Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

ஹோமியோபதியில் குழந்தையின் உளவியல்
மருத்துவர் டி.பி.பாஸ்செரோவைத் தழுவி தமிழில்: உ.அறவாழி

ஹோமியோபதியில் குழந்தையின் உளவியலை அறிந்துக் கொள்வது என்பது, நோய் வெளிப்படுத்தும் உணர்வு, சிந்தனை மற்றும் உடல் குறிகளைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது என்ப தாகும். குழந்தையின் மாறுபட்ட பண்பு மற்றும் மாறுபட்ட நடத்தை ஆகியவை அக்குழந்தையின் நோய்த்தன்மையில் வெளிப்படுவதாகும். குழந்தையின் இயல்பான நோய் ஏற்புத்திறனும் குழந்தையிடம் ஏற்படும் உணர்வுத் தூண்டலும் குழந்தையின் சுற்றுப்புறச் சூழ்நிலையும் பாதிக்கப்படும் பொழுது அது நோயாக வெளிப்படுகிறது.

குழந்தையின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை ஒத்த ஹோமியோபதி மருந்தில் வெளிப்படும் குறிகளுடன் இணைத்துப் பார்த்து, அக்குழந்தையின் நோயைக் குணப்படுத்துவதே ஹோமியோபதியின் சாரமாகும். ஆனால் நோயின் தன்மையை மருத்துவர் முழுமையாகப் புரிந்து கொள்ள உளவியல் அறிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒரு குழந்தையின் இயல்பான மனப்பாங்கு நிலையை அறிந்து கொள்வதன் மூலம் அக்குழந்தையிடம் ஏற்படும் நடத்தைக் கோளாறுகளை குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவம் உளவியல் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஹானிமன் தனது “நாட்பட்ட நோய்கள்” என்ற நூலில் குறிப்பிட்டபடி சோரா நச்சுதான் ஒரு குழந்தையின் உயிராற்றலில் ஒருங்கிண்மையை ஏற்படுத்தி, அக்குழந்தையின் மனச்சமநிலையை குலைக்கிறது. இதுதான் குழந்தை யிடம் பதட்ட நிலையைத் தோற்றுவிக்கின்றது. சோராநச்சுதான் நோய் ஏற்புத்திறனை அதிகரித்து, அதற்குச் சிடுசிடுப்புத் தன்மையை உண்டாக்குகிறது. குழந்தை தன் தாயின் கருப்பையிலிருந்து பிரிந்து, இவ்உலகை எட்டிப்பார்க்கும் தருணத்தில், சோரா நச்சு அதன் மூதாதையரிடமிருந்து தாயின் மூலம் கடத்தப்பட்டு, குழந்தையின் உள்ளத்தில் குடிபுகுந்து, அதற்கு இவ்உலகைக் கண்டு அச்சப்படும் போக்கையும், ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

தாயின் கருவறையிலிருந்து பிரிந்து, இப்பூலகை எட்டிப் பார்க்கும் குழந்தை, இப்புதிய சூழ்நிலை தனக்குப் பொருந்திப் போகுமோ என தனக்குள் ஒரு பதட்ட உணர்வை உருவாக்கிக் கொள்கிறது. அதிர்ச்சியூட்டக்கூடிய அனுபவங்களை எதிர்நோக்கி, அது தனக்குள் கவலைகளை வளர்த்துக் கொள்கிறது. தனது உடனடித் தேவைகளான உணவு மற்றும் பாதுகாப்புக் குறித்து அச்சமடைகிறது.

உளவியல் விஞ்ஞானம் இன்று நமக்கு விளக்கும் குழந்தையின் ஆழ்மன விருப்பம் அதாவது குழந்தையின் இச்சை உணர்வு பற்றி ஹானிமன் ஹோமியோபதியில் குழந்தையின் பண்புக் குறிகள் என்று குறிப்பிடுகிறார். சோரா நச்சுவின் விளைவால் குழந்தையின் மனப்பாங்கில் ஒழுங்கின்மை ஏற்பட்டு, அது ஜீரணமண்டலத்தைப் பாதித்து, வயிறு சம்பந்தப்பட்ட உடற்குறிகளாக வெளிப்படுகிறது என்கிறார்.

பசியுணர்வில் ஒழுங்கின்மை, உணவைப் பற்றிய விருப்பு - வெறுப்புகளில் பாதிப்பு, உவர்ப்பு, இனிப்பு, கொழுப்பு மற்றும் ஜீரணிக்க இயலாத பொருட்களின் மீது ஆவல் போன்ற பொதுமைக் குறிகளாக இவை வெளிப்படுகின்றன என்றார். இதோடு கூட, வயிறு சம்பந்தப்பட்ட மனக்குறிகளும் வெளிப்படுகின்றன என்கிறார்.

பதட்டத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்படுவது தான் விரும்புவது எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், வயிற்றுக்குள் ஒரு பந்து உருள்வது போன்ற உணர்வு தோன்றுதல், பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்பட்டதன் விளைவாக மனதில் சில வயிறு சம்பந்தப்பட்ட குறிகள் தோன்றுதல் முதலியன அவைகள். இவை குழந்தையின் மன அழுத்தத்தையும், அச்சத்தையும் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான கருப்பையிலிருந்து வெளியேறிய பின்னர், உலகின் புதிய சூழ்நிலை எங்கே தன்னை அழித்துவிடுமோ என்ற குழந்தையின் பாதுகாப்பற்ற உணர்வை மேற்குறிப்பிட்ட குழந்தையின் மனம் மற்றும் உடல் குறிகள் நமக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன.

ஹானிமன் குறிப்பிடும் இச்சோரா நச்சு என்பது தொற்றும் தன்மை வாய்ந்த நோய்க்கிருமி அல்ல. எனவே அது பிறகுழந்தைகளுக்கு தொற்றிவிடுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. சோரா நச்சு என்பது தனிப்பட்ட குழந்தையின் கூர் உணர்வால் உருவாவதாகும். அதே போல எல்லாக் குழந்தைகளையும் பாதிக்கும் என்றும் அச்சப்படத் தேவையில்லை. அது தனிப்பட்ட குழந்தையின் நோய் ஏற்புத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். சோரா நச்சு என்பது நமது கண்களுக்குப் புலனாகாத அரூப சக்தியாகும். குழந்தையின் மனச் சமநிலையில் ஏற்படும் சீர்கேடாகும். குழந்தையின் மூதாதையரின் உள்ளுணர்வில் பதுங்கிக் கிடந்த மரணபயத்தின் தொடர்ச்சி யாகும். பிறந்த குழந்தையிடம் உள்ள உயிராற்றல் இக்கொடிய நச்சுத் சக்தியை எதிர்த்துத் தொடர்ந்து போராடுகிறது.

இப்பூவுலகில் காலடி எடுத்து வைக்கும் குழந்தை தன்மேல் பிறரால் திணிக்கப்படும் வன்முறையை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. தினசரி வாழ்வில் தனது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அது தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாய் அது மனதில் ஏற்படும் பல காயங்களைத் தாங்க வேண்டியுள்ளது. இந்தப் பாதிப்புகளை யெல்லாம் குழந்தையிடமிருந்து முழுமையாக நீக்க வேண்டிய கடமை ஹோமியோபதி மருத்துவருக்கு இருக்கிறது.

குழந்தையின் வளர்ச்சிப் போக்கில், அதன் மனதில் ஏற்படும் எல்லா பாதிப்பு களையும் நீக்க வேண்டிய கடமை, ஹோமியோபதி மருத்துவர் முன் உள்ளது. குழந்தை தன் தொப்புள்கொடியை தாயிடமிருந்து துண்டித்துக் கொண்டதி லிருந்து இது தொடர்கிறது. வன்முறைக்கும், பதட்ட உணர்வுக்கும் இடையே சிக்கிக் கொண்ட குழந்தையிடம் தோன்றும் இந்த முரண்பாட்டைத் தீர்த்து வைக்கவேண்டிய கடமை ஹோமியோபதி மருத்துவர் முன் உள்ளது. பதட்ட உணர்வு என்பது குழந் தையை அதன் தாயுடன் பிணைப்பது போலவே, வன்முறை என்பது அதன் தந்தையு டனும், சக உதிரர்களுடனும் பிணைக்கிறது. வன்முறை குழந்தையிடம் குற்ற உணர்வை உருவாக்குகிறது. இதுவே குழந்தையிடம் தோன்றும் பல நோய்களுக்குப் பிறப்பிடமாகவும் உள்ளது.

