்தகைய வலுவற்ற தன்மையைப் பார்க்கிறோம். ஆண்களிடத்தில் இந்த உறுதிப்பாட்டின் நன்மையை பேறு காலங்களிலும் அதிகஅளவில் கால்சியம் உப்பு பெண்ணுடலிலிருந்து வெளியேறுகிறது. கருமுட்டைகள் இங்கே சிதைமாற்றத்திற்கு உட்படுகின்றன. விளைவு கருமுட்டைகளின் உறுதிப் பாடற்றதன்மையே அவற்றின் இருப்பைக் கலைத்து போடவும் காரணமாகின்றன. கருமுட்டைகளின் இருப்பில் ஏற்படும் இத்தகைய ஒழுங்கின்மை, ஆணுடையதைக் காட்டிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ள பெண்ணுடைய தைராய்டு சுரப்பியையும் விட்டுû வப்பதில்லை. பெண்ணின் உட்சுரப்பிகளில் (endocrine) ஏற்படும் மற்றும் நரம்புகளின் கட்டுப்பாட்டில் குழப்பம் ஏற்படுகிறது.

பெண்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இம்மாற்றத்தினை இரத்தநாளங்களிலும் உணருகிறோம். இதயம் வேகமாகத் துடிக்கிறது. முகம் சிவந்து போகிறது. இது தொடர்பான இதர விளைவுகளிடமிருந்தும் பெண்கள் தப்புவதில்லைங: கண்ணீர் சிந்துவது, பைத்தியகாரி போல சிரிப்பது, வலிப்புநோய்க்குப் பலியாவது மேற்கண்டவைகளோடு, எதேச்சதிகாரசக்திக்கு விட்டுக்கொடுத்து பெண் படுகின்ற வேதனைகள் ஏராளமென்று, உயிரியல் தரவுகளில் மேற்கொண்ட ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன: பெண்ணினப் பாலூட்டிகளில் முற்றாக தனது உடல் மீதான உரிமையை இழப்பவளும், அந்த இழப்பிற்கெதிராக யுத்தத்தில் இறங்குவதும் அவளே: வேறெந்த அடிமை முறையிலும், இனப்பெருக்க நிகழ்வு இந்த அளவிற்குக் கோலோச்சுவதோ, அதன் செயல்பாடுகளை மிகுந்த மனவேதனைகளுடன் ஏற்றுகொள்வதோ இல்லை: பருவமடைகிற காலம், மாதவிடாய் நிற்கிற காலம், மாதாந்திர சாபங்கள், பெரும்பாலும் சங்கடத்துடனான நீண்ட பேறுகாலம், பிரசவகாலங்களில் ஏற்படும் வலிகள், ஆபத்து, நோய்கள், விபத்துகள் என மானிடனத்தில் பெண்பாலுக்கான குணாசியங்களைப் பார்க்கிறோம்.

தனது தனித்துவத்தை நிலைநிறுத்திக்கொள்ள அவள் நடத்தும் யுத்தத்தில், எதிரியான ஊழிற்கு வலிமை அதிகமென்றே தோன்றுகிறது. ஆணினத்தைப் இத்துடன் ஒப்பிடுகிறபோது, கூடுதலான சலுகைகள் பெற்றிருப்பது விளங்கும். அவனது பிறப்புறுப்பு வாழ்க்கை, அவனது தனித்துவத்திற்கு எதிரானதல்ல.

அதன் பணிகள் தொய்வில்லாமல், நெருக்கடி களின்றி, பொதுவாக விபத்துகளைச் சந்திக்காமல் நடக்கின்றன. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக உயிர்வாழ்வது உண்மை என்ற போதிலும், அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் அவர்களே. பெரும்பாலான நேரங்களில் பெண், அவளுடையக் கட்டுபாட்டில் இல்லை என்பதும் வெளிப்படை.

உயிரியல் தரவுகள், பெண்ணைப்பற்றி அறிய உதவும் மிகமுக்கியமான காரணிகள். பெண்களின் வரலாற்றில், அவை முதன்மையிடம் வகிக்கின்றன. இனி பல இடங்களில் சொல்லவிருக்கிற விளக்கங்களுக்கு, இவற்றை எடுத்தாள வேண்டியுள்ளது. உலகில் நமது நிலைமையைத் தீர்மானிப்பதில் உடலுக்கும் பங்குண்டு. எனவேதான் உயியல் தரவுகளைப் பற்றி அதிகமாக தெந்து கொண்டோம். பெண்ணைப் புரிந்துகொள்ள உதவும் திறவு கோல்களில் அவைகளும் ஒன்று. ஆனால் அவற்றையெல்லாம் பெண்ணுக்கென எழுதப்பட்ட விதியென்று நம்ப நாம் தயால்லை. உயியல் தரவுகளின் அடிப்படையில் பெண்ணின் படி நிலையை, கணக்கிடுவதும், அவளை வேறு தேசத்தவளாக அதாவது அந்நியராக(other)ப் பார்ப்பதும், கூடாதென்பது நமது வாதம். அதுவும் தவிர உயியல் தரவுகள், ஆண்டாண்டுகாலத்திற்கு பெண்களை அடிமைகளாக இருக்கப்பட வேண்டி யவர் களென்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை.

- தொடரும்.....



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
கிரிஜா ம‌ணாள‌ன்
2008-02-26 04:09:00
girijamanaalan2006@yahoo.co.in

பெண் என்றால் ம‌லிவுச் ச‌ர‌க்காக‌ நினைத்துகொண்டிருக்கும் எத்த‌னையோ ஆண்க‌ள் இந்த‌க் க‌ட்டுரையைப் ப‌டிக்க‌வேண்டும். அப்போதுதான், அவ‌ள் இய‌ற்கை த‌ன‌க்கு அளித்துள்ள‌ எல்லா வ‌லிக‌ளையும் பொறுத்துக்கொண்டு, ஒரு ஆணின் ம‌கிழ்ச்சிக்காக எவ்வ‌ள‌வு தியாக‌த்தைச் செய்கிறாள் என்ப‌து அவ‌ர்க‌ளுக்கு விள‌ங்கும்.
> கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.




























































கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP