காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீகாபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.

ஆன்டிஆக்ஸிடென்டுகளைப் பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றில் உடம்பு பாதிக்கப்படாமல் தாக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டு வீக்க நோயைக் குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். சமீபமாகவே, பழங்கள் மற்றும் காய்கறி ஜஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது தவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

 கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.