Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Anangu
Anangu Logo
டிசம்பர் - பிப்ரவரி 2007


மரகதமணி கவிதைகள்

பெரிய திரை

மாதத்தின் சில நாட்களில்
செல்லாத காசாகிறேன்
சில்லறைகளை பொறுக்கிப் பொறுக்கி
மூளையில் குவித்தபடி

என்னை ஒதுக்கி வைக்கும்
அந்த நாட்களினூடே
அதிகமான புழக்கமும் புழுக்கமும்
நெருஞ்சி முள்ளாய்
என் உடலெங்கும்

என் வீட்டு
பரமசிவனின் பூஜை அறை
போர்த்தப்படுகிறது பெரிய திரையால்
பார்வதிதேவி எங்கு
போவால் அந்த
மூன்று நாட்களில்

பாசி



கறையேறிய சுண்ணாம்புப் பூச்சில்
சில சில கறையான்களும்
பலவகையான பல்லிகளும்
ஓடி விளையாட
பூ நிறைந்த மைதானமாயின
நாய்க்காரக் கிழவியின் வீடு

சீக்குப்பிடித்த கோழி
சொறிப்பிடித்த நாய்
ஊனமான ஆடு என
சிரிப்பும் பாட்டுமாய்
நாய்க்காரக் கிழவியின் வீடு

ஊரின் ஒட்டுமொத்த
பழைய சோற்றையும்
ஊசிப்போன குழம்பையும்
முகம் சுளிக்காமல்
தனது வட்டிலில் சேர்த்தியபடி
நிலாச் சோறு ஊட்டுவாள்
மூளை வளராது வயதிற்கு வந்த
யாரோ ஒருவனின் வாரிசான
அம்மிணிக்கு
ஊசிபாசிக்காரியின் உதவியோடு
அடிக்கடி
பட்டாபிஷேகம் செய்து பார்ப்பாள்

அடுக்குமாடி குரோட்டன்ஸ்
வரவேற்புப் பளிங்குத்தரை
என எதையும் எழுத இயலவில்லை
பாசிபடர்ந்து பாதியில் தொங்கும்
நாய்க்காரக் கிழவியின் வீட்டைத் தவிர



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.