makkal viduthalai wrapper 587

இந்த புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று எழுதத் துவங்கியபோதுதான் பெஷாவரில் பச்சிளம் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட படுகொலை செய்திகள் வெளிவந்தன. பெஷாவர் தாக்குதல் என்பது பழிக்குப் பழி என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இத்தாக்குதலை இசுலாமிய மக்களின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் திரள் இசுலாமியத் தலைவர்கள் அன்றும் இன்றும் என்றும் இதுபோன்ற அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொண்டதே இல்லை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து பா.ஜ.க போடும் நாடகம்தான் அருவெறுப்பை உண்டாக்கியுள்ளது. இது கோழைத்தனம். வெறித்தனம், என்றெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் கூச்சல் போடுகின்றனர். இந்த வெறிக் கூச்சலுக்கு ஜனநாயகவாதிகள் கொதிப்படையாமல் இருக்க முடியாது.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் மோடியால் கொல்லப்பட்டார்களே அப்போது இந்த பேர்வழிகள் எங்கே போனார்கள்?

ஆனால், இசுலாமியர் மீது மோடி நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கும் மதவெறி வன்முறைகளுக்கும் வாய்மூடி மௌனிகளாக இருந்த இப்பேர்வழிகள்தான் இன்று பெஷாவர் தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக வேஷம் போடுகிறார்கள்.

குஜராத் கலவரத்தில் மோடி செய்த கொலைகளுக்கு பின்னால் என்ன காரணம் இருந்தது? மத வெறியும், முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமை புத்தியும் தவிர வேறு என்ன இருந்தது ?

இந்த தாக்குதல் குறித்து ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகாரப் பூர்வமான ஆங்கில இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்திரி ‘மதமும் அரசியலும் தனித் தனியாக பிரிக்கப்படுவது அவசியம்’ என்று எழுதியுள்ளார்.

நாங்களும் இதனைத்தான் ஆழமாக வலியுறுத்தி வருகிறோம். திரு. சேஷாத்திரி இந்த கட்டுரையை முதலில் இந்துராஷ்ட்டிரம் பேசும் பகவத்துக்கும், பாபர் மசூதியை இடித்த அகாலிதளுக்கும், குஜராத்தில் படுகொலை செய்த மோடிக்கும்,பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும், என்றெல்லாம் பேசும் மத்திய அமைச்சர்களுக்கும், அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அவா.

மற்றபடி இந்த புத்தாண்டு புதிய துவக்கமாக அமையும் என்றே நம்புகிறோம். அடுத்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இலங்கை அதிபர் தேர்தல் முடிந்திருக்கும். ராஜபக்சே தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை தில்லு-முல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் ராஜ-பக்சேயின் சரிவின் துவக்க புள்ளியாக இந்த அதிபர் தேர்தல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு தோல்விகளும், மறக்க முடியாத சோகங்களும் நம்மை தள்ளினாலும் நாம் முன்னேறிய தீர வேண்டும்.

இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும் நேரத்தில் பொங்கல் விழாவிற்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். நம்மை பொறுத்தவரை பொங்கல் விழா ஒரு மதபண்டிகை அல்ல. அதற்கு மத அடையாளம் இடப்பட்டாலும் அதன் வரை-யறைகள் மாறிக்கொண்டேதான் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கராந்தி பண்டிகை-யாகவும், ஆரிய பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி இப்போது அறுவடை விழா என்றும் உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா என்றும், திராவிடர் திருநாள் என்றும் மாற்றம் பெற்று வருவதைக் காண்கிறோம் என்று திரு அண்ணா-துரை 1956 இல் எழுதினார். பொங்கலுக்கு இடப்பட்ட இந்த வரையறை ஒரு புதிய வளர்ச்சியே. நாம் இதிலிருந்து முன்னேறி இன்னொரு மேம்பட்ட ஒரு கட்டத்திற்கு நகர விரும்புகிறோம். மே 1 உழைப்பாளர் உரிமை தினம் என்றால் பொங்கல் உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர் நன்றி செலுத்தும் நன்னாள். அந்த உழைப்பாளர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறும் பொன்னாள் என்று கருதுகிறேன்.

இதில் இல்லந்தோறும், இளைஞர்களும், முதி-யோர்களும், இருபாலரும் பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி பழையவை ஒழிந்தன, நல்லவை பிறந்தன என்று கொண்டாடும் காட்சியை காண -விழைகின்றேன்.

இந்நேரத்தில், எந்த உழைப்பாளியிடம் சென்று நாங்கள் நன்றி செலுத்துவது எந்த தொழிலாளி-யிடமிருந்து வாழ்த்து பெறுவது என்று நீங்கள் தயங்குவது தெரிகிறது.

எந்த உழைப்பாளியை விடவும் உன்னதமான உழைப்-பாளி உங்கள் தாய்தான். அவரது கரங்களைப் பற்றி வருடி அவர் இதுகாரும் ஆற்றிய பணிக்கு நன்றி கூறுங்கள். அவரிடமிருந்து வாழ்த்து பெறுங்கள். உங்கள் தாயைவிட, தந்தையைவிட, தமக்கைகளைவிட, உங்கள் துணைவியரைவிட, அதிகம் உழைக்கும் தொழிலாளர் யார் உங்களுக்கு அருகில் உள்ளனர். எங்கும் பொங்கும் இன்பம் தங்கும் இனிய பொங்கல் மற்றும¢ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆசிரியர்

Pin It

modi 350மோடியின் நூறு நாள் ஆட்சி, ஆறு மாத கால ஆட்சியின் சாதனை பட்டியல் குறித்தும், அவர் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் முதலாளித்துவ, பொருளாதார ஆலோசகர்கள் பல கட்டுரைகளை தினசரி வரைந்து கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சிக்குக் கிடைத்திருக்கின்ற பெரும்பான்மை பலம் அசுரத்தனமானது. 

அதை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை,அவர் செய்கின்ற பொருளாதார சீர்திருத்தத்தின் வேகம் போதவில்லை என்றும், வளர்ச்சி சதவீதத்தை முடுக்க மக்களின் மீது சாட்டையை சுழற்ற வேண்டும் என்றும் உச்சஸ்தாதியில் குரல் எழுப்புகின்றனர்.

நரசிம்மராவின் மைனாரிட்டி அரசு 90களில் எடுத்தது போன்ற துணிச்சலான முடிவுகளைக் கூட மோடியின் மெஜாரிட்டி அரசு இன்னும் செய்யத் துணியவில்லை. ரூபாய் மதிப்பு குறைப்பு, லைசென்சு முறை ரத்து, பொதுத்துறையிடமிருந்த கேந்திரமான பல துறைகள் தனியாரிடம் ஒப்படைப்பு போன்ற துணிச்சலான உறுதியான முடிவுகளை, நரசிம்மராவ் எடுத்தது போன்று, நாட்டை அடுத்தக் கட்ட சீர்திருத்தத்திற்கு அழைத்து செல்வதற்கு மோடி துணிவான முடிவுகள் எடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர்.

மோடி முன்வைத்த தேர்தல் முழக்கங்களில் சுணக்கம் காட்டி விடக்கூடாது, நடைமுறை அரசியலுக்காக தாமதப்படுத்தி விடக்கூடாது என்பதில் பெருமுதலாளிகளும், அன்னிய ஏகபோக சக்திகளும், பொருளாதார நிபுணர்களும் மோடி ஆட்சியைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மூர்க்கத்-தனமான, இரக்கமற்ற பொருளாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு, வளர்ச்சிப் பாதை என்றும், சீர்திருத்தம் என்றும் நவீன பெயர்-சூட்டி ஒரு பொருளாதார பயங்கரத்தை கட்டவிழ்த்து-விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தேவையற்ற, வீணான, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து மானியங்-களையும் ரத்து செய்ய வேண்டும், சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்குள் நாட்டின் அனைத்து துறைகளும், அனைத்து மக்கள் பிரிவினரும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது போன்ற மோடியின் தீவிர நடவடிக்கைகள், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைக்கு சுருக்குக் கயிறாய் மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் 60 ஆண்டுகால பாராளுமன்ற அமைப்பு முறையை, அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்த உரிமைகளை, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, நாடு தழுவிய விவாதமோ அல்லது கலந்தா-லோசனையோ இன்றி, பாராளுமன்றத்திற்கு அப்பாற்-பட்டு, பெரும் பொருளாதார சீர்திருத்தங்கள் தீவிரப்-படுத்தப்பட்டிருக்கின்றன. ‘வரவு - செலவு பற்றாக்குறையை(Fiscal Deficite)) ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்ற ஒற்றைப் பொருளாதார சொல்லாடலுக்குள் அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையானவை, வீணானவை என்ற கருத்துருவாக்கம் தீவிரமாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், வெகுஜன கவர்ச்சிவாத ஓட்டரசியல் (Populist Vote Politics) என மலினப்படுத்தப்படுகின்றன. முந்தைய அரசுகளின் கவர்ச்சிவாதக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும், தீர்க்கமான பொருளாதார முடிவுகளை ஏற்று, உறுதியாக நடைமுறைப்படுத்தும் மோடி அரசின் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட சட்டவிரோத நடைமுறையை, எதேச்சதிகார ஆட்சி முறையை, பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறையாக நியாயப்படுத்தி, வளர்ச்சி சார்ந்த மாயையையும், வன்முறையையும் கட்டமைக்க, கார்ப்பரேட் மய்ய, பாசிச அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. இதில் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கங்களும், சாதிகளும்,சிறு வணிகப் பிரிவினரும் பெரும் மாயையால் சூழப்பட்டிருக்கின்றனர் என்பது தான், இந்த பாசிச பொருளாதாரத்தின் சமூக அடித் தளமாக இருக்கின்றது.

மோடியின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சமூக துறைகள் சார் அரசின் பொது செலவீனங்களில் (Social Spector Spendings) 15 சதவீதத்தை வெட்டிக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வரவு - செலவு பற்றாக் குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும், அடுத்த பட்ஜெட் 2015-16 வரவு செலவு அறிக்கையில் பெரும் சீர்திருத்தங்கள் இடம்பெறும் என்றும், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதில் பெரும் மானியவெட்டு (Cut Pags) பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளார். உலக வர்த்தக கழகத்தில் (WTO) சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள மய்ய அரசின் நடவடிக்கையை ஒபாமா நிர்வாகமும், உலக ஏகபோக வர்த்தக நிறுவனங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் மானியக் கொள்கைகளை ஒருதலைபட்சமாக எதிர்த்து வந்த ஏகாதிபத்திய சக்திகள், மோடி அரசை மாற்றத்திற்கான அரசாக ஆரத்தழுவுவதோடு மட்டுமல்லாமல், கிடப்பில் கிடந்த ஒப்பந்தங்களில் மிக வேகமாக கையெழுத்திடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

மானிய வெட்டு - யாருக்கானது?

சற்றொப்ப 5 லட்சம் கோடி ரூபாயை வரிச் சழுகையாக, மானியமாக பெரும் ஏகபோக நிறுவனங்களுக்கு வழங்கும் மய்ய அரசு, சில ஆயிரம் கோடி ரூபாயை ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மீது மானியமாக வழங்குவதை ஏன் வளர்ச்சிக்கு எதிரானதாக, வீணானதாகக் கருதுகின்றது? இதற்கு எதிரான ஒரு போரை நடத்துவது அவசியம் என்பது போன்ற கருத்துருவாக்கத்தை ஏன் தயார் செய்கின்றது? முந்தைய காங்கிரஸ் அரசின் இறுதி காலங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் போது கூட, சங்பரிவாரங்களின் பொருளாதார நிபுணர், கருத்தியலாளர் குருமூர்த்தி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தேவையற்ற செலவீனங்கள் என்று குறை கூறினார்.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையையும், சமூக நலத்திட்டங்களுக்கான செலவீனங்களையும் தான் பெரும் தீமைகளாக வர்ணித்தார். அமெரிக்காவுடனான உறவு, மானிய வெட்டு ஆகியவற்றைத் தான் மாற்றுத்தீர்வாக முன்வைத்தார். காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக போரிடுவதாக தோற்றத்தில் காட்டிக்கொண்டு, உண்மையில் மக்களுக்கு வழங்கப் படும் மானியத்துக்கு எதிராகத்தான் போரைத் தொடுத்தார்கள், தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக, பெருங்குழுமங்கள் உருவாக்கி வழங்கிய பரிசுதான் மோடி பிம்பமும், பிஜேபியின் பெரும் பான்மை ஆட்சியும்.

சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் மூலதனம் புழங்குகின்ற துறைகளைக் குறிவைத்து, மானிய வெட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சிறந்த நிர்வாகம் என்ற பெயரில், மானியங்களை பணமாக மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்துவது, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பது, பொதுத்துறையில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது, அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலை நிர்ணய உரிமையை சந்தையின் கைகளில் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்த மய்ய அரசு, பொது விநியோகத் திட்டத்தை (PDS) வெட்டிக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார (Minimum Support Price) விலையை நிர்ணயிப்பதையும், விளைபொருட்களைப் பெற்று மானிய விலையில் ரேசன் கடைகளில் விற்பதையும் கைவிடுவதற்கு, முனைப்பான பல காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்க சகாரா மக்களின் வாழ்நிலையை விட, மோசமான வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடி இந்திய மக்களின் வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதில் தில்லுமுல்லு செய்த மய்ய அரசும், பொருளாதார வல்லுனர்களும், இந்த எளிய மக்கள் சாப்பிடும் உணவைத் தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையானதாக சித்தரிக்கிறார்கள்.

மின்மயமாக்கப்படாத வீடுகளுக்கு மட்டுமே ரேஷன் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் எனச் சொல்லி, மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்திருக்கின்றது. மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல் போன்றவை களுக்கான மானியத்தை முழுமையாக நீக்கு வதற்கு படிப்படியான நடவடிக்கைகளை மேற் கொள்கிறார்கள்.

ஏறக்குறைய 1.5 லட்சம் கோடி அளவிலான மானியத்தை மக்களின் பயன்பாட்டிலுள்ள எரிபொருட்களிலிருந்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேதியியல் உரங்களிலிருந்தும் நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MNRGEA) கீழ் ஒதுக்கப்படும் ஊரக வேலை வாய்ப்புக்கான நிதி, பாதிக்குப் பாதியாக வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அதிக வேலை நாட்களைப் பயன்படுத்திய திரிபுரா மாநிலத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட 1406 கோடி ரூபாயிலிருந்து தற்போது வெறும் 652 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நாடு முழுவதும் வேலை செய்த நாட்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையான 9,000 கோடி ரூபாய் பல மாதங்களாகவே வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முற்றிலும் கைவிடுவதற்கான தொடக்கமாக, தற்போது 200 மாவட்டங்களுக்கு மட்டும் என மோடி அரசால் சுருக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதியில் பொது சொத்தை உருவாக்கிய, கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவிலான வருவாயைக் கொடுத்த இத்திட்டத்தை நிர்மூலமாக்குவதோடல்லாமல், வீணான செலவீனம் என்று மோசடிப் பிரச்சாரத்தை மோடி அரசு செய்து வருகின்றது. இதுபோன்றே உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தீவிரமாக பேசிவருகின்றனர்.

அருண்ஜேட்லி அறிவித்துள்ள மானிய வெட்டு நடவடிக்கையில், சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில் 7000 கோடி ரூபாய் வெட்டப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதே போன்று, ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியில் 25 சதவிகிதத்தை வெட்டிக்குறைப்பதற்கான முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்.

இவ்வாறு ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான மானியத்தை வெட்டிக்குறைப்பதும், அதானி போன்ற முதலாளிகளுக்கு அரசு வங்கிகளிலிருந்து 6000 கோடி கடன் அளிப்பதும், என்ன வகையான பொருளாதார நடவடிக்கை? இது யாருடைய நலனுக்கானது? பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருமுதலாளித்துவ குழுமங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மானியமும், வரிச்சலுகையும் அறிவிக்கப்படும் போது எழாத கூச்சல், ஏழை மக்களுக்கு எதிராக ஏன் எழுகின்றது? பல ஆயிரம் கோடி ரூபாய் வரிஏய்ப்பும்,வரிச்சலுகையும் பெற்று விட்டு, இறுதியில் ஆலை மூடல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்ற சூறையாடும் கும்பலுக்கு எதிராக குரல் எழுப்பப்படாதது ஏன்?

ration 350முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவது, வரவு - செலவு பற்றாக்குறையை ஒழுங்குபடுத்துவது, வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது போன்ற உலகமய ஒழுங்குக்கு ஏற்ப, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முயற்சிக்கிறார்கள்.

இரண்டாம் தலை முறை சீர்திருத்தம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாதிரியின் திசைவழியைத் தீர்மானிக்கிறது. 2011 வரை மன்மோகனிய பொருளாதாரத்தை வளர்ச்சி யாகப் புகழ்ந்த அதே கும்பல் தான், அதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, தற்போது மோடி மய சூறையாடலை வளர்ச்சி கொள்கையாக முன் வைக்கின்றது.

அடிப்படையில் வேறுபாடற்ற கடந்த 20 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியிலுள்ள குறைபாடுகளைப் பற்றி பேசாமல், வளர்ச்சி மாதிரியின் சிக்கல்களை ஆராயாமல், மக்கள் மீதான தங்குதடையற்ற பொருளாதாரத் தாக்குதலையே தீர்வாக முன்வைக்கிறார்கள். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி யாருக்கான வளர்ச்சி என்பது தான்.

அனைத்து மக்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார வளர்ச்சியா? சமூக வளத்தையும், மனிதவளத்தையும் உயர்த்துகின்ற வளர்ச்சியா? பொது சொத்தை சூறையாடும் ஊதிப்பெருத்த 500 பெருங்குழுமங்களின் வளர்ச்சியா? என்பது தான். ஏகபோக தனியார் ஆட்சியின் கீழ் நாட்டை ஒப்படைப்பது, அதற்குத் தேவையான ஏக பெருந்தேசியத்தையும், ஒற்றையாட்சி, கட்சி அரசியல் சூழலையும் உருவாக்குவதும்தான் மோடிமய மாற்று.

இது அனைத்தையும் வெட்டும், சுருக்கும். இறுதியில் மக்களையும் நாட்டையும் தான். இதற்கு எதிராக ஒரு நீடித்த போராட்டத்திற்குத் தயாராவோம். மக்களைப் பேணிப் பாதுகாக்கின்ற அனைத்தும் தழுவிய வளர்ச்சிக்கான மாற்று அரசியலைக் கட்டி எழுப்புவோம்.

Pin It

மின்சார விலையேற்றத்திற்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம்தான் காரணம் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதன் மூலம் தனது அரசுக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்று நழுவியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழல் முறையில் வாங்கிய உபகரணங்களால் ஏற்பட்ட நஷ்டம், மின்சார வாரியத்தில் தொடர்ந்து நடைபெறும் ஊழல் இவையெல்லாம் மின்சார வாரியத்தின் அதிகபட்ச நஷ்டத்திற்குக் காரணம் என்பதை மறைத்து விட்டார்.

ஆனால், முதலமைச்சர் சொல்வதில் ஓர் அடிப்படை உண்மை உள்ளது. தற்போது 20-47 இலட்சம் விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்திற்கான மானியம் ரூபாய் 300 கோடி, 1.6 கோடி வீட்டு இணைப்புகளுக்கு அளிக்கும் மானியம் 2,714 கோடி இலவச லைப் திட்டத்தின்படி 1.83 இலட்சம் பேருக்கு அளிக்கும் மின்சாரத் திற்கான தொகை 225 கோடி மற்றும் சிறு, குறு, தொழிலகங்களுக்கு அளிக்கும் மின்மானியம் ஆலை அனைத்தும் சேர்த்து அரசுக்கு 6,295 கோடி செல வேற்படுகிறது.

இந்த ஒவ்வொரு திட்டத்திலும் உண்மையான பயனாளிகள் பயனடைவதைவிட பெரும் கல்வி, தொழில் நிறுவனங்களே பயனடைகின்றன என்பது ஒருபுறமிருக்க இந்த மானியம் அனைத்தையும் மாநில அரசே ஏற்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். இதுதான் முக்கியமான பிரச்சனை. இதற்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசு 2003இல் கொண்டு வந்த அயோக்கியத்தனமான மின்சார சட்டம்- 2003. மின்சட்டத் திருத்தம் 2014 மசோதா. முற்றிலும் தனியாருக்கு இந்தத் துறையை ஒப்படைப்பது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த சட்டத்தை பா.ஜ.க ஆட்சி வாஜ்பேய் தலைமையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை காங்கிரஸ் வரவேற்றது.

இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. இந்த சட்டத்திற்குப் பிறகு மாநில மின்சார வாரியங்கள் படிப்படியாக மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இருந்து விலகிவிட வேண்டும்.

2. மாநில மின் வாரியங்கள் வீட்டு மற்றும் விவசாயிகளுக்குக் கொடுத்து வந்த மின் மானியத்தை நிறுத்த வேண்டும்.

