விடியல் எப்பொழுது?
‘காணி’ நிலத்தை வச்சு
காலமெல்லாம் பாடுபட்டேன் - என்
கஷ்டமெல்லாம் தீரவில்லை
கடனுங் கூட அடையவில்லை…
உர விலையும் ஏறிப்போச்சு,
உழவு கூலி ஏறிப்போச்சு
உழுத கணக்கு பார்க்கையில,
உழக்கு கூட மிஞ்சலையே!....
வட்டிக்கு பணம் வாங்கி,
வயலுக்கு உரமும் போட்டேன்,
‘விதி’யும் சதி பன்ன
‘வெள்ளை நோய்’ பட்டதய்யா!......
‘கரண்டு’ பஞ்சமுன்னு,
கவருமெண்டு சொன்னதால,
ராத்திரி தூங்காம
நீர் பாய்ச்ச நான் போனேன்……
பாதையோரம் ‘பாம்பு’ ஒன்னு படுத்து உறங்குதய்யா!.......
வரப்போரம் தேள் ஒன்னு வழிமறிச்சு நிக்குதய்யா!......
ஐப்பசி மாசத்தில அடைமழையும் வந்ததால……
அடியோடு வெள்ளத்துல அத்தனையும் சாய்ந்ததய்யா……
நெல்லும் வெளஞ்சாச்சு,
அறுவடையும் முடிஞ்சாச்சு……
கவருமெண்டு கமிட்டியின்னு
‘கனவோடு’ கொண்டு போனேன்….
‘ஆயிரம்’ போகுமுன்னு அடிமனசு சொன்னதால,
ஆசையோடு நானிருந்தேன்……..
அடிமாட்டு விலை போல,
‘ஐந்நூறு’ சொன்னாங்க…..!
ஆத்திரமும் வருதய்யா……!
கண்ணில் நீர் பெருகுதய்யா….!
வாங்கின கடனுக்கு ‘வட்டி’ கட்ட வேணுமய்யா!
விதியேன்னு நினைச்சுக்கிட்டு,
வந்த விலை வித்துப்புட்டேன்…….
விளையவச்ச பொருளுக்கு – நாங்க
‘விலை’ சொல்லும் நாள் வருமா……….?
- கவிஞர். நா.’பாரதி’கிருஷ்ணன்.
‘காணி’ நிலத்தை வச்சு
காலமெல்லாம் பாடுபட்டேன் - என்
கஷ்டமெல்லாம் தீரவில்லை
கடனுங் கூட அடையவில்லை…
உர விலையும் ஏறிப்போச்சு,
உழவு கூலி ஏறிப்போச்சு
உழுத கணக்கு பார்க்கையில,
உழக்கு கூட மிஞ்சலையே!....
வட்டிக்கு பணம் வாங்கி,
வயலுக்கு உரமும் போட்டேன்,
‘விதி’யும் சதி பன்ன
‘வெள்ளை நோய்’ பட்டதய்யா!......
‘கரண்டு’ பஞ்சமுன்னு,
கவருமெண்டு சொன்னதால,
ராத்திரி தூங்காம
நீர் பாய்ச்ச நான் போனேன்……
பாதையோரம் ‘பாம்பு’ ஒன்னு படுத்து உறங்குதய்யா!.......
வரப்போரம் தேள் ஒன்னு வழிமறிச்சு நிக்குதய்யா!......
ஐப்பசி மாசத்தில அடைமழையும் வந்ததால……
அடியோடு வெள்ளத்துல அத்தனையும் சாய்ந்ததய்யா……
நெல்லும் வெளஞ்சாச்சு,
அறுவடையும் முடிஞ்சாச்சு……
கவருமெண்டு கமிட்டியின்னு
‘கனவோடு’ கொண்டு போனேன்….
‘ஆயிரம்’ போகுமுன்னு அடிமனசு சொன்னதால,
ஆசையோடு நானிருந்தேன்……..
அடிமாட்டு விலை போல,
‘ஐந்நூறு’ சொன்னாங்க…..!
ஆத்திரமும் வருதய்யா……!
கண்ணில் நீர் பெருகுதய்யா….!
வாங்கின கடனுக்கு ‘வட்டி’ கட்ட வேணுமய்யா!
விதியேன்னு நினைச்சுக்கிட்டு,
வந்த விலை வித்துப்புட்டேன்…….
விளையவச்ச பொருளுக்கு – நாங்க
‘விலை’ சொல்லும் நாள் வருமா……….?
- கவிஞர். நா.’பாரதி’கிருஷ்ணன்.