ஹோமியோபதி கூட்த்திலிருந்து ஆங்கில தடுப்பு ஊசிகளுக்கு ஓர் ஆதரவுக் குரல்
உ. அறவாழி
அன்புள்ள ஆசிரியருக்கு,
தடுப்பு மருந்துகளே தேவையில்லை. ஆரோக்கியமான சத்துணவு, சுகாதாரமான சுற்றுப்புறச் சூழ்நிலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், காற்றறோட்டமுள்ள இருப்பிடம், தேவையான உடற்பயிற்சி, மனமகிழ்ச்சி யூட்டும் வாழ்க்கை முறை போன்றவை அனைவருக்கும் கிடைத்தால் அனைவரும் நோயே இல்லாமல் வாழ முடியும். ஆனால், இந்தியாவின் நிலையென்ன? வறுமையின் பிடியில் சிக்கி, உண்ண போதுமான உணவின்றி, சுகாதார வசதியின்றி, மாசுபட்ட சூழ்நிலையில், போதிய காற்றோட்டமின்றி, நச்சு கலந்த குடிநீரைப் பருகும் ஆரோக்கியமற்ற நிலையில் வாடும் பெருந்திரளான இந்தியக் குடிமக்களிடம் எப்படி நோய் எதிர்ப்புத் திறன் இருக்கும்? இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் கிருமிகளைக் கொண்டு தயாரிக்கப் படும் தடுப்பு மருந்துகளின் வீரியத்தைத் தாக்கும் சக்தி எப்படி இருக்கும்? அதற்காக தடுப்பு மருந்துகளே கூடாது என்பதா? ஆரோக்கியமற்ற இந்தியாவில் உள்ள பிற ஆரோக்கியமான குழந்தைகளை நோய் தாக்காமல் தடுக்க நம்முன் உள்ள வழிஎன்ன? பிற மருத்துவ முறைகளில் உள்ள தடுப்பு மருந்துகளை விரும்புவோர் பயன்படுத்த சுதந்திரம் அல்லது உரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் தடுப்பு மருந்துகளே குழந்தைகளுக்குப் பயன்படுத்தமாட்டேன் என்று கூறிக்கொண்டு எதிர்கால சந்ததிகளை நோயின் பிடியில் சிக்க விடுவதா ? கிருமி களால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன என்ற கருத்தில் மருத்துவ மேதை ஹானிமனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அலோபதி மருந்துகள் எந்த மருத்துவ விதியின் அடிப்படையில் தயாரிக் கப்படுகிறதோ, அந்த விதியின் அடிப்படையில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படவில்லை. எனவே, தடுப்பு மருந்துகள் அலோபதி மருந்துகளை போன்று நோயை உடலின் ஒரு பகுதியில் அமுக்கி உடலின் வேறு பகுதியில் வேறு நோயால் வெளிப்படச் செய்யாது.
அதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. ஏனெனில் அவை (ஐள்ர்ல்ஹற்ட்ஹ்) ஐசோபதி முறையில் தயாரிக்கப்படுபவை. நோய்த்தொற்று ஏற்படும் இந்தியச் சூழலில் தடுப்பு மருந்துகள் அவசியமே, ஆனால் தடுப்பு மருந்துகளின் வீரியத்தைத் தாங்க முடியாத குழந்தைகளுக்கு மாற்று மருத்துவ தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். தடுப்பு மருந்து பிரச்சினையை அரசியல் படுத்த வேண்டாம்.
ஆசிரியர் குறிப்புகள் :
1. ஆளும் கட்சியான அரசியல் கட்சியினர் எதிர்கட்சியான அரசியல் கட்சியினரை பார்த்து, ‘மாணவர் பிரச்னையை அரசியலாக்காதீர் குடிநீர் பிரச்சனையை அரசியலாக்காதீர்’ ‘அதை அரசியலாக் காதீர்கள்’, ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று கூறுவதைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆளும் கட்சி தொனியில் அறவாழி சொல்கிறார் தடுப்பூசி மரணங்களை அரசியலாக்காதீர்கள் என. மாற்று மருத்துவம் அரசியல் ஏடும் அல்ல. நமது பணி அரசியலுமல்ல. இன்னொரு கோணத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டது ஏதுமில்லை என்பதை மறுப்பதற்குமில்லை.
2. சத்துணவு, சுகாதாரமான சுற்றுச் சூழல், வறுமைக்கு ஒருபோதும் தடுப்பூசி மாற்றாகாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்குமே தடுப்பூசி மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இங்கு அளவில் அதிலும் அவ்வளவே. தடுப்பூசிகளால் பக்கவிளைவு ஏற்படாது என்று கூறும் அறவாழி சுமார் 10 ஆயிரம் இணையதளங் களில் தடுப்பூசி மரணங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய ஆதாரங்களை வெளிச்சமிட்டு காட்டுவதை பார்த்தறிய வேண்டும். ஏழைக்குழந்தைகள் மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளும் பாதிக்கப்படு கின்றனர் என்பதே நிஜம்.
3. தடுப்பூசிகள் தடுக்கப்பட வேண்டும், தற்காலிகத் தீர்வாக ஹோமியோ தடுப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரந்தரமான தீர்வென்பது ஆரோக்யமான வாழ்க்கை வழங்கப்படுவதே.
4. அறவாழி கடிதம் எழுதிய பின்னும் கூட அவர் வாழும் சென்னை அயனா வரத்திலே குழந்தை மரணம் நேர்ந்துள்ள தையும் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் இதயங்களை தொடும் இரங்கல் உரையாற்றியுள்ளதையும் இந்த இதழின் தலையங்கத்திலேயே காணலாம்.
5. அமெரிக்காவில் 1989ல் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கட்டாய அம்மைத் தடுப்பூசி போடப்பட்டபின் இஈஇ (இங்ய்ற்ழ்ங் ச்ர்ழ் ஈண்ள்ங்ஹள்ங் ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப்ங்) அமைப்பு நடத்திய ஆய்வின்படி 90 % குழந்தைகளுக்கு அம்மை தாக்கியது அம்பலமானது. போலியோ சொட்டு மருந்தின் தந்தை ஜோனல் சல்க் அமெரிக்க செனட்சபையில் இம்மருந்துக்குப் பின் ஏற்பட்ட எண்ணற்ற போலியோ தாக்குதல் பற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். மஞ்சள்காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகளாக 13 நோய்களை மருத்துவ நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ஆங்கிலத் தடுப்பூசிகளை ஐசோபதி யாகப் பார்த்து அறவாழி சிபாரிசு செய்கிறார். ஹோமியோபதி (தடுப்பு) மருந்துகள் மட்டுமே வீரியப்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்டவை நம்பகமானவை. குழந்தைகளை பாதுகாக்க ஏற்றவை.
6. தடுப்பூசி மரணங்களால் குழந்தை களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் அதன் பொருட்டு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வை விதைப்பது மாற்று மருத்துவம் ஏடும் மற்றும் சில இயக்கங்களும் தான். இதனை அரசியலாக்குதல் என கொச்சைப் படுத்தாமல் அனைவரும் இம்முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.
உ. அறவாழி சைதை-சென்னை -15.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|