வன்முறைக்கும், பதட்ட உணர்வுக்கும் இடையே சிக்கிக்கொண்ட குழந்தையிடம் தோன்றும் இம் முரண்பாட்டை இன்னமும் ஒரு புதிரான தாகவே வைத்துள்ள உளவியல் விஞ்ஞானம் அதே நேரத்தில் குழந்தையின் உளப்பாது காப்புக் கவசம் தான் இந்த முரண்பாட்டைத் தீர்த்து வைக்கும் ஒரே கருவி என வரையறுக் கிறது. குழந்தையின் நோயைப் பற்றிய சித்திரத் தை உளவியல் நிபுணர் விளக்கிக்கொள்ள இந்த உளப்பாதுகாப்புக் கவசம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்று உளவியல் விஞ் ஞானம் பறை சாற்றுகிறது. குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை விளக்க உளவியல் நிபுணருக்கு குழந்தையின் இந்த உளப்பாதுகாப்புக் கவசம் தான் ஒரே கருவியாக உள்ளது.

இந்த உளப்பாதுகாப்புக் கவசத்தைப் பற்றி தெளி வாக புரிந்துக் கொள்ளாத உளவியல் நிபுணரால் அக்குழந்தைக்கு ஏதும் உபயோக மில்லை. இந்த வன்முறைக்கும், பதட்ட உணர்வுக்கும் இடையே உள்ள முரண்பாட்டி லிருந்து விடுபட, குழந்தையின் உயிராற்றல் தொடர்ந்துப் போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் சோரா நச்சு வெற்றி பெற் றால் குழந்தையின் மனதிலும் உடலிலும் நோய் தோன்றுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த நோயின் உள்ளடக்கத்தைப் போலவே குறிகளை உடைய ஒத்த ஹோமியோபதி மருந்து தேவைப்படுகிறது. அந்த மருந்தைத் தேர்ந்தெடுக்க நோயின் உண்மையான உள்ளடக்கத்தையும், ஒத்தகுறிகளையுடைய ஹோமியோபதி மருந்தின் உள்ளடக்கத்தையும் புரிந்துக் கொண்ட ஹோமியோபதி மருத்துவரால் தான் முடியும்.

என்னிடம் ஒரு பெண்குழந்தையை, வலது பாதத்தில் ஏற்பட்ட சுளுக்குக்காக பத்து
மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார்கள். அதற்குப் பிறகு பதினைந்து நாட்கள் கழித்து, அவளது வலதுகால் மூட்டில் வீக்கமும், வலியும் ஏற்பட்டதற்காக அழைத்து வந்தார்கள். அவளது வலதுகால் மூட்டில் வீக்கமும், வலியும் ஏற்பட்டதற்காக அழைத்து வந்தார்கள். அவளது வலதுகால் மூட்டைச்சுற்றிலும் நீர்க்கோர்த்துக்கொண்டு இருந்தது. இதனால் அப்பெண் குழந்தைக்கு வாதமூட்டழற்சிக்கான சிகிச்சையே அளித்தேன். ஆனால் அதற்குப் பின்னர் அக்குழந்தை உண்மையில் வாதமூட்டழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை தட் பரிசோதனை மூலம் அறிந்துக் கொண்டேன். எனவே அவளைப் பின்னர் உளவியல் ரீதியில் அணுகினேன்.

அப்பெண்குழந்தை தனிமையில் இருக்க அச்சம் கொள்வது தெரிந்தது. இரவுவேளைகள் வந்தாலே மிகவும் பயந்து போகிறாள். தாயின் அரவணைப்பிலிருந்து சிறிதளவு விடுபடவும் அச்சம் கொள்கிறாள் தான் தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து விடுவோமோ என்ற பதட்டம் அவளை ஆட்கொள்கிறது. அந்த அளவிற்கு அவள் தாய்தந்தையரின் நெருக்கத்தை விரும்புகிறாள் என்பது தெரிந்தது. பல இரவுகளில் தூக்கத்தில் அவள் பயங்கரக் கனவுகள் கண்டு அலறி அடித்துக் கொண்டு எழுந்திருப்பதாக அவள் தாய் என்னிடம் கூறினாள். குழந்தை தான் மிகவும் பலகீனமாக இருப்பதாக அவளே கூற அறிந்துக் கொண்டேன்.

அவள் வயதை யொத்த பிற பெண்குழந்தைகளைப் போல அவள் புத்திசாலியாக இல்லை என்பது அவளது தாயின் கணிப்பு. ஆனால் அப்பெண் குழந்தை நல்ல உடல்நிலையுடன் சாதரண மாகவே இருப்பதாக எனக்குப் பட்டாள். ஆனால் அவள் என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்தபோது அவள் தந்தை மாரடைப் பால் காலமாகியிருப்பதை அறிந்தேன். தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட அவள் உடனே சுயநினைவு இழந்ததாக அவள்தாய் கூறினாள். தந்தையின் மரணம் அவளை உணர்வுரீதியல் அந்த அளவுக்கு பாதித்திருந் தது. அவளுக்கு எவ்வளவு ஆறுதல் கூறிய போதிலும் அன்று அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை.

அவள் தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவள் தந்தையின் கல்லறைக்குச் சென்றாள். அப்போது தந்தையின் நினைவிடத்தில் தடுக்கி விழுந்து அவளது வலதுகால் பாதத்தில் சுளுக்குப் பிடித்துக்கொண்டது. அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவளது வலதுகால் மூட்டு வீங்கி வலியெடுத்தது. அப்பொழுதான் என்னிடம் சிகிச்சை பெற அச்சிறுமியை அழைத்து வந்தார்கள். அதற் குப் பிறகு ஒரு மாதம் கழித்து, அவள் கடைவாய் பல்லில் சொத்தை ஏற்பட்டது. பின் அது வீங்கி அது கீழ்பிடித்துக் கொண்டு ஃபுளூக்காய்ச்சலாக மாறியது. பின் நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டது. சில வாரங் களுக்குப் பின்னர் அவள் கண்கள் வீக்கம் கண்டு பீளைத் தள்ளியது.

அவளது இவ்வளவு பாதிப்புக் களுக்கும் ஒரே காரணம் அவள் தந்தை இறந்த பிறகு அவள் மனதில் ஏற்பட்டிருந்த அதிர்த்தி தான் என்பது எனக்குப் புலப்பட்டது. அந்த
அளவுக்கு அவள் தந்தையிடம் பாசம் கொண்டிருந்தாள். அச்சிறுமியின் மனதை அவளது, தந்தையின் மரணம் அந்த அளவுக்கு பாதித்திருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தக் குழந்தையிடம் பதுங்கிக் கிடந்த சோரா நச்சு அவள் உயிராற்றலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பது பற்றிய தெளிவான சித்திரம் எனக்குப் புலப்பட்டது. துயரர் ஆய்வில் அவளது உடலமைப்பு பற்றியும் அவளது மனப்பாங்கு பற்றியும் நான் அறிந்து கொண்டதை இணைத்துப் பார்த்து அவளுடைய பதட்ட உணர்வைப் போக்கும் ஒத்த குறிகளையுடைய ஹோமியோ மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவளது நோயை முழுமையாகக் குணப்படுத்தினேன். நான் அவ ளுக்கு கல்கேரியா கார்பானிகா என்ற ஹோமியோ மருந்தைத் தேர்ந்தெடுக்க அவளிடம் தென்பட்ட பின்வரும் குறிகள் உதவின.

அவளுடைய குடும்ப உறுப்பின ருக்கோ அல்லது அவளுக்கோ ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு. (அவள் அச்சப்பட்டது போலவே அவளு டைய தந்தைக்கு மரணம் நிகழ்ந்தது)

• இரவு நேரம் குறித்த அச்ச உணர்வு
• தனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு
• பிற சிறுமிகளைப் போல தான் இயல்வாக இல்லை உணர்வு (அவளது தாயும் அவளைப் பற்றி அப்படித்தான் கூறினாள்)
• வயிற்றிலிருந்து தலைக்கு ஏதோ ஒரு பொருள் எழும்புவது போன்ற உணர்வு.
• காற்றில் தான் மிதப்பது போன்ற உணர்வு.
• தலை, கை, வயிறு போன்ற உடற் பகுதிகள் குளிர்ந்திருப்பது போன்ற உணர்வு
• கால் வியர்த்து காலின் உட்பகுதி மிகவும் குளிர்ந்திருப்பது போன்ற உணர்வு.
• தலை முழுவதும் வியர்ந்து தலையணையில் ஈரம் பாய்ந்திருப்பது.

உணர்ச்சிகளால் உருவாகும் உடல் நோய்கள் பற்றி ஹானிமன் என்ன கூறுகிறார் என்றால், மனிதனுக்கு உடலில் ஏற்படும் துயரங்களை அவன் மனதிலிருந்து தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்கிறார். மன இயக்கத்தை உடல் கட்டமைப்பிலிருந்து தனியே பிரித்துக் பார்க்க கூடாது என்கிறார். உயிராற்றலை எப்படி ஒருவனின் ஆன்மா இயக்குகிறதோ அது போலவே, அவன் உடலையும் அது கட்டுப்படுத்துகிறது. இதைப்போலவே ஹோமியோபதியில் மனக்குறிகள் மனித ஆளுமையையும், மனிதப் பண்பையும் இயக்குகிறது. அது போலவே உடலமைப்பை மாறுமைகள் தீர்மானிக்கின்றன.

ஹோமியோபதி மருத்துவர் குழந்தையிடம் ஏற்படும் மனப் போராட்டங்களை நக்கு விளங்கிக் கொள்வாரேயானால் அக்குழந்தையின் மனக்குறிகளையும், உடற்குறிகளையும் நலப்படுத்தும் ஒத்த ஹோமியோபதி மருந்தையும் தேர்ந்தெடுத்துவிடுவார்.

என்னிடம் ஒரு நான்கு வயது சிறுமியை அவளது இரண்டு முழுங்கால் மூட்டுக்களிலும் மற்றும் கணுக்கால்களிலும் வீக்கம் இருப்பதாகக் கூறி அழைத்து வந்தார்கள். அவளது கால் மூட்டுக்களில் தாங்கமுடியாத வலி இருப்பதாகவும், இயல்பாக அவளால் நடக்க இயலவில்லை என்றும் கூறினார்கள். கடந்த எழுபது நாட்களாக படுத்தபடுக்கையில் இருப்ப தாகவும் கூறினார்கள்.

அவளுக்கு அலோபதி மருத்துவ முறையில் இதுவரை சிகிச்சையளித்தும், பலன் ஏதும் கிட்டவில்லை என்றும் கூறினார்கள். அலோபதி மருந்துவமுறையில் பல்வேறு கிருமி எதிர்ப்பு மருந்துகளையும், வைட்டமின் சத்து மருந்துகளையும், வலி நிவாரணி களையும் கொடுத்ததாகக் கூறி, பல்வேறு மருத்துவர்கள் அளித்த மருந்துச்சீட்டுக் களையும் காண்பித்தார்கள். ஆரம்ப நிலை மூட்டுவலி நோயாளியாக இருந்த அவளை அலோபதி மருத்துவம் நாட்பட்ட மூட்டுவலி நோயாளியாக மாற்றிவிட்டது.

அலோபதி மருத்துவத்தில் அவர் களால் இயன்ற எல்லாவித, சக்திவாய்ந்த மருந்துகளையும் பயன்படுத்திக் பார்த்து விட்டார்கள். அவர்களால் அவளுக்கு சிறிதளவு நிவாரணம் வழங்க இயலவில்லை. மாறாக அச்சிறுமிக்கு சிடுசிடுப்புத் தன்மை ஏற்பட்டுவிட்டது. இரவில் காய்ச்சலும், தலைவலியும், வாந்தியும், மலச்சிக்கலும் ஏற்பட்டுவிட்டது. அவள் கோபப்பட்டால் அவளது துயரங்கள் அதிகமாயின. அவள் சிறிய அளவில் முரண்பட்டாலும், அவளது வேதனைகள் தாங்கமுடியாத அளவுக்கு மாறிவிடுகிறது. அவளது நரம்புமண்டலம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. கைகள் அதிக அளவில் நடுங்கின. எளிதில் களைப்படைந்து விடுகிறாள். உடல் மிகவும் பலவீனமடைந்து படுத்த படுக்கையாகி விட்டாள். எப்போதும் உறக்கத்திலேயே ஆழ்ந்திருக்கிறாள்.

அவளுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால் அவள் மிகவும் பதட்டத்துக்கு உள்ளானாள்; அமைதியின்றி வளவளவென்று பேசினாள். நிலையான புத்தியை இழந்துவிட்டாள். எதிலும் அதிருப்தியுற்றாள். சாப்பிட ஏதாவது கேட்பாள்; கொடுத்தால் அதைச் சிறிதளவும் உண்ணாமல் புறக்கணிப்பாள். அவள் இவ்வாறு காரண காரியம் இல்லாமல் ஏனோதானே வென்று நடந்துக் கொண்டாள். இதற்கெல்லாம் காரணம், அவள் மனதை ட்யூபர்குலர் நச்சு தாக்கியிருப்பது தான் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். அவளால் வெண்மையான எப்பொருளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெண்மையான பொருட்களின் மீது சிறிதளவு வெளிச்சம் பட்டாலும் அவளால் தாங்க முடியவில்லை. இதனால் அவளது தாய் வீடு முழுவதும் திரைச்சீலைகளை தொடங்கவிட்டு இருட்டடிப்புச் செய்தாள்.

நான் கவனித்த இக்குறிகள் அவளுக்கு ஏற்பட்டிருந்த சீர்ககேட்டை மிகச் சரியாகப் புரிந்துக் கொள்ள உதவியது. அவளிடம் ஏற்பட்டிருந்த சிடுசிடுப்புத்தன்மை, எதிலும் உறுதியற்ற தன்மை, காய்ச்சலின் போது வளவளவென்று பேசும் தன்மை, வெண்மையானப் பொருட்களைப் பொறுத் துக் கொள்ளமுடியாதத் தன்மை, குளிர்ந்த சீதோஷ்ணநிலையில் அவளது துயரங்கள் அதிகரிப்பது, தலைவலியின் போது துவங்கிய தீராத அழுகை, மிகவும் மோசமான உடல் இளைப்பு ஆகியவை எனக்கு டியூபர்குலினம் கோச் என்ற ஹோமியோ மருந்தை 200இ வீரியத்தில் அவளுக்குக் கொடுக்குமாறு தூண்டியது. குழந்தைப் பருவத்தில் அவளிடம் உறங்கிக் கிடந்த சோரா நச்சு இப்போது சட்டென்று விழித்துக்கொண்டு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

அவளுக்கு சாதாரண டியூபர்குலினம் என்ற நோய்க்கழிவு மருந்தைக் கொடுத் திருப்பின் அது அவளது உடலில் ஆழ்ந்து வேலை செய்து உடலில் குடியிருந்த சோராநச்சை விரட்டியிருக்காது. அவளது உடலில் இருந்த சோரா நச்சை விரட்ட டியூபர்குலினம் கோச் என்ற சோராநச்சு முறிவு மருந்துதான் அவளை அவளது துயரங்களிலிருந்து விடுவித்து, முழுமையாக குணப்படுத்தியது.

அம்மருந்தின் 200C வீரியம் தான் அவளுக்குத் தேவைப்பட்ட வீரியமாகும். இம்மருந்தை உட்கொண்ட அவள் ஒரு மாத காலத்திற்குள் பூரணமாக குணமானாள். அதற்குப் பிறகு அச்சிறுமியை ஐந்தாறு முறைகள் என்னிடம் சிகிச்சையாக அழைத்து வந்தார்கள். அப்போதெல்லாம் நான் அவளுக்கு மருந்தில்லா வெற்றுருண்டை களை மட்டுமே அளித்து சிகிச்சை புரிந்தேன். அவளும் ஆரோக்கியமாகவே இருந்து வந்தாள்.

சில வருடங்களுக்குப் பின்னர், ஒருநாள் இரவு இடி, மின்னுடன் பலத்த மழை பெய்தது. மீண்டும் அவள் பழைய பாதிப்புகளுக்கு உள்ளாகி என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டாள். இப்போது இருட்டைக் கண்டு பயம், திருடர்கள் குறித்து அச்சம், தனிமையில் இருக்க பயம் போன்ற குறிகள் அவளிடம் தென்பட்டன. அவள் அமைதியிழந்து மிகவும் ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆயினும் அவளிடம் மிகவும் மேலோங்கியிருந்த குறி மற்றவர்களிடம் காட்டும் இரக்க சுபாவம் தான். இதனால் நான் அவளுக்கு ஒத்த மருந்தான பாஸ்பரஸ் என்ற ஹோமியோ மருந்தை 200C விரியத்தில் ஒருவேளை மட்டுமே அளித்தேன். அதற்குப் பிறகு அவளுக்கு ஏற்பட்டிருந்த எல்லாப் பிரச்சினை களும் முழுமையாக மறைந்தன. முன்பு அச்சிறுமியிடம் மறைந்திருந்த சோரா நச்சை விரட்ட நான் டியூபர்குலினம் கோச் 200 ஐக் கொடுத்தேன். இப்போது பாஸ்பரஸ் 200 என்ற ஹோமியோ மருந்து அவளுடைய உடலமைப்பு வெளிப்படுத்திய மனக்குறிகளை சீர்செய்தது.

இச்சிகிச்சைகளின் வாயிலாக இனி வருங்காலத்தில், உணர்ச்சிகளால் உருவாகும் உடல்நோய்களில் குழந்தையிடம் ஏற்படும் வன்முறைக்கும், பதட்டத்திற்கும் இடை யிலான முரண்பாட்டில் அதன் மனதில் ஏற்படும் குறிகளுக்கும், மற்றும் அதன் உடலில் ஏற்படும் குறிகளுக்கும் உள்ள உறவுமுறைகள் தெரிய வரலாம். தொடர்ந்து மருத்துவமனைகளில் இதுபோன்ற உணர்ச்சிகளால் உருவாகும் உடல்நோய் களுக்கு சிகிச்சையளிக்கையில், ஹோமியோ பதி மருத்துவருக்கு குழந்தையின் மனதில் தோன்றும் பிரச்சினைகளையும், அது உடலின் மூலம் வெளிப்படும் தன்மைகளை யும், குழந்தையின் தனித்தன்மை வாய்ந்த மனப்பாங்கின் மூலம் புரிந்துகொண்டு நோயைக் குணப்படுத்துவது என்பது மிகவும் எளிமையாகிவிடும்.

எப்படியிருந்த போதிலும், குழந்தை யின் மணம், மற்றும் உடல்குறிகள் ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையில், குழந்தையின் உளவியல் பிரச்சினைகளைத் தீர்க்க மருத்துவருக்கு மிகவும் அவசியமாகும். இக்குறிகளின் அடிப்படையில் ஹோமியோ பதி மருத்துவர் நோயின் சரியான வடிவத்தைப் புரிந்துக் கொண்டு, ஒத்த ஹோமியோ பதி மருந்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் குழந்தையிடம் தோன்றும் உளவியல் முரண் பாட்டைத் தீர்த்து வைக்க முடியும். குழந்தையின் உளப்பாதுகாப்புக் கவசம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ளாத உளவியல் நிபு ணருக்கு குழந்தைக்கு உரித்தான உளவழி சிகிச் சையை அளிக்க இயலாத போது ஹோமியோ பதி மருத்துவச் சிகிச்சை அக்குறையை நிவர்த்தி செய்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com