Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

பாலியல் நலத்திற்கு யோகாசன சிகிச்சை
Dr.A.S. அசோக்குமார் Ph.D., (Y.Sc.,)

இயற்கை விதிகளை மீறும்போது இயற்கை அளிக்கக்கூடிய தண்டனைதான் நோய் பிணிகள். இயற்கை விதிகள் யாவை? இந்த கேள்வி இக்கட்டுரை தலைப்புக்கும் பொருந்தும்.

குடும்பத்தில் பெண்பிள்ளை வயதிற்கு வந்தார் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதை தாய் அல்லது மூத்த சகோதரிகள் அவர்களுக்கு கற்றுத்தருவார்கள். இதே அந்த குடும்பத்தில் ஒரு ஆண்பிள்ளை முதிர்வு நிலை அடையும் போது யாரும் ஏதும் கற்றுத் தருவதில்லை அவர்கள் யாரிடமும் ஏதும் கேட்கமுடியாது இருந்து விடுவர் அதன் பலனாக புத்தகங்களில் பதில் தேடுவர் இவர்களாக ஒரு முடிவுக்கு வருவர் கண்ணை கட்டி காட்டில் விட்டவர் கதைபோல் இவர்கள் நிலைமை

இறுதியில் நவீன (அலோபதி) மருத்துவ டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்பர் அவர் இதை ஒரு பெரிய விஷய மாகவே எடுத்துக்கொள்ள மாட்டார். இதில் இந்த வயதில் இருப்பதுதான் இதற்கு மருந்து அவசியமில்லை என்று கூறி விடுவார். ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் எல்லாம் கற்று தரவேண்டும் என்பது இயற்கை விதி அனுபவத்தால் தெரிந்த கொள்ள நாட்கள் ஆகும் அதனால்தான் பாலியல் கல்வி அவசியம் என்று இப்போது நமது அரசு உணர்ந்து உள்ளது.

சுய இன்பமும் - யோகாசனமும்

இன்று சுயஇன்பம் தவறு என்றும் தவறு இல்லை என்றும் ஒரு பட்டிமன்றமே நடந்து வருகின்றது. ‘அன்னம்போல் எண்ணம்‘ அதாவது பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டிய வயது இளம்வயது திருமணம்நடக்கும் வரை அவன் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும் அவன்தான் திருமண வாழ்க்கையை சிறப்பாக கடைபிடித்து நல்ல குழந்தைகளை பெற்று எடுக்க முடியும் நல்ல வாரிசுகளாக புத்திசாலி பிள்ளைகளாக இருக்கும் என்பது விதி. திருமணம் நடக்கும் வரை வித்தை (விந்துசக்தியை) காப்பாற்ற வேண்டியது இவனது கடமையாகும். ஆனால் பிரம்மச்சரிய உணர்வை கடைபிடிக்காமல் தாய் தந்தை அவர்களுக்கு தேவையான உணவையே நமக்கும் தருவதால் அவர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள் இவனுக்கும் ஏற்பட்டு தவறு செய்து விடுகின்றான். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியாது தோல்வி அடைகின்றான் காரணம் பெற்றோர். ஆதரவு இல்லை இதைபற்றி அக்கரை மற்றும் கல்வி அறிவு இல்லை.

yoga “ அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்“ என்பது பழமொழி இது பாலிய லுக்கும் பொருந்தும் “ விந்துவிட்டான் நொந்து கெட்டான்” விந்து பலம் மனோ பலம் - மனோபலம் ஆன்மபலம் இதற்கு முழு விளக்கம் தருகின்றேன் 13 வயது முதல் 21 வயதுக்குள் அதிகமான பாலுணர்வு ஆசைகள் வலுக்கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்., இதில் மிகவும் பாதகமானதும், ஆபத்தானதும் சுயஇன்பம் பெறுவதாகும் ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரையில் சுயஇன்பத்தால் எந்த பாதகமும் இல்லை என்று கூறிவிடுவார்கள்.

சிறுநீரகம் (கிட்னி) அதன் இயக்கத்தில் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக ஜனன உறுப்புகளில் அது பிரதிபலிக்கும் உதாரண மாக நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக மானது உடலுக்கு உபயோகமற்ற அசுத்த சர்க்கரையை பிரித்து அகற்றக்கூடிய வேலை யை வெகு தீவிரமாக செய்து வருவதால் நாளடைவில் இயக்கத்தில் சிறுநீரகமானது சோர்வடைய ஆரம்பிக்கின்றது. இதன் காரணமாக இந்த நிலையில் “ செக்ஸில்” நாட்டமும் ஈடுபாடும் வெகுவாக அவர்களுக்கு குறைந்து விடும்.

அதிகப்படியாக சுய இன்பம் செய்தல் அல்லது உடல் உறவு கொள்ளுதல் சிறு நீரகத்தை சீக்கிரமே சோர்வடைய செய்துவிடும். நாளடைவில் சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கும் ஒட்டு மொத்தமான உடல் சோர்வுக்கும் நரம்புதளர்ச்சிக்கும், தாழ்வுமனப்பான் மைக்கும், களைப்பிற்கும், நடுக்கத்திற்கும் அதிக பயஉணர்வுக்கும் வழி வகுக்கிறது.

இக்கால இளைஞர்கள் வயதிற்கும் பொறுத்தமில்லாமல் சில நோய்களால் துன்பப்படுகின்றார்கள். இதில் மிக முக்கியமானது. கழுத்து, முதுகு, இடுப்புவலி, ஏதோ ஒன்றின் மீது சாய்ந்து கொள்ளாமல் 1மணி நேரம் கூட பலரால் நிற்பது கஷ்டமாக உள்ளது குறிப்பாக இடுப்புவலிக்கு முக்கியகாரணமாக இருப்பது உணவு ஒழுங்கீனம் ஒருபுறம் இருக்க, அளவுக்கு மிஞ்சிய சிற்றின்ப பழக்கமே ஆகும். இதுதான் எவருக்கும் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுகால் பலவீனம் ஏற்பட அடிப்படை யான ஆரம்ப காரணமாக அமைகிறது. இந்த பழக்கத்திற்கு ஆளாகாதவர்களில் 90சதவீதம் பேருக்கு குறைந்தது 55 வயது வரை இம்மாதிரி நோய்கள் வரும் வாய்ப்பே இல்லை.

இப்பழக்கம் நல்லதே என்றும் இயற்கையானது என்றும் மன உளைச்சல், தனிமை, பயம், சோர்வு போன்றவைகளுக்கு இது ஒரு நல்ல மருத்துவம் போலவும் கூட சிபாரிசு செய்யும் மருத்துவர்களும் இருப்பதுதான் மகா கொடுமை! இது உண்மையானால் மது, கஞ்சா, ஹெராயின், புகையிலை பழக்கம் உள்ளவர்கள்கூட அதனால் தனி உற்சாகம் கிடைப்பதாக கூறுகிறார்கள் அதைமட்டும் கூடாது என்பது ஏன்? இயற்கைக்கு விரோதமானது எதுவானாலும் பலர் செய்கின்றார்கள் என்பதற்காக அதை நியாயப்படுத்த முயலுவது சரியா?

உடலுறவு அல்லது சுயஇன்பப் பழக்கம் அதிகமாகும்போது அடி வயிறும் உள் உறுப்புகளும் சூடாகி பலவீனமடை கின்றன.முதுகுதண்டில் கீழ்பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் நரம்புகள் பல ஜனன உறுப்புடன் தொடர்பு உடையவை. இவை அடிக்கடி காலம் வேளை உடல் பலவீனம் இவற்றை பொருட்படுத்தாமல் இன்ப செய்கையை செயற்கையாக தூண்டப்படும் போது நாளடைவில் பலவீனமடைந்து நோய் ஏற்படும் என்பது உண்மை. இதனால் ஏற்படும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு ஒருமணி நேரம் சப்பணமிட்டு தரையில் உட்கார்ந்தாலோ கால்கள் உணர்வற்று மரத்துப்போவது சகஜமான விஷயம். இப்படி இதன் பின்விளைவுகளை எவ்வளவு பக்கம் வேண்டுமானாலும் எழுதலாம் அது முக்கியமில்லை தீர்வு என்ன?

இதற்கு யோகாசன பயிற்சிகளே தீர்வு ஆகும். அசனம் பாதி ஆசனம் பாதி என்று கூறுவர் அதாவது அசனம் - மருந்துகள் சித்த, ஆயுர்வேதா, ஓமியோ மருந்துகள் தேவைக்கு பாதி ஆகும் மீதி யோகாசன பயிற்சிகள்.

மனிதன் தவறு செய்வது இயல்பு, தெரியாமல் செய்தால் அது தவறு இக்கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தவறு செய்வது தப்பு ஆகும் தெரிந்து செய்து தப்பு என்கிறது தவறு செய்தவர் வருந்தி யாகனும் தப்பு செய்பவர் திருத்தியாகனும் இதுதான் மனிதப்பண்பு. ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை கற்கவேண்டும் என்கிறார். சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகாப் பயிற்சிகள் நல்ல பழக்கத்தை கற்றுத்தரும் அரியப் பயிற்சிகள் என்பது மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

யோகாசன சிகிச்சை அட்டவணை

1. அர்த்த ஹலாசனம், (2) பவன முக்தாசனம், (3) நவ்காசனம் (4) புஜங்காசனம் (5) அர்த்த சலபாசனம் (6) சலபாசனம் (7) மக்ராசனம் (8)வக்ராசனம் (9) மச்சாசணம் (10) விபரீத கரணி ஆசனம். (11) கபாலபாதி கிரியை (12) நாடிசுத்தி பிராணாயாமம்.

மலச்சிக்கலை போக்க பேதி மருந்து சாப்பிடவேண்டும். பித்த ஆதிக்கத்தை சரி செய்ய வாமன தெளிதி கிரியை வாரம் ஒரு நாள் அல்லது 2நாட்கள் செய்ய வேண்டும் (மேலும் விபரம் அறிய எங்களது வெளியீடான “உடல் எடை, தொந்தி குறையயோக சிகிச்சை” நூல் விலை ரூ. 30/- பார்க்கவும்)

உடலும் குடலும் சுத்தமாக இருந்தால் மனம் சுத்தத்தை நாடும், உடலும் குடலும் அசுத்தமாக இருந்தால் மனம் அசுத்தத்தை தான் நாடும். அதனால் கிரியை பயிற்சிகள் யோகாவில் மிகமுக்கியம். மேலும் சிலேத்து மத்தை (கபத்தை) சரி செய்ய வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். யோகாப்பயிற்சிகள் காலை 5-6மணிக்குள் செய்வது நல்ல பலனைத்தரும். காரணம் விடிந்த பின்னும் தூங்கியவன் வாழ்வின் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அதனால் விடியலில் எழுவோம் வெற்றிகள் குவிப்போம். யோகா மூலம் (பாலியல்) ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com