kaliarasi 400புற்றுநோய் நாட்டில் பரவலாகப் பேசக்கூடிய நோயாக உள்ளது. வாய்ப்புற்று, மார்பகப் புற்று, குடல் புற்று, கருப்பைப் புற்று என உடலின் பல உறுப்பு களில் இந்நோய் ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துகின்றனர். நோய் கண்ட சிலர் இறந்தும் போகிறார்கள்.

நாம் உண்ணும் உணவிலேயே இந்நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து இயற்கையிலேயே உள்ளது.

சப்போட்டாப் பழம் : இப்பழத்தில் சுண்ணாம்புச் சத்து, அயோடின் சத்து உள்ளது. இவை பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும். நரம்புகளுக்குப் பலத்தைக் கொடுக்கும். முதுகெலும்பு வலிமை உடையதாக மாறும். கழுத்து வலியைக் குணப்படுத்தும்.

கேரட் : இதிலுள்ள “பீட்டாகரோட்டின்” ரசாயனச் சத்து பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கக் கூடியது. இதில் பால் காரினால் என்ற இரசாயனச் சத்து இருப்ப தால் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றல் படைத்தது.

ஆப்பிள் : இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோயைத் தடுக்கலாம். இதில் ஆண்டி ஆக்ஸிடெண்டும், ப்ளவனாய்டும் நிறைந் துள்ளன. ஆப்பிளை வாங்கும் போது மெழுகு தடவாத ஆப்பிளாகப் பார்த்து வாங்க வேண்டும்.

ஆரஞ்சு : இதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புற்று நோய் வராது. “போலேட்” என்ற வைட்டமின் “பி” சத்தும் உள்ளது. ஆண்களுக்குக் கணையத்தில் புற்று நோய் வராமல் செய்யும்.

சிவப்புத் திராட்சை: கருஞ்சிவப்புத் திராட்சையில் “பலோப்ளேவனாய்டு” மற்றும் “எலோகிக் ஆசிட்” உள்ளன. இது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தக்காளி : இப்பழத்தில் “லைக்கோபன்” என்ற ரசாயனம் குடல் புற்றுநோயை விரட்டக் கூடிய ஆற்றல் பெற்றது. தக்காளியை உணவில் சேர்ப்பதுடன் பச்சை யாகவும் சாப்பிடலாம்.

தர்ப்பூசணிப் பழம் : இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொட்டாசியம், வைட்டமின் ‘சி’ உள்ளன. வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்; புற்றுநோயை எதிர்க்கும். இதில் லைக்கோபன் என்ற சக்தி வாய்ந்த நச்சு முறிவு மருந்து தன்மை உள்ளது.

கொண்டைக் கடலை, நிலக்கடலை : இவற்றி லுள்ள குவெர்சர்ட்டின், கேம்ப் பரோல் ஆகியவை புற்றுநோய்களைத் தலையெடுக்க விடாமல் செய்துவிடும். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவைகளை ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம்.

பூண்டு : இது குடல் புற்றுநோய்க்கு எதிரி. பூண்டில் இல்லாத மருத்துவக் குணங்கள் வேறு எதிலும் இல்லை. நாள்தோறும் மதிய உணவின் போது, பூண்டில் பல் ஒன்றை மட்டும் பச்சையாகச் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோசு, காலிஃபிளவர் : இவற்றில் நார்ச் சத்து நிறைந்துள்ளது. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை படைத்தவை. கடைகளில் விற்கும் காலிஃபிளவர் சில்லியை வாங்கிச் சாப்பிடவே கூடாது.

காளான் : காளானிலிருந்து வெளியாகும் ‘என்சைம்’ மூலம் ‘ஈஸ்ட்ரோஜன்’ உருவாகிறது. இது மார்பகப் புற்றுநோயைத் தடுத்துவிடும். காளான் தேவையற்ற கொழுப்புச் சத்தினைக் கரைத்துவிடும்.

பால் : பாலைத் தொடர்ந்து அருந்தி வந்தால் மார் பகப் புற்றுநோய் வரவே வராது. மேலும் புற்றுநோய் வந்தவர்களின் வாழ்நாளை நீட்டிக்கவும் செய்கிறது.

கீரைகள் : கீரைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் புற்றுநோய்க் காரணிகளை முற்றிலும் அழித்து விடுகிறது. எண்ணிலடங்கா மருத்துவக் குணங் களைக் கொண்டது கீரை வகைகளாகும்.

எனவே நாம் உணவில் நோய் எதிர்ப்புச் சக்தி யைத் தரும் மேலே சொன்னவற்றைச் சாப்பிட்டு நோய் வராமல் தடுத்திடுவோம்.

(சிந்தனையாளன் ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)

Pin It