Jeyandrar and L.Ganesan
குற்றவாளிகளால்
தீர்மானிக்கப்படுகின்றது
நீதி தேவதையின் இருப்பிடம்

வாக்குமூலங்களில் தொனிக்கின்ற
வர்ணமூலங்களே
நீதியின் விதைகளென
இருக்கின்றன

மரணங்களின் துர்வாடைகளின் மீது
தெளிக்கப்பட்ட மந்திர
வாசனைகளில் மயக்கமுறுகிறது
ஜனநாயகம்

ஆசிர்வாத மேடையில் அமரும்
பயங்கரவாதிகள் சூழ
வலம் வருகிறது குற்றம்
கையில் தண்டத்தோடு

நீதியின் கைகளில்
விலங்கினைப் பூட்டிவிட
இரைச்சல் போடுகின்றது மதத்திமிர்

வெட்டவெளியெங்கும் தகிக்கிற
கோபத்தை கொட்டி வைக்கிறோம்
இன்னும் அழியாத உங்களின்
செருக்கின்மீது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.