1.     தலைவலி:

       தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோசத் தாலும் தலைவலி வரும். ஆனால் மூளையில் இரத்தப்போக்கு, மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் தலைவலி ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2.     நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி:

       பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும். ஆனால் பல வேளைகளில் ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத் தான் ஹார்ட் அட்டாக் வரும். இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள். நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்கவேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும்போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆன்ஜைனாவாக (angina) இருக்கலாம்.

3.     கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி:

       அனேகமாக இது artheritis ஆக இருக்கலாம்.

4.     கடுமையான வயிற்று வலி:

       வயிற்றிலுள்ள குடல் வால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும். அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதுதான் appendicitis எனப்படுகிறது. ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆபரேசன் செய்து எடுத்து விடுவார்கள். Gallbladder மற்றும் Pancreas பாதிப்புகள் குடல்புண், குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்றுவலி வரலாம்.

5.     கெண்டைக்கால் வலி:

        கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும். சில வேளை இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

6.     கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி:

       கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலி ஏற்படும். இது சர்க்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.

7.     என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி:

       சிலருக்கு மனச்சோர்வு காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்லமுடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் “கழுத்து வலிக்கிறது, கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது” என்று போவார்கள். ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும், மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். அதோடு மூளையையும் பாதித்து விடும்.

       சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போதும் நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.