3.அடுத்து, மிக முக்கியமாக இனிமேல் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity regularity Authority) ஏற்றுக்கொள்ளும்.

4. இந்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய முறையில் மின்சார விநியோகத்தை அமுலாக்கும்.

இந்த சட்டம் உருவான கதையே வேறொன்று. தனியார் முதலீடு செய்ய மிகவும் தயங்கிய துறையாக மின்சார துறையே இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் மின்சாரத்தின் சிறப்பான குணம். இதனை உற்பத்தி செய்கின்ற நேரத்திலேயே பயன்படுத்த வேண்டும் (இன்வெர்ட்டர் போன்றவைகளின் மின் சேமிப்பு மிகக் குறைவு) உதாரணமாக 1000 மெகா வோல்ட் ஓரிடத்தில் மின் உற்பத்தி ஆகும் போது 1000 மெகா வோல்ட்டையும் நுகர்வோர் பயன்படுத்த வேண்டும்.

அவற்றில் 200 மெகா வோல்ட்தான் பயன்படுத்தப்படுகிறது என்றால், 200 மெகா வோல்ட்டுக்கான பணம்தான் திரும்ப கிடைக்கும். மீதி மின்சாரம் எல்லாம் வீணாகி விடும். இதனால்தான் என்ரான் போன்ற பகாசுர ஊழல் நிறுவனங்கள்கூட இந்த துறையில் கால்பதிக்க முடியாமல் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஓடி விட்டன. இப்படி மிகவும் கஷ்டப்படும் முதலாளிகளுக்கு லாபமளிக்கவே இந்த புதிய சட்டத்தை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.

இதிலுள்ள ஒரு திட்டத்தைப் பார்த்தாலே இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை மத்திய ஒழுங்குமுறை ஆணையத்திடம் 24 மணி நேரத்திற்கு முன்பாக அறிவிக்க வேண்டும். இந்த வாரியம் அவர்கள் கேட்கும் மின்சாரத்தை வழங்கும். இப்படி அளிக்கும் மின்சாரத்தை அளிக்க தவறினாலோ அல்லது குறைவு ஏற்பட்டாலோ இந்த மின்சார மதிப்பில் இரண்டு மடங்கு தொகையை இந்த வாரியம் அந்த கம்பெனிக்கு வழங்கும். முதலாளிகளுக்கு சரி, நமது வீட்டிற்கு இது போன்று மின்சார வெட்டு ஏற்பட்டாலோ அல்லது இறக்கம் ஏற்பட்டாலோ ஒரு பைசாகூட இந்த வாரியம் வழங்காது. இது போன்ற சட்டம் உலகில் எங்குமே அமலான தில்லை. பா.ஜ.க வின் இந்த சட்டத்தை கழக் அரசுகள் உற்சாகமாக அமலாக்கிக் கொண்டு உள்ளது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். இதன் தொடர் விளைவுகளைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சட்டம் அமலானது வரை மின் உற்பத்தி பக்கமே தலைவைத்து கூட படுக்காத பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த துறையில் நுழைய ஆரம்பித்துள்ளன. உதாரணமாக, 1994இல் 3858 கோடி இலாபம் ஈட்டிய தமிழக மின்சார வாரியம் 2006 இல் ரூபாய் 4751 கோடி நஷ்டமடைய ஆரம்பித்தது. இப்போது முதலமைச்சர் இந்த மத்திய வாரியத்தால்தான் பிரச்சனை என்று கூறுகிறார். நாம் இந்த சட்டம் உருவானபோதே இது மாநில மின்சார வாரியத் தையும், பொது மக்களையும் கடுமையாக பாதிக்கும். அதே சமயத்தில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்கும் என்று கண்டித்தோம்.

அப்போது இரண்டு கழகங்களுமே போட்டி போட்டுக்கொண்டு இந்த சட்டத்தை அமலாக்கின. தற்போதும் கூட இந்த வாரியத்தில்தான் பிரச்சனை என்று கூறிவிட்டு நஷ்டம் அனைத்தையும் நமது தலைகளில் தூக்கி வைத்துவிட்டு வணங்க புறப்பட்டு சென்றுவிட்டார். காலம் மாறும். அதிகாரம் உழைப்போர் கரங்களில் மாறும். அப்போது இது போன்ற ஒவ்வொரு அநியாயங்களுக்கும் தீர்ப்பெழுதப்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Pin It