சொல்லின் அடுக்குகள்
தீப்பற்றி எரிகின்றன
புல்லின் நுனிகளும்
பேராயுதங்கள் ஆகின்றன
இன்னும் நிகழும்
அவமானங்களின் அதிகரிப்பில்
மண்ணில் மனிதர்களை சமமாய்
மதிக்க வேண்டும் என்றவரை
கல்லில் சிலையான பின்பும்
கயவர்கள் அவமதிப்பதை
எண்ணில் நெஞ்சம்
எரிமலையாய் வெடிக்குதடா!
விழிகளின் சிவப்பில்
சேகரித்த நெருப்பில்
மொழியினைத் தோய்த்து
தாளினை எரிக்கின்றோம்
உங்கள் உயிரினை நினைத்து!
புரட்சியாளர் சிலையல்ல
அதுவெங்கள் எழுச்சி அடையாளம்
திரட்சியுற்ற
சாதியழிப்புச் சமரின் படைக்கலம்!
விடுதலைப் போரிது எனில்
வெடிகிடங்கு எமதுடல்
படுகளம் வா உனக்கது
உயிரினின்று விடுபடல்
அதைவிடுத்து
சிலையிடம் என்னடா
சிறுசெயல் செய்திடல்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி