Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

குழந்தை டாக்டர்கள் கண்டனம்

தடுப்பு மருந்துக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்வதா?

இந்திய குழந்தை மருத்துவர்கள் அமைப்பின் தமிழகத் தலைவர் லட்சுமி நாராயணன், அடுத்த தலைவர் குணாசிங், சென்னை வட்டாரத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பார்த்தசாரதி, தங்கத்துரை ஆகியோர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆண்டு ஒன் றுக்கு 11.5 லட்சம் குழந்தை கள் பிறக்கின்றன. இதில், 32 ஆயிரம் குழந்தைகள் ஒரு வயதுக்குள் இறந்துவிடுகின்றன. இந்திய அளவில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 90ம் ஆண்டில் ஆயிரத் துக்கு 84 ஆக இருந்தது. 2005ல் இது 56 ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருவதுதான்.

தடுப்பூசியால் பெரியம்மை நோயை 77ம் ஆண்டிலேயே உலகத்தைவிட்டே விரட்டியுள் ளோம். 2004க்குப் பிறகு தமிழ் நாட்டில் போலியோ பாதிப்பே இல்லாமல் செய்துள்ளோம். 85ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட, எதிர்ப்புசக்தி அளிக்கும் தேசிய திட்டத்தின் மூலம் போலியோ, ரண ஜன்னி, வில்வாதஜன்னி, மூளைக் காய்ச் சல் ஆகியவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்தி விட்டோம். இவ்வளவு பலன் அளித்துள்ள தடுப்பு மருந்துகளைப் பற்றி, சிலர் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். தடுப்பூசி ஆபத்தா னது. பயனில்லாதது என்று அவர் கள் பிரசாரம் செய்வது அபத்தமானது. இதை நாங்கள் வன்மை யாகக் கண்டிக் கிறோம்.

தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது, விமானப் பயணம் போன்றது. எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும், சில அசம்பாவிதங் கள் நடக்க வாய்ப்பு உள்ளது. தடுப்பு மருந்துகளில் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை. நன்மைகள் ஒப்பிடும்போது, பக்கவிளைவுகள் பெரிதில்லை. விளைவுகளை சரிசெய்ய மருந்து உள்ளது.. உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நம்நாட்டில் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு குழந்தை மருத்து வர்கள் அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.

- தினகரன், 22-6-08

டாக்டர். வீ.புகழேந்தி M.B.B.S., அவர்களின் மறுப்பும் விளக்கமும்

1. இந்தியாவில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1990-ல் 1000 குழந்தைகளுக்கு 84 என இருந்தது. 2005ம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 56ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பு மருந்துதான் - செய்தி.

இந்தியாவில் 1 வயதிற்கு கீழான குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய காரணம் என்ன?

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு (வறுமை) ஏற்படும் வயிற்றுப்போக்கு, நிமோனியா சுரம் போன்றவை முதன்மை / முக்கிய காரணிகள் இல்லையா?

1990-2005க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தடுப்பு மருந்து / ஊசி மூலம் நோய் வராமல் இருக்கும் நோய்களின் மூலம் (ஒவ்வொரு நோய் வாரியாக) எத்தனை குழந்தைகள் இறந்தனர்? அதில் எத்தனை குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர்? வயிற்று போக்கு, நிமோனியா சுரம் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமா? தடுப்பு மருந்துகளால் தடுக்கப்படும் நோய்களின் மூலம் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமா? வயிற்று போக்கு, நிமோனியா சுரம் காரணமாக ஏற்படும் நோய் இறப்பு விகிதம் அதிகம் என இருந்தால், சனநாயக நாட்டில் எதற்கு நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கவேண்டும்?

அம்மை நோயை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் 1 ஒரு வருடத்திற்கு 2000 பேர் தான் பாதிக்கப்படுகின்றனர். அதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு 40,000 குழந்தைகள் இறக்கின்றனர். விசயம் இப்படி இருக்கையில் அதிக இறப்பிற்கு எது காரணம் என கண்டறிந்து அதை தடுக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்தல் தானே நல்லது? இல்லையா?

“சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு, நிமோனியா சுரம்.... போன்றவற்றால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு மருந்து / மாத்திரை / ஊசி மூலம் சிகிச்சை அளித்தாலும் கூட அவர்களின் இறப்பு விகிதத்தில் பெரிதளவு மாற்றம் இல்லை” என்பதை உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் பலவும் மெய்பித்துள்ளன என இருக்கையில் சத்து குறைவை போக்க வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி செய்வது மக்கள் நல அரசின் கடமையல்லவா? ICDS திட்டம் (Integrated Child Development Scheme) மூலம் சத்துணவு அளித்தும் சத்து குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரிதளவு மாற்றம் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன?

2. தடுப்பூசியால் பெரியம்மை நோயை 77-ம் ஆண்டிலேயே உலகத்தை விட்டே விரட்டியுள்ளோம் - செய்தி.

பெரியம்மை நோய் விரட்டப்பட்டதற்கு தடுப்பூசி மட்டும்ôன் காரணமா? 1960ல் ‘SIERRALONE’ என்ற இடத்தில் பெரியம்மை நோய் பாதிப்பை ஏற்படுத்தியபோது (1) கண்டறிதல் (2) தனிமைப்படுத்துதல் மூலமே ஒரு வருடத்தில் அதை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி?

