Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

தடுப்பூசிகள் - ஒரு மாற்றுப் பார்வை சென்னை கருத்தரங்கம் - பத்திரிக்கைகளின் பார்வையில்...

தடுப்பூசி சாவுகள் - தடுக்க என்னதான் வழி?

கடந்த 15-05-2008, வியாழக்கிழமை சென்னை எழும்பூர் ராஜ் ரெசிடென்ஸி ஹோட்டலில் தடுப்பூசிகள் ஓர் மாற்று பார்வை என்ற கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது. தடுப்பூசிகளுக்கு பலியான தளிர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய மாநில, அரசுகளுக்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. பிரபல ஹோமியோபதி நிபுணரும், மத்திய அரசின் ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சி லின் ஆலோசகரும், உறுப்பினருமான டாக்டர் லெனின் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார்.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், ஆங்கில மருத்துவ நிறுவனங்கள், ஆங்கில மருந்துக் கடைகள், மருத்துவர்கள் இணைப்பை உடைத்தாலே பல மருந்துகள் மார்க்கெட்டில் நோயை குணப்படுத்தும் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. வர்த்தக வெறியும், கொள்ளை இலாபமும்தான் தடை செய்யப் பட்ட மருந்துகள் தங்குத் தடையில்லாமல் இந்தியாவில் உலா வரக் காரணம். இந்திய மருத்துவ முறை மருந்துகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை தடுப்பு, தற்காப்பு மருந்தாக பயன்படுத்தலாம். இதனை அரசாங்கங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் டாக்டர் லெனின்.

அடுத்து கருத்தரங்கில் பேசிய மருத்துவர் புகழேந்தி புள்ளி விவரங்களை அடுக்கினார். “தடுப்பு மருந்துகளே தேவையில்லை; நல்ல உணவு, சுகாதாரம் போன்றவை நோயை குணமாக்கும்” என்றார். “இது இந்தியாவின் வறுமையில் சாத்தியமா? என்ற எதிர்கேள்வியையும் அவரே எழுப்பி, இதனைச் சாத்தியமாக்க வேண்டும்” என்றார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்தக் கருத்தரங்கம் எனக்கு மன நிறைவை அளிக்கிறது. தடுப்பூசி மருந்துகளைக் கையாள்வதில் புனிதம் இருக்கட்டும் என்று வலியுறுத்தினர். மாற்று மருத்துவம் ஆசிரியர் டாக்டர் வெங்கடாசலம், “ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக மாற்று முறை மருத்துவங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.

நலம் கான்ஃபெடரேஷன் டாக்டர் சண்முகநாதன் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் தடுப்பூசி பற்றிய பல உருப்படியான தீர்மானங்களை, பரிந்துரைகளை இயற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியிருக்கிறது. நல்லது நடக்கட்டும்.

- தமிழன் எக்ஸ்பிரஸ்
26-05-2008

ஹோமியோபதி தடுப்பு மருந்துகளை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்!

நலம் கான்படரேஷன் ஒருங்கிணைப்பில் உலக குடும்ப நல தினமான 15-5-08 வியாழன் அன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ராஜ் ரெசிடென்சி’ கூட்ட அரங்கில் ‘தடுப்பூசிகள் - ஓர் மாற்றுப் பார்வை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அறிஞர்கள், மாற்று மருத்துவர்கள், சமூக செயல்பாட்டார்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். எஸ். பாலகிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமை தாங்கினார். மத்திய, மாநில அரசுகளுக்கான பரிந்துரைகள் அடங்கிய ‘தடுப்பூசிகள் - ஓர் மாற்றுப்பார்வை’ எனும் நூலினை டாக்டர் எம்.ஆர்.ஜெகநாதன் R.H.M.P. வெளியிட, பத்திரிகையாளர் மற்றும் சென்னை அப்ரோச் ஹோமியோபதி அமைப்பைச் சேர்ந்தவருமான திரு. பாவெல் சூரியன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கருத்தரங்கம் துவங்கும் முன்னர் சமீபத்தில் தடுப்பூசிகளுக்குப் பலியான தளிர்களுக்கு மலர்கள் தூவியும், மௌனம் அனுஷ்டித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சன்.டி.வி. ‘அசத்தப் போவது யார்’ புகழ், நகைச்சுவைக் கலைஞர் சாத்தூர் வி. கருப்பசாமி குழுவினர் இறந்த குழந்தைகளின் நினைவாக இரங்கல் பாடல்களை ஆழ்ந்த சோகம் தழும்ப இசைத்துப் பாடினர்.

சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்த, சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவர்கள் அமைப்பின் உறுப்பினரான டாக்டர் வீ. புகழேந்தி M.B.B.S., அவர்கள் கருத்துரை ஆற்றினார். தடுப்பூசிகளின் தந்தை டாக்டர் ஜென்னர் தனது முதல் மகனுக்கு தடுப்பூசி போட்டு மூளை பாதிக்கப்பட்டு இறந்துபோன பின்பு இரண்டாவது மகனுக்கு தடுப்பூசி போட வில்லை. போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனல் சல்க், அமெரிக்காவில் 1961க்குப் பிறகு ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம் என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வெளிப்படையான வாக்குமூலம் அளித்திருந் தார். தடுப்பூசிகளின் நச்சுத் தன்மையால் எண்ணற்ற உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆங்கில தடுப்பு ஊசி மருந்துகள் கடுமையான எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

மேலும், உடனடி மரண நிகழ்வுகள் தவிர தடுப் பூசிகளால் ஏற்படும் எதிர்கால பின்விளைவுகள் ஏராளம். நரம்பியல் சார்ந்த ஆடிஸம், ADMD மற்றும் புற்று நோய், தோல் நோய், நோய் எதிர்ப்பாற்றல் அழிவு போன்ற பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. தடுப்பூசிகளுக்கு செலவிடப் படும் கோடிக்கணக்கான தொகையை ஆபத்தில்லாத சுகா தார மேம் பாட்டுகாக அரசுகள் செலவிட வேண்டும் என்று டாக்டர் V. புகழேந்தி அவர்கள் வலியுறுத்திப் பேசினார்.

பிரபல ஹோமியோபதி நிபுணரும், மத்திய அரசின் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின், அறிவியல் ஆய்வுக்குழு உறுப்பினருமான பாண்டிச்சேரி டாக்டர் ப.உ..லெனின் அவர்கள் கருத்தரங்கில் பேசிய போது கூறியதாவது

“தடுப்பூசிகளால் நிகழும் தொடர் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களையும், செவிலியர்களையும் குற்றஞ்சாட்டுவதால் நஷ்ட ஈட்டுத்தொகை வழங்குவதால் மட்டும் இழப்பை ஈடுகட்டிவிட முடியாது. இனி வருங்காலத்தில் தொடரப்போகிற இழப்பு களை நிறுத்திவிட முடியாது. வரலாறு நெடுக தடுப்பூசி மருந்துகளுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் பலியான பின்னர், மனசாட்சி மிக்க ஆங்கில மருத்துவ நிபுணர்கள் பலர் தடுப்பூசிகளின் ஆபத்துகளை சுட்டிக்காட்டிய பின்னர், தடுப்பூசிகள் நமது குழந்தைகளோடு மரண விளையாட்டு நடத்துகின்றன. இதன் பின்னர் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வர்த்தக நோக்கம் தவிர வேறெந்த புனிதமான நோக்கமும் இல்லை. அமெரிக்காவிலும், பிரான்சிலும் தடைசெய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் உட்பட பல மருந்துகள் இந்தியாவில் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஹோமியோபதியிலும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் இயற்கை மருத்துவ முறைகளிலும் எல்லாவித தடுப்பு மருந்துகள் உள்ளன. ஹோமியோபதியில் கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாகும் வரை 14 வயது வரையிலும் கொடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் உள்ளன. கொள்ளை நோய்கள் பரவும் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பல ஹோமியோபதி தடுப்பு மருந்துகளும் உள்ளன. இவை குறித்து நிபுணர்களைக் கலந்தாலோசித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான பக்கவிளைவில்லாத ஹோமியோபதி மருத்துவ தடுப்பு மருந்துகளை அரசு அமுல்படுத்த வேண்டும்.”

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதை வசனகர்த்தாவுமான எஸ். இராமகிருஷ்ணன் பேசியதாவது: “இது போன்ற குழந்தை மரணங்கள் என்னைப் போன்ற எழுத்தாளர்களை மிகவும் பாதிக்கிறது. இவை குறித்து மறுபரிசீலனை செய்ய மாற்று மருத்துவ அறிஞர்கள் கூடியிருப்பது, விவாதிப்பது, நல்ல முடிவுகளை எட்டுவது வரவேற்கத்தக்கது. அடிப்படை வசதிகளும், ஆரம்ப சுகாதார வசதிகளும், ஆரோக்கியத்திற்கான இதர தேவைகளும் நிறைவு செய்யப் படாத நமது நாட்டின் கிராமப் புறங்களில் ‘தடுப்பூசி மருந்துகளை மட்டும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது சரியான அணுகு முறையல்ல. மேலும், மருத்துவம், சேவை என்ற உயரிய புனித நோக்கத்திலிருந்து திசைமாறி விட்டது. மருத்துவமனைகளும், மருத்துவர்களும் நோயுற்ற மக்களை மென்மேலும் பீதியடையச் செய்யும் சூழல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மாற்று மருத்துவ முறைகளை கோடிக்கணக்கான மக்கள் இன்றளவிலும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் நம்பிக்கையளிக்கும் நல்ல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து அனைத்துலகும் பயன்படுத்த வேண்டும்.”

‘மாற்று மருத்துவம்’ காலாண்டிதழ் ஆசிரியரும், மாற்று மருத்துவப் பிரச்சார சங்கச் செயலருமான டாக்டர் எஸ்.வெங்கடாசலம் RHMP ஹோமியேபதி தடுப்பு மருந்துகளைப் பற்றி விவரித்துப் பேசினார். பின் கருத்தரங்கின் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கான பரிந்துரைகளை அவர் முன் மொழிந்தார். “தடுப்பூசிகளுக்கு மாற்றாக, ஹோமியோ தடுப்பு மருந்துகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். தடுப்பூசிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்ற அதிகாரம் கொண்ட தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 50 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுகளை விரைந்து நலமாக்கும் மூலிகை மருந்துகள் திரிபலா,சீந்தில், சர்க்கரை, கோரைக்கிழங்கு பொடி, கோதுமைப்புல் சாறு போன்றவற்றை அரசே இலவசமாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட நாடு, இடம், சூழ்நிலை, வாழ்நிலைக்கேற்ப தடுப்பு மருத்துவத் திட்டங்கள் வடிவமைக்கப் பட வேண்டும் போன்ற முக்கியமன கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

நலம் கான்படரேஷன் ஒருங்கிணைப் பாளர் டாக்டர் நா. சண்முகநாதன் பேசும் போது டாக்டர் புகழேந்தி, டாக்டர் லெனின், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சமூகநல அக்கரையுள்ள அறிஞர்களின் விருப்பப்படி மாற்றங்கள் அமைய வேண்டும். அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு “குழந்தை நலம்” குறித்த மாற்று மருத்துவ விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நன்றி: ஹெல்த் டுடே

தடுப்பூசிகளுக்கு தடுப்பு தேவை?

அந்த சிறிய அரங்கில் கூடியிருந்த சிறிய கூட்டத்தால் உடனடியாகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுதான். ஆனால் பெரிய மாற்றங்களைச் செய்த வரலாறுகள் எல்லாமே சிறிய கூட்டத்திலிருந்துதான் தொடங்கியுள்ளன. சென்னையில் மே 15 அன்று தடுப்பூசிகள் ஓர் மாற்றுப் பார்வை என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் தெறித்த சில கருத்துகள் இங்கே கோர்க்கப்பட்டுள்ளன.

டாக்டர் நா. சண்முகநாதன்: தடுப்பூசி போடப்பட்ட 11 குழந்தைகள் இறந்து போனது விபத்து அல்ல, அரசு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி அந்நிய தனியார் நிறுவனங்களின் சரக்குகள் சந்தையில் இறங்கியபின் கடந்த ஆறு மாதங்களாகவே இப்படி நிகழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு எந்திரம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

டாக்டர் வீ. புகழேந்தி: போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதே அதனால் பயனில்லை என்று அமெரிக்க செனட் சபையில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்தச் செய்தியே வெளியே வராமல் மறைக்கப்பட்டது. இந்தியாவில் 2006ல் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட பின் 1,600 குழந்தைகளுக்கு போலியோ தாக்குதல் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. 27,000 குழந்தைகளுக்கு போலியோ தாக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிப்பட்டது. இதை இந்திய மருத்துவக் கழக உறுப்பினரே கூறியிருக்கிறார். ஆனால் மத்திய அரசு அதைப் பரிசீலிக்கவே இல்லை. பிசிஜி சொட்டு மருந்து குறித்து செங்கல்பட்டு வட்டாரத்தில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் அதனால் எந்த பயனும் இல்லை என்ற முடிவு எட்டப்பட்டது. ஆனால் அது ஒரு மருத்துவ ஏட்டில் மட்டுமே செய்தியாக வந்தது.

டாக்டர் ப.உ. லெனின்: 1980ல் பன்னாட்டு ஏகபோக மருந்து நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் ஊடுருவ அனுமதித்ததும், பொதுத் துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டதுமே இன்றைய நிலைமைக்குக் காரணம். தடுப்பூசி மருந்துகள் உண்மையில் நோயைத் தடுப்பதில்லை. மாறாக உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கரைத்து விடுகின்றன. இது ஒரு வணிகம். எல்லா வணிகங்கள் போலவே இதிலும் ஆங்கில மருத்துவம் ஆக்கிரமிக்க, மரபுவழி - மண் வழி மருத்துவ முறைகள் மறக்கடிக்கப்பட்டு விட்டன.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: இந்தியாவில் உள்ள மருத்துவ முறைகள் ஒன்று பாரம்பரிய அறிவு அது முறையாகத் தொகுக்கப்படாமல் இருக்கிறது. இரண்டு ஆங்கில மருத்துவ மாகிய அலோபதி - அது முற்றிலும் வணிகமய மாக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலும் பெண்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அடிப்படையான ஆரோக்கிய, மருத்துவ தகவல்கள் சொல்லப்படுவதே இல்லை. நாட்டின் ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் ஆரோக்கியமாக இல்லை. எனினும் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது சமூக அக்கறையாளர்களும் அமைப்புகளும் மாற்று மருத்துவ இயக்கங்களும்தான்.

டாக்டர் எஸ். வெங்கடாசலம்: அச்ச மூட்டுவதன் மூலமாகவே தடுப்பு மருந்துகளை ஏற்கும் மனநிலை உருவாக்கப்படுகிறது. ஜெர்மனியில் காலரா பரவியபோது அலோபதி மருந்து அளிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் உயிரிழந்தார்கள். ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்தினர் மட்டுமே உயிரிழந்தார்கள். நம்பகமான தற்காப்பு மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. மக்கள் அதை ஏற்கும் மனநிலையை ஏற்படுத்தும் பொறுப்பு ஹோமியோபதி மருத்துவர்களுக்கு இருக்கிறது.

தடுப்பு மருந்துகளின் சாதக - பாதகங்கள் குறித்து விரிவான பரப்புரை இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். தடுப்பூசி குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். தடுப்பூசி பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அவசர கால சிகிச்சை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும், பக்க விளைவுகளற்ற ஹோமியோபதி தற்காப்பு மருந்துகளை அனைத்து அரசு மருந்துவமனைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தி தடுப்பூசியே தேவையில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கும் தீர்மானம் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: வண்ணக்கதிர் 25-05-08

தடுப்பூசி... ஒரு மாற்றுக்குரல்

தடுப்பூசிகளின் தந்தை டாக்டர் ஜென்னர் தனது முதல் மகனுக்கு தடுப்பூசி போட்டு மூளை பாதிக்கப்பட்டு இறந்து போன பின்பு இரண்டாவது மகனுக்கு தடுப்பூசிப் போடவில்லை. போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோன்ல் சல்க், அமெரிக்காவில் 1961க்குப் பிறகு ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம் என்று செனட் கமிட்டியில் வெளிப்படையான வாக்குமூலம் அளித்திருந்தார். தடுப்பூசிகளின் நச்சுத் தன்மை களால் எண்ணற்ற உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றன.

இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில் ஊட்டச்சத்துக்கு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலத் தடுப்பு ஊசி மருந்துகள் கடுமையான எதிர்விளைவுத்தான் ஏற்படுத்தும், மேலும் உடனடி மரண நிகழ்வுகள் தவிர தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர் கால பின்விளைவுகள் ஏராளம். நரம்பியல் சார்ந்த ஆடிஸம், புற்றுநோய், தோல்நோய், நோய் எதிர்ப்பாற்றல் அழிவு போன்ற பல உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. தடுப்பூசிகளுக்குச் செலவிடப்படும் கோடிக்கணக்கான தொகையை ஆபத்தில்லாத சுகாதார மேம்பாட்டுக்காக அரசுகள் செலவிட வேண்டும்.” உலக குடும்பநல தினமான மே 15 அன்று சென்னையில் நலம் கூட்டமைப்பின் முயற்சியில் மாற்று மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற தடுப்பூசிகள் - ஒரு மாற்றுப்பார்வை எனும் கருத்தரங்கில் கல்பாக்கத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் மருத்துவர் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் புகழேந்தி இவ்வாறு பேசினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசியால் பல குழந்தைகள் பலியான கொடூரம் அரங்கேறியுள்ள பின்னணியில், மாற்று மருத்துவர்களின் இந்தக்குரல் கவனிக்கத்தக்கது.

பிரபல ஹோமியோபதி நிபுணரும், மத்திய அரசின் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின், அறிவியல் ஆய்வுக்குழு உறுப்பினருமான பாண்டிச்சேரி டாக்டர், ப.உ.லெனின் கருத்தரங்கில் பேசியபோது:- “வரலாறு நெடுக தடுப்பூசி மருந்துகளுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் பலியான பின்னர், மனசாட்சி மிக்க ஆங்கில மருத்துவ நிபுணர்களும் பொதுநல அமைப்புகளும் தடுப்பூசிகளின் ஆபத்துக்களை சுட்டிக் காட்டிய பின்னரும் தடுப்பூசிகள் நமது குழந்தைகளோடு மரண விளையாட்டு நடத்துகின்றன. இதன்பின்னணியில் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வர்த்தக லாப வெறிநோக்கம் தவிர வேறெந்த புனிதமான நோக்கமும் இல்லை” என்றார்.

நன்றி: தீக்கதிர் 19-05-08


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com