உலக சுகாதார நிறுவனம் கூட அப்போது தடுப்பு மருந்தை ஏன் பரிந்துரைக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி ஆய்வுகள் தடுப்பூசி மூலம் பெரியம்மையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

3. 2004க்கு பிறகு தமிழகத்தில் போலியோ பாதிப்பே இல்லை - செய்தி.

இதை எவ்வாறு உறுதி செய்வது? IMA (அகில இந்திய)யின் VACCINATION SUB - COMMITTEE Vice Chairman திரு. ஜேக்கப் புலியேல் Hindu நாளிதழில் 2006ல் போலியோ சொட்டுமருந்தின் காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 27000 பேர் போலியோ போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தும் அது என்ன நோய் என்பதை உறுதி செய்யக்கூட அரசு முன்வரவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்ததிலிருந்து 2004க்கு மேல் தமிழகத்தில் போலியோ பாதிப்பு இல்லை என்பதை எப்படி நம்புவது? போலியோ பாதிப்பு இருந்தும் அதை AFP (Acute Flacid Paralysis) என ஏன் தவறாக சித்தரிக்கமுடியாது?

மேலும் போலியோ, அம்மை, காசநோய், கக்குவான், தொண்டை அடைப்பான்... போன்ற நோய்கள் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே பொது சுத்தம் சுகாதாரம், சத்தான உணவு, சுத்தமான நீர் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் நிரூபித்திருந்தும் அதை ஏன் மறைக்கவேண்டும்.

4. சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்? - செய்தி.

யார் அவர்கள் என ஏன் குறிப்பிடவில்லை.

5. தடுப்பூசி ஆபத்தானது, பயனில்லாதது எனும் பிரச்சாரம் அபத்தமானது - செய்தி.

யார் அப்படி கூறினார்கள்? அதற்கான ஆதாரம் என்ன?

மருத்துவர்கள் சட்டரீதியாக ஒரு மருந்தின் (தடுப்பு மருந்து / ஊசி உட்பட) சாதக / பாதகங்களை தெரிவித்து, நோயாளிகளுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுப்பது தேவையாக இருக்கும்போது அதை செய்யாமல் இருப்பது தவறல்லவா? மேலும் அரசு சார்பான பத்திரிக்கைகளில் கூட இம்முறை கையாளப்படும் என எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது (அது நடைமுறை படுத்தப்பட்டால்)

6. தடுப்பு மருந்துகளில் நன்மை அதிகம் பாதகம் குறைவு பாதக விளைவுகளை சரி செய்ய மருந்துள்ளது - செய்தி.

இது உண்மையா?

2006ல் மட்டும் போலியோ சொட்டுமருந்தால் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் 1600 பேர் (உறுதி செய்யப்பட்டது). சந்தேகத்திற்குரியதோ 27,000 பேர் - சொன்னவர் DR. ஜேக்கப்புலியேல், IMA (இந்தியா) VACCINATION SUB COMMITTEE உப தலைவர். 2007-ல் இந்தியாவில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 848 பேர்தான். ஆக நன்மையைக் காட்டிலும் தீமை அதிகமாக இருக்கலாம் என்பதற்கான உதாரணம் இது. போலியோவால் பாதிக்கப்பட்டவர்களை சரி செய்ய என்ன மருந்து / முறைகள் உள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விளக்கினால் நல்லது.

THYOMERSAL கலந்த தடுப்பூசி கொடுத்து AUTISM வருவதால் அமெரிக்காவில் அது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. AUSTISM வந்தால் என்ன சிகிச்சை உள்ளது?

7. தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது விமானத்தில் பயணம் செய்வது போல. - செய்தி.

இந்த ஒப்புமை சரியா? தடுப்பு மருந்து / ஊசியின் சாதக / பாதகங்களை விளக்குவது சட்டரீதியான கடமை. விமான பயணத்தின்போது அதன் சாதக / பாதகங்களை தெரிவிப்பது கட்டாயமல்ல. விருப்பம் இருந்தால், பணம் இருந்தால் விமானத்தில் போகலாம். ஆனால் தடுப்பு மருந்துகள் விருப்பம் இல்லாவிட்டாலும் திணிப்பதாகவே நடைமுறை உள்ளது. (அரசின் போலியோ தடுப்பு விளம்பரத்தில், ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், கண்டிப்பாக குறிப்பிட்ட இந்த தேதிகளில் திரும்பவும் போடவேண்டும் என்பது.)

8. உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நம்நாட்டில் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது - செய்தி.

உலக சுகாதார நிறுவனம் என்பது நடுநிலை நிறுவனம், அவ்வமைப்பு சார்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்களா? மருத்துவர்: ஜேக்கப் புலியேல், மருத்துவர்: புஷ்பா பார்கவா (June 11, 2008 - The Hindu)

The politics of Polio: -

போலியோ சொட்டு மருந்தைக் காட்டிலும் போலியோ தடுப்பூசி சிறந்தது என தெரிய வந்தும், இந்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஊசி உற்பத்தி தொழிற்சாலையை மூடி (உலக சுகாதார அமைப்பும் அதற்கான பரிந்துரையை செய்தது) மக்களுக்கு துரோகம் இழைத்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. அதற்கு சம்பந்தப்பட்ட குழந்தைகள் மருத்துவர் சங்க மருத்துவர்களின் பதில் என்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com